† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light

காணாமல் போன நாம் !

இறைவனைவிட்டுப் பிரிந்து காணாமல் போய்விடுகின்ற இஸ்ரயேல் மக்களையும், அவர்களின் வழிமரபினரான நம்மையும் இறைவன் மீண்டும், மீண்டும் தேடிவருகிறார் என்பதை இன்றைய ஞாயிறு வழிபாட்டின் வாசகங்கள் நினைவுபடுத்துகின்றன. இன்றைய முதல் வாசகத்தில் இஸ்ரயேல் மக்கள்மீது இறைவன் கோபம் கொண்டு, அவர்களை அழிக்கத் திட்டமிடுவதையும், மோசே அவர்களுக்காகப் பரிந்துபேசும்போது, இறைவன் தம் மனத்தை மாற்றிக்கொண்டு தம் மக்களுக்கு செய்யப்போவதாக அறிவித்த தீங்கைச் செய்யாது விட்டுவிட்டார் என்று வாசிக்கிறோம். இறைமக்களின் மனநிலை, இறைவனின் மனநிலை இரண்டையும் அருமையாகச் சித்தரிக்கும் வாசகம் இது. இறைமக்களின் உள்ளம் கடினமானது. நன்றி மறந்தது. இறைவன் செய்த வியத்தகு செயல்கள் அனைத்தையும் மறந்து, வேற்று தெய்வங்கள்பால் செல்வது. எனவேதான், இறைவன் கூறுகிறார்: “இம்மக்களை எனக்குத் தெரியும். வணங்காக் கழுத்துள்ள மக்கள் அவர்கள்â€?. இன்றைய நாள்களிலும் நாமும் வணங்காக் கழுத்துள்ளவர்களாக, இறைவனை மறந்து, உலக இன்பங்கள், உலகப் பொருள்கள், களியாட்டங்களில் ஆர்வம் கொண்டு, இறைவனை மறந்து, பிற ‘தெய்வங்களை’ நாடிச் செல்லும் இனமாக...

FOUNDERS’ DAY?

“He may be likened to the man who, in building a house, dug deeply and laid the foundation on a rock.” —Luke 6:48 What if a structural engineer advised you to have the foundation of your house checked just in case you may have a problem? You probably would have it checked if there was even the slightest chance of your house collapsing. Today, Jesus is suggesting that you check the foundation of your life. Are you founded on Jesus? (1 Cor 3:11) Have you lost your life for love of Jesus? (Lk 9:24) Are you, as a member of...

பகிர்ந்து வாழ்வோம்

”இருப்பதிலிருந்து தான், நாம் மற்றவர்களுக்குக் கொடுக்க முடியும்”. இதனை கிராமப்புறங்களில், ”சட்டியில் இருப்பதுதான் அகப்பையில் வரும்” என்று, நாட்டுப்புற வழக்கில் கூறுவார்கள். இன்றைய நற்செய்தியும், ”உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும்” என்று, இதனை அடியொற்றி சொல்கிறது. நாம் அனைவருமே மற்றவர்களுக்குக் கொடுப்பதற்காகப் பிறந்தவர்கள். இயற்கை அன்னையைப் பார்த்தால் அந்த உண்மை நமக்குத் தெரியவரும். அருவி, மரங்கள், செடிகள், கொடிகள் அனைத்துமே மற்றவருக்குக் கொடுப்பத்தில் நிறைவைப் பெறுகிறது. எந்த மரமும் அதன் கனியை, தானே உண்பதில்லை. பறவைகளும், விலங்குகளும் மனிதர்களும் பயன்பெறுவதற்காகவே அதைக் கொடுக்கிறது. மனிதர்களும் இயற்கை அன்னையின் பிள்ளைகள் தான். அவர்களும் அன்னையைப்போல தங்களின் வாழ்வில் மற்றவர்களுக்குக் கொடுத்து, அதில் நிறைவைக்காண அழைக்கப்படுகிறார்கள். எனவே, நாமும் மற்றவர்களுக்குக் கொடுப்பதற்காகவே, கொடுத்து வாழ்வதற்காகவே அழைக்கப்படுகிறோம். இன்றை நற்செய்தியும் இதனைத்தான் வேறுவார்த்தைகளில் சொல்கிறது. நாம் கொடுப்பது முதன்மையான காரியம். நாம் கொடுப்பது நல்லதாக இருக்க வேண்டும். மற்றவர்களுக்குப் பயன்படுவதாக இருக்க வேண்டும். எத்தனையோ மரங்கள்...

EXISTING TO EVANGELIZE

“I made myself the slave of all so as to win over as many as possible.” —1 Corinthians 9:19 How much do you want people to give their lives to Christ? Would you be “the slave of all so as to win over as many as possible”? Would you make yourself “all things to all men in order to save at least some of them”? (1 Cor 9:22) Are you running the race and fighting the fight? (1 Cor 9:26; 2 Tm 4:7) Would you discipline and master your body (1 Cor 9:27) to make it an instrument of justice...

மற்றவர்களை மதித்து நடப்போம்

”உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையையே நீங்கள் பார்க்காமல் இருந்து கொண்டு, உங்கள் சகோதரர் அல்லது சகோதரியிடம் ”உன் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்கட்டுமா?” என்ற வார்த்தைகளைச் சொல்லும்போது, நிச்சயமாக அவர் புன்முறுவல் செய்திருக்க வேண்டும். ஏனென்றால், பழத்திலே ஊசி ஏற்றுவது போல, இயேசு புன்முறுவலோடு, ஒரு செய்தியை அங்கே சொல்கிறார். இயேசு சொல்ல வருகிற செய்தி, இந்த உலகத்தில் யாரும் எவரையும் குற்றப்படுத்திப் பேசுவதோ, தீர்ப்பிடுவதோ, குற்றம் கண்டுபிடிப்பதோ கூடாது. அதற்கு ஒருவரும் தகுதியானவர்கள் கிடையாது. அப்படியே குற்றப்படுத்த விரும்பினாலும், குற்றம் இல்லாதவர்கள் குறைகூறலாம் என்று சொல்கிறார். இந்த உலகத்தில் குற்றம் இல்லாதவர்கள் எவருமே கிடையாது. எனவே, யாரும் மற்றவரைத் தீர்ப்பிடுவதற்கு அருகதையற்றவர்கள் என்பதுதான் இயேசு சொல்கிற செய்தி. ஆனால், நாம் ஒவ்வொரு நிமிடமும் மற்றவர்களை நமது வார்த்தைகளால், செயல்பாடுகளால் காயப்படுத்துகிறோம். உண்மையிலே நாம் நேர்மையாளர்கள் என்றால், நிச்சயம் மற்றவர்களை நாம் குற்றப்படுத்த மாட்டோம். அவர்களை ஏற்றுக்கொண்டு தான் வாழ்வோம். நாம்...