Category: தேவ செய்தி

இன்று புதுமையானவற்றைக் காண்பாய்!

லூக்கா 5:17-26 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். கடவுளிடமிருந்து ஆசீர் வேண்டும் என நாம் ஏங்குவது உண்டு. அதற்காக தான் நாம் தினமும் ஆசைப்படுகிறோம். நாம் ஆசைப்படும் அந்த ஆசீரை இன்றைய நற்செயதி வாசகம் நமக்கு சொல்லித் தருகிறது. முடக்குவாதமுற்றவர் அந்த ஆசீரைப் பெற்றுக்கொண்டார். நாமும் பெற வேண்டுமெனில் இரண்டு வழிகள் அதற்கு உண்டு. 1. பாவமன்னிப்பு நாம் ஒவ்வொரு நாளும் கடவுளிமிருந்து ஆசீரை பெற வேண்டுமெனில் பாவமன்னிப்பு என்பது அவசியமானது. இந்த பாவமன்னிப்பை நாம் அனுதினமும் திருப்பலியல் கலந்துக்கொண்டு பெற்றுக்கொள்ளலாம். நம் பாவத்தை மனதுருகி அறிக்கையிடலாம். பாவத்திலிருந்து மன்னிப்பு பெற்றோமெனில் கடவுளின் ஆசீர் மிக எளிதாக நமக்குள் பாய்ந்து வர முடியும். பாவத்திலிருந்து வெளியே வந்த...

ஆண்டவராம் இறைவன் உரைப்பதைக் கேட்பேன்

திருப்பாடல் 85: 8அஆ – 9, 10 – 11, 12 – 13 இன்றைக்கு எத்தனை பேர் இறைவன் பேசுவதைக் கேட்கிறோம்? இது மிகப்பெரிய கேள்விக்குறி. இன்றைக்கு நாம் ஒவ்வொருவருமே நம்முடைய குரலை இறைவன் கேட்க வேண்டும் என்று விரும்புகிறோம். நம்முடைய வாழ்வில் நாம் சந்திக்கிற சிக்கல்கள், சவால்கள், துன்பங்கள் ஆகியவற்றை இறைவன் கேட்க வேண்டும், நம்முடைய குறைகளுக்கு பதில்மொழி தர வேண்டும் என்று மன்றாடுகிறோம். இறைவன் பேசுவதை கேட்பதற்கு முயற்சி செய்வதும் கிடையாது. அதில் நமக்கு ஆர்வமும் கிடையாது. வாழ்க்கையில் துன்பங்கள் வருகிறபோது, நாம் கடவுளிடம் வருகிறோம். நம்முடைய எண்ணங்களை முறையிடுகிறோம். ஆனால், இந்த துன்பங்கள் நம்மை நெருங்காமல் இருப்பதற்கு, நாம் முயற்சி செய்வதே கிடையாது. அதனை ஒரு பொருட்டாக எண்ணுவதும் கிடையாது. நாம் பேசுவதைத்தான் கடவுள் கேட்க வேண்டும் என்று விடாப்பிடியாக இருக்கிறோம். இன்றைக்கு யாரெல்லாம், கடவுளுடைய குரலுக்கு செவிகொடுத்தார்களோ, அவர்களைத்தான் நாம் புனிதர்கள் என்று போற்றுகிறோம்....

ஆண்டவருக்காகக் காத்திருப்போர் நற்பேறு பெற்றோர்

திருப்பாடல் 147: 1 – 2, 3 – 4, 5 – 6 காத்திருத்தல் என்பது சுகமான அனுபவம். அது சுமையான அனுபவமாகவும் இருக்கலாம். ஒரு மாணவர் தேர்விற்காக தயாரித்துக்கொண்டிருக்கிறார். தன்னை முழுவதுமாக தயாரித்திருக்கிறார். அந்த மாணவருக்கு தேர்வு எப்போது வரும்? தான் தேர்வில் எப்போது கலந்துகொண்டு, என்னுடைய திறமையைக் காட்டுவேன் என்று நம்பிக்கையோடு காத்திருப்பார். அதேவேளையில், பேருந்துக்காக காத்திருக்கிற மனிதர், ஒரு மணி நேரம் ஆகியும் பேருந்து வரவில்லை என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு ஏதாவது அவசர வேலை இருந்தால், அவரது மனம் பதைபதைத்துக்கொண்டே இருக்கும். ஆக, காத்திருத்தல் சுகமாகவும், சுமையாகவும் இருக்கிறது. ஆண்டவருக்காகக் காத்திருப்பது இது போன்ற அனுபவம் தான். ஆண்டவர் என்னுடைய வாழ்க்கையில் செயலாற்றுவார் என்று காத்திருக்கிறோம். ஆனால், நாம் எதிர்பார்த்தது நடக்கவில்லை. மீண்டும் இறைவனை நம்புகிறோம். அப்போதும் அது நடக்கவில்லை. பெரும்பாலான மனிதர்கள் இந்த தருணத்தில், நம்பிக்கை இழந்துவிடுகிறார்கள். அவர்களுக்கு காத்திருத்தல் சுமையாகிவிடுகிறது. ஆனால், என்ன...

நடந்ததை சொல்லு…

மத்தேயு 9:27-31 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நம்பிய அனைவருக்கும் அதிசயம் நடக்கிறது. அதைத்தான் இன்றைய நற்செய்தி வாசகம் எடுத்துரைக்கிறது. பார்வையற்ற இருவர் நம்பியதால் அவர்களுக்கு ஆச்சரியம் நடக்கிறது. கண்கள் மிக அற்புதமாய் திறக்கின்றன. அதிசயம் நடந்த பிறகு அவர்கள் செய்தது மிகவும் கவனிக்கத்தக்கது. ஆண்டவர் இயேசு நடந்ததை வெளியே சென்று அறிவிக்க வேண்டாம் என்று சொன்னாலும் அவர்கள் அதையெல்லாம் தாண்டி நாடெங்கும் அவரைப் பற்றிய செய்தியை பரப்புகிறார்கள். அன்புமிக்கவர்களே! நாமும் பார்வையற்ற இருவரை பின்பற்ற அழைக்கப்படுகிறோம். நாம் ஆண்டவரிடம் இருந்து அதிசயம், புதுமைகளைப் பெற்ற பிறகு அவர்களைப் போன்று ஆண்டவரின் வல்லமையை அறிவிக்க வேண்டும். எப்படி அறிவிக்கலாம்? இரண்டு முறைகளில் அதை...

தூய சவேரியார் திருவிழா

வந்தார்! வென்றார்! மத்தேயு 8:5-11 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் தூய சவேரியார் திருவிழா திருப்பலிக்கு தித்திப்போடு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். உலகம் போற்றும் நமது இந்தியத் தாய் திருநாட்டில், கிறிஸ்தவ மதம் வளரவும் தழைக்கவும் வித்திட்ட பல மேலை நாட்டினர்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர், புனிதர் பிரான்சிஸ் சவேரியார். இவர் 1506ஆம் ஆண்டு, ஏப்ரல் 7ஆம் நாள், ஸ்பெயின் நாட்டிலுள்ள புகழ்மிக்க சவேரியார் அரண்மனையில் பிறந்தார். யுவான் தெயாசு- டோனா மரியா என்ற தம்பதியின் ஐந்தாவது குழந்தையாகப் பிறந்தார். இவரது தந்தை யுவான் தெயாசு, அந்நாட்டின் அரசவையில் நிதியமைச்சராகப் பணியாற்றி வந்தார்; சட்டவியலில் முனைவர் பட்டம் பெற்றவர். தன்னுடைய ஒன்பதாம் வயதில் தந்தையை இழந்த இவர் தாயின் பராமரிப்பிலேயே அதே அரண்மனையில்...