† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light

அடையாளம் இடப்பட்டோர் தப்பிப் பிழைப்பர் !

எருசலேம் நகருக்கும், கோவிலுக்கும் நிகழவிருக்கும் அழிவைப் பற்றி எரேமியா இறைவாக்கினர் போலவே, எசேக்கியேல் இறைவாக்கினரும் முன் அறிவித்தார். அந்நகரில் நிகழ்ந்து வந்த சிலை வழிபாடுகள் மற்றும் பாவச் செயல்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும் என்று எச்சரித்தார். ஆனாலும், எந்த மாற்றமும் நிகழாததால், எருசலேமின் அழிவைத் தடுக்க முடியவில்லை. ஆயினும், தங்கள் வழிகளை மாற்றிக்கொண்ட ஒருசிலராவது காப்பாற்றப்பட வேண்டும் என்பது இறைவனின் திருவுளம். எனவே, அவர்களின் நெற்றியில் அடையாளம் இடப்பட்டது. இவர்கள் எருசலேம் நகரில் செய்யப்படும் “எல்லா அருவருக்கத்தக்க செயல்களுக்காகவும் பெருமூச்சு விட்டுப் புலம்பும்” மனிதர்கள் என்று இன்றைய வாசகம் குறிப்பிடுகிறது. நமது நிலை என்ன? நம்மைச் சுற்றி நிகழும் தீய செயல்பாடுகள் குறித்துக் கவலை கொண்டு புலம்புகிறோமா? அவற்றுக்கு எதிராகக் குரல் எழுப்புகிறோமா? இத்தகைய அழைப்பைத் தருகிறது இன்றைய வாசகம். இல்லாவிட்டால், நாமும் இறைமாட்சியின் சாயலை இழந்துவிடுவோம் என்று எச்சரிப்பும் தருகிறது இன்றைய வாசகம். மன்றாடுவோம்: புகழ்ச்சியின் நடுவில் வாழும் மாட்சிமிகு இறைவா,...

CHILDISH OR CHILD-LIKE?

“Jesus said, ‘Let the children come to Me. Do not hinder them. The kingdom of God belongs to such as these.’ ” –Matthew 19:14 When Jesus sees children, He thinks of His Father’s kingdom, for “the kingdom of God belongs” to those who are like children. Jesus teaches that to be like children of the kingdom means to: choose to become lowly (Mt 18:4), choose poverty in spirit, that is, voluntary poverty (Mt 5:3). When we as disciples of Jesus imitate Him by living below our means, the kingdom of God is ours (Mt 5:3), live so faithfully and openly...

இறைவனை நம்புவோம், இறையருள் பெறுவோம்

இயேசுகிறிஸ்துவின் போதனைகள் மக்கள் மத்தியில் பரவலாக பேசப்படுவதற்கு முக்கிய காரணம், அவரது எளிமையான கருத்துக்கள். மிகப்பெரிய தத்துவத்தையும் எளிய நடையில் பாமர மக்களையும் புரிந்துகொள்ள வைக்கக்கூடிய ஞானம் தான் மற்றவர்களை அவரை நோக்கி திரும்பிப்பார்க்க வைத்தது. ஒரு குழந்தையை வைத்து மிகப்பெரிய வாழ்வியல் தத்துவத்தை தன் சீடர்களுக்கு அவர் தருகிறார். இறையரசுக்கு தகுதி பெறுவதற்கு குழந்தையைப் போல் மாற வேண்டும். அதாவது குழந்தைகளுக்குரிய குணநலன்களைப் பெற்றிருக்க வேண்டும் என்பதுதான். குழந்தைகளிடத்திலே நாம் பார்க்கும் முக்கிய பண்பு மறத்தலும், மன்னித்தலும். மனதிலே வைராக்கியத்தோடு வைத்திராமல் மற்றவர் செய்த தவறை சிறிதுநேரத்தில் மறந்து மீண்டும் அன்போடும், பாசத்;தோடும் பழகுவது. மற்றொரு பண்பு: தன்னை கர்வம் கொள்ளாமல், மற்றவர்கள் மீது குறிப்பாக தன்னுடைய பெற்றோரைச்சார்ந்து வாழ்வது. இறைவனுடைய அரசிற்கு தகுதி பெற வேண்டுமென்றால், நமது வைராக்கியத்தை, கர்வத்தை தூக்கி எறிந்துவிட்டு, தாழ்ச்சியுள்ளவர்களாக கடவுளைச் சார்ந்து இருக்கக்கூடியவர்களாக வாழ வேண்டும். இறைவன் முன்னிலையில் பால்மணம் மாறாத பச்சிளங்குழந்தைகளாக...

A.D. OR B.C.?

“I now say to you…” –Matthew 19:9 Before Jesus’ Incarnation, divorce was considered necessary. Laws regulating divorce even appear in the Bible (see Dt 24:1-4). Before Jesus saved us, polygamy, not monogamy, was widely practiced. Before Jesus, single persons were usually considered cursed. Before Jesus, our understanding of love, marriage, sexual relations, the dignity of the human person, and vocations was very incomplete and perverted. After we accept Jesus as Lord of our lives, we have the grace to develop great marriages of total self-giving. This usually results in large, happy, and beautiful families. In Christ, the divorced do not...

நேர்மறையான பார்வை

மனித வாழ்க்கையில் நாம் சந்திக்கும் துயரங்களையும், கவலைகளையும் தான், பெரிதாக நினைத்துக்கொண்டிருக்கிறோமே தவிர, அது நமக்கு தரும் பல இலாபங்களை, வாழ்க்கைப் படிப்பினைகளை நாம் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை. இது எதிர்மறையாக சிந்திக்கக்கூடிய சிந்தனையின் விளைவு. நடப்பது கெட்டதாக இருந்தாலும், அதை நோ்மறையாக சிந்தித்தால், நாம் எல்லாச் சூழ்நிலைகளிலும் மகிழ்ச்சியாக வாழலாம். அது கடினமாக இருந்தாலும், அப்படி வாழ நாம் எடுக்கக்கூடிய முயற்சி, நமக்கு சிறந்த பயிற்சியாக அமையும். இன்றைய நற்செய்தி வாசகத்தில் சீடர்கள் இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டு அதிர்ச்சியடைகிறார்கள். இது எதிர்மறையாக சிந்தித்தன் விளைவு. இயேசு தான் பாடுகள் படப்போவதை அறிவிக்கிறார். நிச்சயம் இது சீடர்களுக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்திருக்கும். ஆனால், அவர்கள் மகிழ்ச்சி கொள்வதற்கும் செய்தி இருக்கிறது. இயேசு தான் உயிர்த்தெழப்போவதையும் அறிவிக்கிறார். மொத்தத்தில் இயேசுவின் வார்த்தைகளை நேர்மறையாக எடுத்திருந்தால், அது நமக்கு வாழ்வு தரக்கூடிய, ஆனந்தத்தைக் கொடுக்கக்கூடிய செய்தி. அதை எதிர்மறையாகப் பார்த்தால், கவலை தரக்கூடிய செய்தி. சீடர்கள்...