Category: தேவ செய்தி

ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன்

திருப்பாடல் 23: 1 – 2, 2 – 3, 5 – 6 உலகத்தில் வாழ்கிற மனிதர்கள் அனைவருமே நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்று ஆவல் கொண்டிருக்கிறார்கள். அதனுடைய வெளிப்பாடு தான், மருத்துவத்துறை மற்றும் அறிவியலின் அசுர வளர்ச்சி. நாம் நீண்ட நாட்கள் மகிழ்ச்சியோடு வாழ்வதற்கான எளிய முறையை திருப்பாடல் ஆசிரியர் நமக்குத் தருகிறார். அதாவது, ஆண்டவர் நம்முடைய ஆயராக இருக்கிறபோது, நாம் நீண்டநாட்கள் நிச்சயம் மகிழ்ச்சியோடு, நிறைவோடு வாழ முடியும் என்பது, ஆசிரியரின் நம்பிக்கையாக இருக்கிறது. எப்படி நாம் நீண்ட நாட்கள் வாழ முடியும்? நமக்கு எதிரிகள் இருக்கமாட்டார்களா? நமக்கு நோய், நொடிகள் வராதா? நம்மை எதிர்க்கிறவர்கள் இருக்க மாட்டார்களா? எதிர்ப்புக்கள் அனைத்துமே இருக்கும். ஆனால், ஆண்டவர் நம் சார்பில் இருந்து செயலாற்றுவார். ஆண்டவரை நம் ஆயராக ஏற்றுக்கொள்கிறபோது, இறைவன் நம்மை நலன்களால் நிரப்புகிறார். நம்முடைய பாத்திரம் நிரம்பி வழிகிற அளவுக்கு, கடவுள் நமக்கு ஆசீர்வாதங்களைத் தருகிறார்....

உயிர்த்தெழ இரண்டு மட்டும் செய்வோம்…

லூக்கா 20:27-40 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். அனைவருக்கும் இந்த உலகை விட்டு செல்ல கூடாது, இளமைக் குறையாமல் பல ஆண்டுகள் இந்த உலகில் வாழ வேண்டும் என்ற ஆசை உண்டு. அந்த ஆசையை யாரும் பெற முடியாது. பிறந்த அனைவரும் இறந்தே ஆக வேண்டும். ஆனால் மிகவும் மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால் இறந்த அனைவரும் கிறிஸ்துவோடு ஒருநாள் உயிர்ப்போம் என்பதுதான். கிறிஸ்துவோடு உயிர்த்தெழ வேண்டுமென்றால் கிறிஸ்துவுக்கேற்ற இரண்டு காரியங்களை செய்ய வேண்டும் என சொல்கிறது இன்றைய நற்செய்தி வாசகம். கேட்போம். செய்வோம். உயிர்த்தெழுவோம். 1. முழுமைக்கு கொண்டு வா எந்த செயல் செய்தாலும் முழு அன்போடும் முழு மனத்தோடும் முழு ஆற்றலோடும் முழு அறிவோடும் செய்ய...

ஆலயத்தில் இனி இது வேண்டாம்

லூக்கா 19:45-48 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். அன்புமிக்கவர்களே! என் இல்லம் இறைவேண்டலின் வீடு என்பதை சுட்டிக்காட்டி நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து ஆலயத்தை சுத்தப்படுத்தியதை இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு தருகிறது. ஆலயம் கடவுள் உறையும் புனிதமான இடம். அந்த இடத்தை புனிதமாக வைக்க வேண்டும். புனிதமான இடத்தில் செல்லும் நாம் புனிதமானவர்களாக மாற வேண்டும் என்ற அழைப்பை தருவதோடு நாம் ஆலயத்தில் இனி செய்ய கூடாத இரண்டு செயல்களை பற்றியும் இன்றைய வழிபாடு பேசுகிறது. 1. பேசுதல் ஆயலயத்தில் வெளியே இருக்கும்போது பேச ஆசை இல்லாத பலர் ஆலயத்தின் உள்ளே வந்ததும் அருகிலிருப்பரிடம் பேச துடிக்கிறார்கள். பல நேரங்களில் மிகவும் சத்தமாக பேசும் நபர்களும்...

எருசலேம் போல எழும்பாதே!

லூக்கா 19:41-44 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். கடவுள் தேடி வருவதை மனிதர்கள் கண்டுகொள்வதில்லை. பல நேரங்களில் பலவிதமான அனுபவங்கள், மனிதர்கள் வழியாக கடவுள் நம்மை தேடி வருகிறார். பலவிதமான வேலைகளை செய்யும் நாம் கடவுள் தேடி வருவதை அவ்வளவு ஆர்வமாக கவனிப்பதில்லை. இன்றைய நற்செய்தி வாசகம் கடவுளின் குரலைக் கேட்காத எருசலேம் நகரைக் குறித்து நம் ஆண்டவர் இயேசு அழுததை பற்றி சொல்கிறது. ஏன் இயேசு அழுதார்? இயேசு அங்கு போதித்த போதனைகள் அனைத்தும் வெறுமையாய் போனது. ஆண்டவர் தேடி வந்ததை அவர்கள் உணரவில்லை. அமைதிக்கான, அன்பிற்கான வழியில் பயணிக்கவில்லை. ஆகவே இயேசு எருசலேமை நெருங்கி வந்ததும் அழுகிறார். நாம் எருசலேம் போல எழும்ப கூடாது....

பொறுப்புக்களில் பெருமகிழ்ச்சியடைவோம்!

லூக்கா 19:11-28 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். எல்லோருக்கும் கடவுள் பொறுப்பு கொடுத்திருக்கிறார். அந்த பொறுப்பை பெருமகிழ்வோடு கொண்டாடாடுபவர்கள் ஒன்றன்பின் ஒன்றாக சாதிப்பர். அந்த பொறுப்பை வோண்டா வெறுப்போடு பார்ப்பவர்கள் நிமிர்ந்து நிற்க முடியாமல் சரிந்து போவார்கள். நமக்கு கொடுக்கப்பட்டுள்ள பொறுப்பை பெருமகிழ்ச்சியோடு செய்து வாழ்க்கையை கொணடாடுவோம் வாருங்கள் என இனிய வரவேற்பு வழங்குகிறது இன்றைய நற்செய்தி வாசகம். பொறுப்பை வெறுப்போடு பார்க்காமல் மகிழ்வோடு பார்க்க வேண்டுமென்றால் இரண்டு செயல்கள் செய்வது மிகவும் சிறந்தது. 1. சிறப்பாக்குவேன் என்னிடம் கொடுக்கப்பட்ட எந்த பொறுப்பாக இருந்தாலும் சரி நான் அதை மிகவும் சிறப்பாக்க வேண்டும் என்ற எண்ணம் நம்மிடம் இருத்தல் வேண்டும். நேற்று செய்தததை விட இன்று இன்னும்...