Category: தேவ செய்தி

“அச்சமுற்றாலும் அதே வேளையில் பெருமகிழ்ச்சியுற்றவர்களாய்”

நம்முடைய வாழ்க்கை பலவித உணர்வுகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் பல சமயங்களில் பலியாகிவிடுகிறது. அச்சமும் பெருமகிழ்ச்சி இரு வேறு துருவங்களாக இருந்து நம்மை ஆட்டிப்படைக்கின்றன. அதிலும் அச்சம் நம் வாழ்வின் பெரும் பகுதியைத் தன்னகத்தே ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறது. அச்சம் என்னும் இந்த அநியாய ஆக்கிரமிப்பு நம்மில் பலருடைய வாழ்வைச் சீரழிப்பதையும் பார்க்கிறோம். உயிர்த்த இயேசுவைக் கண்டவர்களும் விசுவசிப்பவர்களும் எதற்கும் அஞ்சத் தேவையில்லை. எல்லா எதிரிகளையும் எதிர்ப்புகளையும் வென்றவரில் அரவணைப்பில், ஆதரவில் வாழும் நாம், யாருக்கு எங்கே எதற்கு அஞ்சவேண்டும். “நற்செயல் செய்வோர் ஆள்வோருக்கு அஞ்ச வேண்டியதில்லை”( உரோ 13 :3) நன்மை செய்து, எவ்வகை அச்சுறுத்தலுக்கும் அஞ்சாமல் வாழ வலியுறுத்துகிறார் பேதுரு.(1 பேதுரு 3 :6) “யாருக்கும் நீங்கள் அஞ்சி நடுங்கவோ மனங்கலங்கவோ வேண்டாம்”.(1 பேதுரு 3 :14) அடுக்கி வரும் துன்பத்தைக்கண்டு சிலருக்குப் பயம். “துன்பத்தைப்பற்றி அஞ்சாதே”.(திருவெளி 2 :10) உடலில் ஒரு நோய் வந்தால் ஒப்பாரி வைப்போரும் உண்டு. “உடலை மட்டும் கொல்பவர்களுக்கு...

கடவுளின் அருளை நம்புவோம்

பொறுமையோடு காத்திருத்தல் என்பது கிறிஸ்தவ வாழ்வின் முக்கிய விழுமியங்களில் ஒன்று. இந்த சிந்தனை நமது செப வாழ்வுக்கும் பொருந்தும். சீடர்கள் அதைத்தான் தங்களின் வாழ்வில் செய்கிறார்கள். இயேசு இறந்தபிறகு அவர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவர்கள் இயேசுவின் உடனடி இறப்பை எதிர்பார்க்கவும் இல்லை. இயேசு பல வேளைகளில் அதைச்சொல்லியிருந்தாலும், இவ்வளவு சீக்கிரம் இயேசு இறப்பார் என்பது அவர்கள் எதிர்பாராத ஒன்று. இயேசுவின் இறப்பிலிருந்து வெளிவருவதற்கு முன்னதாக அவர்களைப் பயம் ஆட்டிப்படைக்கிறது. இயேசுவிற்கு பிறகு தங்களின் வாழ்வு என்ன ஆகும்? என்கிற கேள்வி மனதை குடைகிறது. போக்கிடம் இல்லாமல் ஒரே .இடத்தில் அவர்கள் கூடியிருக்கிறார்கள். ஒரேநாளில் தங்களின் வாழ்வு இப்படியாகிவிடும் என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு இயேசுவின் மீது அவர்கள் நம்பிக்கை வைத்திருந்தார்கள். ஆனாலும், இனிமேல் நடந்தவைகளைப்பற்றி சிந்தித்து பயன் இல்லை. இனி நடப்பது நல்லவையாக இருக்க வேண்டும். அப்போதுதான் இயேசு அவர்களுக்கு கற்றுக்கொடுத்த பாடங்கள் ஒன்றன்பின் ஒன்றாக...

இறையனுபவத்தின் பகிர்வு

தூய பவுலடியார் தனது திருமுகத்தில் விசுவாசத்தைப் பற்றி கூறுகிறபோது, நாம் எப்படி மற்றவரின் விசுவாசம் தளர்ச்சியடைகிறபோது தாங்கிப்பிடிக்க வேண்டும்? என்பதை அருமையாகச் சொல்வார். விசுவாசத்தளர்ச்சி என்பது அனைவருக்குமே வரக்கூடிய ஒன்று. அதற்கு நமது பலவீனம் நிச்சயம் முதன்மையான காரணம். அந்த விசுவாசத்தளர்ச்சி வருகிறபோது, மற்றவர்கள் அவரைத் தாங்கிப்பிடிக்க வேண்டும். அதுதான் உண்மையான கிறிஸ்தவ வாழ்வு. இந்த எம்மாவு சீடர்களின் இந்த உயிர்ப்பு அனுபவமும் இதனையொற்றி வரக்கூடிய நிகழ்ச்சி தான். எம்மாவு சீடர்கள் உயிர்த்த இயேசுவின் அனுபவத்தைப் பெற்ற பிறகு, தங்களோடு அந்த அனுபவத்தை வைத்திருக்கவில்லை. மாறாக, அதனை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்கிறார்கள். ஒருவருடைய அனுபவப்பகிர்வு மற்றவர்களுக்கு மிகப்பெரிய உந்துசக்தியாக இருக்கிறது. தொடக்க கால கிறிஸ்தவர்கள் மத்தியில் இத்தகைய பகிர்வு தான் அவர்களின் விசுவாசத்தை வளர்க்கிற ஆணிவேராக இருந்து வந்தது. அனைவருமே உயிர்த்த இயேசுவைப் பார்த்ததில்லை. ஆனால், உயிர்ப்பு அனுபவத்தைப் பெற்றார்கள். எப்படி? உயிர்த்த இயேசுவை நேரடியாகப் பார்த்த சீடர்களிடமிருந்து. நமது விசுவாசமும்...

நிதானமே வாழ்வில் பிரதானம்

மரியா இயேசுவின் மீது அதிக அன்பு வைத்திருந்தவர் என்பது நமக்கு நன்றாகத்தெரியும். எனவே தான், யாருக்கும் அஞ்சாமல் விடியற்காலையிலேயே தன்னந்தனி பெண்ணாக கல்லறைக்கு வந்திருக்கிறார். இப்போதும் கூட நாம் கல்லறைகளைப் பார்த்தால் பயப்படுவதுண்டு. அதிலும், சமீபத்தில் தான் இறந்த ஒருவரை அடக்கம் செய்திருக்கிறது என்றால், கேட்கவே வேண்டாம். அந்த கல்லறை அருகில் செல்லவே நாம் பயப்படுவோம். ஆனால், மரியா சாதாரண பெண்ணாக இருந்தாலும், கல்லறைக்குச் சென்றது, அவள் இயேசு மீது வைத்திருந்த ஆழ்ந்த அன்பைக் குறிக்கிறது. அவளது மனம், இயேசு இன்னும் இறக்கவில்லை என்றுதான் நினைத்துக்கொண்டிருக்கிறது. எத்தனையோ பேருக்கு வாழ்வு கொடுத்தவர், பல புதுமைகளை நிகழ்த்தியவர், நிச்சயம் இந்த சாவிலிருந்து எழுந்து வருவார் என்று கூட அவர் நினைத்திருக்கலாம். அதுவே, அவர் அந்த அதிகாலையில் கல்லறைக்கு வருவதற்கு காரணமாக இருந்திருக்கலாம். கல்லறையில் இயேசுவின் உடலைக் காணவில்லை என்றதும், அவளுக்கு நிச்சயம் கண்களில் அழுகை முட்டியிருக்கும். ஆனாலும், நிதானமாக இருக்கிறாள். அங்கே இரண்டு...

உயிர்த்த ஆண்டவர் தருகின்ற நற்செய்தி

உடலை ஓறுத்தோம் மனதை ஒறுத்தோம். பாவத்தை வெறுத்தோம், தூய வாழ்வை நாடினோம், நாற்பது நாளாக போராடி பெற்று கொண்ட தூய வாழ்வை, இனிமேலும் தொடராமல், இன்றோடு நிறுத்திவிடுவோமானால்… மீண்டும் பழைய பாவ வாழ்க்கையையே நாடுவோமானால்… நாம் மேற்கொண்ட தவ ஒறுத்தல்கள் பயன்ற்றதும் வீணானதுமாக மாறிவிடும் அபாயம் ஏற்பட்டு விடும். ஆகவே அன்பர்களே இந்த தவக்காலத்தில் நாம் மேற்கொண்ட பக்தி முயற்சிகள், ஒழுக்க முயற்ச்சிகள், பிறரண்பு பணிகள், தூய வாழ்வு வாழ்தல் ஆகிய கிறிஸ்தவ பண்புகள் நம் வாழ்நாளெல்லாம் தொடர வேண்டும். இதுவே இயேசு ஆண்டவரின் உயிர்ப்பு பெருநாள் நற்செய்தி. இந்த உயிர்த்த இயேசுவின் நற்செய்தியை நமது வாழ்வாக்கிடுவோம். அனைவருக்கும் இனிய உயிர்ப்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள். Wish you A HAPPY EASTER