† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light

பணிப்பொறுப்பு

பெரிய ஏரோது தனது காலத்தில், அனைவரையும் சந்தேகிக்கிறவனாகவே வாழ்ந்து இறந்தான். தனது மனைவியரை மட்டுமல்ல, தனது பிள்ளைகளையும் அவன் கொன்றொழித்தான். தனது அரசிற்கு எதிராக யார் தடையாக இருப்பதாகத்தோன்றினாலும், அவர்களை கொலை செய்தான். பெரிய ஏரோதிற்குப்பிறகு அவன் ஆட்சி செய்த பகுதிகள் மூன்று நிலப்பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, அவனுடைய மூன்று பிள்ளைகளுக்குக் கொடுக்கப்பட்டது. அவர்களில் ஒருவன் தான் குறுநில மன்னன் என்று நற்செய்தியாளரால் சொல்லப்படுகிற ஏரோது அரசன். இவன் ஏரோது அந்திபாஸ் என்று அழைக்கப்பட்டான். கலிலேயா மற்றும் பெரியா பகுதிகளை இவன் ஆட்சி செய்து வந்தான். இயேசு கலிலேயர் என்பதால், இயேசுவினுடைய அரசரும் இந்த ஏரோதுதான். எனவே தான், பிலாத்து முதலில் இயேசுவை, முதலில் இவனிடம் அனுப்பினான். ”இன்றும் நாளையும் பேய்களை ஓட்டுவேன். பிணிகளைப்போக்குவேன். மூன்றாம் நாளில் என் பணி நிறைவுறும் என நீங்கள் போய் அந்த நரியிடம் கூறுங்கள்” என்று லூக்கா 13: 32ல் சொல்வது இவனைப்பற்றித்தான். ஏனெனில், இந்த ஏரோது...

A TRAITOR CONVERTS!

“Jesus saw a man named Matthew at his post where taxes were collected.” –Matthew 9:9 Mass Readings: September 21 First: Ephesians 4:1-7,11-13; Resp: Psalm 19:2-5; Gospel: Matthew 9:9-13 Matthew was a tax collector. To a Jew, this was one of the most despicable jobs possible (see Mt 18:17). Tax collectors usually perpetrated violence and injustice against the poor. Worse than that, however, they sold out to the enemy, the Romans. Moreover, their association with the Romans made them unclean. Thus, tax collectors gave up their participation in the Jewish community and its worship. Because of all this, a good Jew...

இழப்பும், ஆதாயமும்

ஏரோது அந்திபாஸ் அரசருடைய எல்கையில் தான் கப்பர்நாகும் இருந்தது. மத்தேயு ஏரோதுவின் அரச அலுவலராய் இருந்தார். அவர் நேரடியாக உரோமை அரசின் அலுவலராய் இல்லை. கப்பா்நாகும் அமைந்திருந்த இடம், பல இடங்களிலிருந்து வந்த சாலைகள், சேரும் இடமாய் அமைந்திருந்தது. எனவே, ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்ல வேண்டுமென்றால், கட்டாயம் கப்பார்நாகும் வந்துதான் செல்ல வேண்டும். அப்படி பொருட்களை விற்க வரும்போதும், தொழிலின் பொருட்டு பொருட்களை ஏற்றிவரும்போதும், சுங்க வரி கட்ட வேண்டும். அந்தப் பணியைத்தான் மத்தேயு செய்து வந்தார். மத்தேயு இதற்கு முன் இயேசுவை சந்தித்து இருக்கவில்லை. ஆனால், நிச்சயம் இயேசுவைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்க வேண்டும். அதிகாரத்தோடு தீய ஆவிகளையும் அடக்குவதற்கு வல்லமை பெற்றிருக்கிற இயேசுவின் புகழ் நிச்சயம் அவர் அறிந்த ஒன்றாகத்தான் இருந்திருக்க வேண்டும். இதுவரை பாவிகளையும், வரிவசூலிக்கிறவர்களையும் ஒதுக்கிவந்த போதகர்கள் மத்தியில், இயேசுவின் போதனை மத்தேயுவிற்கு புதிதான ஒன்றாக அமைந்திருக்க வேண்டும். எனவே தான், அவர் இயேசுவைப் பார்ப்பதற்கு...

PRIVILEGED POSITION

“No one lights a lamp and puts it under a bushel basket or under a bed; he puts it on a lampstand so that whoever comes in can see it.” –Luke 8:16 Mass Readings: September 19 First: Proverbs 3:27-34;Resp: Psalm 15:2-5;Gospel: Luke 8:16-18; Jesus commanded us to put His light on the lampstand and proclaim the gospel to the whole world (Lk 8:16). He also said His Word would get out to people even if we failed to proclaim it. “There is nothing hidden that will not be exposed, nothing concealed that will not be known and brought to light”...

இருப்பதிலிருந்து கொடுத்தல்

இந்த உலகத்தில் பல மனிதர்கள், மக்களுக்கு குறிப்பாக ஏழை, எளிய மக்களுக்கு பல உதவிகளைச் செய்கிறார்கள். செய்யப்படுகிற உதவிகள் அனைத்துமே நல்ல மனதோடு செய்யப்படுகிறதா? என்றால், அது விவாதத்திற்கு உட்பட்டது. காரணம், இன்றைய அரசியல் உலகில் செய்யப்படுகிற உதவிகள் அனைத்துமே, இலாப நோக்கத்திற்காக மட்டுமே செய்யப்படுவதாக இருக்கிறது. உதவிகள் அனைத்துமே இரக்கச்செயலாக ஏற்கப்படுமா? என்றால், இல்லை என்பதைத்தான் இன்றைய நற்செய்தி வாசகம் பதிலாகத் தருகிறது. நாம் உதவிகள் செய்வது சிறந்தது. ஆனால், எத்தகைய மனநிலையோடு செய்கிறோம்? என்பது, அதைவிட முதன்மையானது. ஆராயப்பட வேண்டியது. நாம் எவ்வளவு கொடுக்கிறோம்? என்பது முக்கியமல்ல. எப்படி கொடுக்கிறோம்? எந்த மனநிலையோடு கொடுக்கிறோம் என்பதுதான் முக்கியமானது. அதுதான் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படக்கூடியதாக இருக்கிறது. ஒருவேளை, இந்த உலகத்தில் இருக்கிற மக்களை நாம் ஏமாற்றிவிடலாம். அவர்களுக்குக் கொடுப்பதுபோல கொடுத்து, அவர்களிடமிருந்து அவர்கள் அறியாமல் நாம் பிடுங்கிவிடலாம். இன்றைக்கு பன்னாட்டு நிறுவனங்கள், மிகப்பெரிய நிறுவனங்கள் இந்த உத்தியைத்தான் கையாளுகின்றன. ஆனால், அதற்கான...