† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light

நீங்கள் சுறுசுறுப்பானவரா? அல்லது தளர்வுற்றவரா?

மத்தேயு 11:28-30 நீங்கள் சுறுசுறுப்பானவரா? அல்லது தளர்வுற்றவரா? என்ற கேள்வியோடு நாம் கருத்துக்கணிப்பு நடத்தினால் வாழ்க்கையில் பல மனிதர்கள் சுறுசுறுப்பாக செயல்படுவதில்லை. மாறாக தளர்வுற்றவர்கள் தான் என்பது தெரிய வரும். வாடிய முகத்தோடு அவா்கள் நடப்பதைப் பார்க்கின்றபோது அவர்களிடத்தில் ஆற்றல் தீர்ந்துபோய் விட்டது என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. உங்களிடத்திலே சுறுசுறுப்பாக செயல்படுவதற்கான ஆற்றல் தீர்ந்துவிட்டது என்றால் கவலை வேண்டாம். அந்த ஆற்றலைப் பற்றித்தான் இன்றைய நற்செய்தி வாசகம் பேசுகிறது. அந்த ஆற்றலை தருபவர் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து. பெருஞ்சுமைகளை இறக்கி வையுங்கள். கவலைகளை கொட்டுங்கள். சோகங்களை சொல்லுங்கள். உங்கள் துயரத்தின் புலம்பலை பற்றி பேசுங்கள். கவலை, சோகம், துயரம், பிரச்சினை, நோய் இவைகள் தானே உங்கள் ஆற்றலை உங்களிடமிருந்து பிடுங்கியது. அதனால்தானே நீங்கள் தளர்வுற்றுப் போனீர்கள்? அதைப்பற்றி கவலைப்படாதீர்ள். இப்போது எல்லாவற்றுக்கும் இளைப்பாறுதல் பெறுங்கள். அனைத்து ஆற்றலையும் அள்ளுங்கள். நிறைய அள்ளுங்கள். ஆண்டவரே அந்த ஆற்றல். மனதில் கேட்க… •...

MEET MY FATHER

“No one knows the Son but the Father, and no one knows the Father but the Son – and anyone to whom the Son wishes to reveal Him.” –Matthew 11:27 Jesus came to reveal the Father to all people on this earth. He even taught us to pray first of all, “Father” (Mt 6:9). Jesus reveals the Father to anyone He wishes (Mt 11:27). Is there anyone to whom Jesus does not wish to reveal the Father? Since Jesus wants to reveal the Father to us, it obviously takes a hard heart and a closed mind to shut out Jesus’...

உங்களிடத்தில் கடவுளைப் பார்க்கலாமா?

மத்தேயு 11:25-27 கடவுளின் சாயலிலும் உருவிலும் படைக்கப்பட்ட மனிதர்கள் கடவுள் போன்று செயல்படுவதில்லை. அவர்களுக்குள்ளே இருக்கும் கடவுளை வெளியே பிரதிபலிப்பதில்லை. மனிதர்கள் தங்களுக்குள்ளே கொண்டிருக்கும் அன்பில்லாமை, அடக்கமின்மை, அதிகாரமின்மை இவையனைத்தும் கடவுளின் பண்புகளை மறைக்கின்றன. ஆகவே மனிதன் கடவுளை வெளியே கொண்டு வர முடியவில்லை. கடவுளை வெளியே கொண்டு வர என்ன செய்ய வேண்டும் என்பதற்கான நம்முடைய ஆர்வமான கேள்விக்கு விடை கொடுக்கிறது நற்செய்தி வாசகம். ஞானிகள் கடவுளை வெளியே கொண்டு வர முடியாது. அறிஞர்கள் கடவுளை வெளியே கொண்டு வர முடியாது. அவர்களுக்கு கடவுளுடைய வெளிப்படுத்துதல் இல்லை. காரணம் தடைக்கற்காளாக அவர்களுடைய ஆணவம், அதிகாரம், அகங்காரம் இருக்கின்றன. கடவுள் எளிய உள்ளம் கொண்டவர்கள் உள்ளத்தில் குடிகொள்கிறார். குழந்தை உள்ளம் கொண்டவர்களோடு தங்குகிறார். அவர்கள்தான் கடவுளை வெளியே கொண்டு வருகிறார்கள். காரணம் அவர்கள் அவசியமற்றவைகளிலே சிக்குவதில்லை. ஆகவே அவர்கள் அழகாக ஆண்டவரை வெளியே கொண்டு வருகிறார்கள். மனதில் கேட்க… • நான்...

COMPARATIVELY SPEAKING

“I assure you, it will go easier for Sodom than for you on the day of judgment.” –Matthew 11:24 Yesterday, in the first Eucharistic reading, the Lord called us “princes of Sodom” and “people of Gomorrah” (Is 1:10). Today, He says we are worse than Sodom, for if the miracles we have received would have taken place in Sodom, it would have repented (Mt 11:23-24). The Lord is likely telling us that we have not yet repented according to His standards. We naturally tend to compare ourselves with others to make ourselves feel better or even superior. So, when the...

தீமைக்கு விடைகொடு … கடவுளின் துயருக்கு பதில்கொடு

மத்தேயு 11:20-24 பழைய ஏற்பாட்டில் கடவுள் கவலையடைந்தார். மனம் வருந்தினார். அவரது உள்ளம் துயரமடைந்தது. இதை தொடக்கநூல் 6:5-6 வரையுள்ள இறைவார்த்தைகளில் வாசிக்கிறோம், “மண்ணுலகில் மனிதர் செய்யும் தீமை பெருகுவதையும் அவர்களின் இதயச் சிந்தனைகளெல்லாம் நாள் முழுவதும் தீமையையே உருவாக்குவதையும் ஆண்டவர் கண்டார். மண்ணுலகில் மனிதரை உருவாக்கியதற்காக ஆண்டவர் மனம் வருந்தினார். அவரது உள்ளம் துயரமடைந்தது”. புதிய ஏற்பாட்டில் குறிப்பாக இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து கவலையடைகிறார். மனம் வருந்துகிறார். உள்ளம் உடைந்துப்போகிறார். கொராசின், பெத்சாய்தா மற்றும் கப்பர்நாகும் நகர்களில் தீமை பெருகியதையும் அவர்களின் இதயச் சிந்தனைகளில் நாள் முழுவதும் தீமை உருவானதையும் அவர் கண்ணாரக் கண்டதால் கலங்கி நிற்கிறார். அவர்கள் வாழ்வில் முன்னேற்றம் காண்பார்கள் என்பதற்காக ஆண்டவர் இயேசு கிறிஸ்து பல வல்ல செயல்களை அந்நகர்களில் செய்தார். அவையெல்லாம் பலனில்லாமல் போயிற்று. அவருடைய எதிர்பார்ப்பு எல்லாம் எரிந்து சாம்பலானது. நம் ஒவ்வொருவரையும் வரலாறு படைக்க வேண்டும் என்ற...