† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light

வாழ்வு என்னும் கொடையைப் போற்றுவோம்

இழப்பீடு என்பது இழப்பிற்கு சமமான ஒன்றைக் கொடுப்பதாகும். நாம் ஏதாவது பொருளை இழந்து விட்டால், அல்லது மழை, வெள்ளத்தில் நமது பொருட்களை இழந்துவிட்டால், அரசாங்கம் நமக்கு இழப்பீடு தருகிறது. அரசாங்கம் தரக்கூடிய இழப்பீடு நூறில் ஒரு பங்குக்கு கூட சமமாகாது என்பது வேறு கதை. ஆனால், இழப்பீடு வழங்குகிறது. அதேபோலத்தான், விபத்திற்கென்று இழப்பீடு, மருத்துவ இழப்பீடு என்று, இதில் பல வகைகள் அடங்கியிருக்கிறது. ஆக, ஒன்றிற்கு ஈடாக, அல்லது ஈடுபடுத்தும்விதமாகக் கொடுக்கப்படுவதுதான் இழப்பீடு என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். இன்றைய நற்செய்தியில் வாழ்விற்கு ஈடாக எதை நாம் கொடுக்க முடியும்? என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. பொருட்களுக்கு இழப்பீடாக பணத்தைக் கொடுத்துவிடலாம். ஆனால், இழப்பீடு தர முடியாத ஒன்று இருக்கிறது என்றால், அது நிச்சயம் வாழ்வு தான். பொன் கோடி கொடுத்தாலும், பதவி, புகழ், அந்தஸ்து பெற்றாலும், நமது வாழ்வை இழந்துவிட்டால், அவ்வளவுதான். இந்த உலகத்தில் ஒன்றுமே இல்லை. எனவே, வாழ்வை பாதுகாப்போடு,...

FROM GIVING TO LIVING

“Let me say this much: He who sows sparingly will reap sparingly, and he who sows bountifully will reap bountifully. Everyone must give according to what he has inwardly decided.” –2 Corinthians 9:6-7 Mass Readings: August 10 First: 2 Corinthians 9:6-10; Resp: Psalm 112:1-2,5-9; Gospel: John 12:24-26 Listen to the Mass Readings Giving sets the tone for living. If we give bountifully of our possessions, time, and energy (2 Cor 9:6), we will live an abundant life (Jn 10:10). If, however, we give sparingly (2 Cor 9:6), do the minimum, and not go beyond the letter of the law (2...

இயேசு காட்டு புதிய வாழ்வியல் நெறிமுறை

இயேசு தான் வாழ்ந்த காலத்திலே ஒரு புதிய வாழ்க்கை முறையைக் கொண்டு வருகிறார். இதுவரை உலகம் கருதியவற்றிலிருந்து, அவர் கொண்டு வந்திருந்த வாழ்க்கை முறை முற்றிலும் மாறுபட்டு இருந்ததால், யூதர்களால் அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மாறாக, அது கேலி செய்யப்பட்டது. அந்த புதிய வாழ்க்கை முறைதான் இயேசுவின் சாவுக்கும் காரணமாக அமைந்தது. இயேசு உயிரோடு வாழ்ந்தது வரை, அவருடைய புதிய வாழ்க்கை முறை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இயேசுவிடமிருந்து வல்லமையைப் பெற்றுக்கொண்ட நோயாளிகளும், அவருடைய குணப்படுத்துகின்ற ஆற்றலை வியந்து பார்த்தவர்களும், அவருடைய போதனையை வேறுபாடாகத்தான் பார்த்தனர். இயேசுவின் புதிய வாழ்க்கை முறை தத்துவத்தை அவர்கள் அப்படிப் பார்த்ததற்கும், காரணம் இல்லாமல் இல்லை. அவர்கள் வாழ்ந்த சூழல் அப்படித்தான் அவர்களுக்குக் கற்றுக்கொடுத்திருந்தது. இயேசு மகிமை என்பதை சிலுவையின் வழியாகப் பார்த்தார். மக்களோ அடுத்தவரைப் போரில் வெல்வதாகவும், அதிகாரத்தைக் கைப்பற்றுவதாகவும் பார்த்தனர். உயிர்விடுதலை மக்களுக்கு வாழ்வு தரும் கொடையாக, மிகப்பெரிய தியாகமாக இயேசு பார்த்தார். மக்களோ அதை கோழைத்தனமாகப்...

BELIEVE AND RECEIVE OR DOUBT AND OUT?

“I will do to you just what I have heard you say.” –Numbers 14:28 Mass Readings: August 9 First: Numbers 13:1-2,25–14:1,26-29,34-35; Resp: Psalm 106:6-7,13-14,21-23; Gospel: Matthew 15:21-28 Listen to the Mass Readings Twelve Israelite scouts walked around in the promised land. Ten saw disaster and sowed “discouraging reports among the Israelites” (Nm 13:32); two saw God’s hand poised to bless His people with swift entrance into the promised land, and these two scouts sowed faith and confidence (Nm 14:6ff). The people listened to the majority and died outside of the promised land. Pope St. John Paul II has prophesied that...

துன்பங்கள் விசுவாசத்தைப் பலப்படுத்தும் கருவிகள்

யூதர்கள் தங்களை தூய இனத்தவராக கருதினர். அவர்கள் வேறு இனத்தவரிடம் பெண் கொடுப்பதுமில்லை. எடுப்பதுமில்லை. அவர்களோடு எந்த உறவும் வைப்பதில்லை. அப்படி எடுத்தால் அவர்கள் தூய யூத இனத்திலிருந்து விலக்கி வைக்கப்படுவார்கள். எடுத்துக்காட்டு. சமாரியர்கள். கானானியர்களுக்கும், யூதர்களுக்கும் தொடக்கத்தில் இருந்தே பகைமை உணர்வு இருந்து வந்தது. இயேசுவினுடைய பணி பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டுமென்றால், அவர் தன்னுடைய பணிவாழ்வின் எல்லையை குறுகிய வட்டத்தில் உறுதிப்படுத்த வேண்டும். ஆனால், தன்னுடைய பணிவாழ்வின் எல்லையை குறுகிய வட்டத்தில் உறுதிப்படுத்த வேண்டும். ஆனால், இங்கேயோ ஒரு புற இனத்துப்பெண் அவரிடத்திலே உதவி கேட்கிறாள். மறுக்கவும் முடியாது. எனவே, உதவுவதற்கு முன்னதாக அவளுடைய விசுவாசத்தை உறுதிப்படுத்த இயேசு முயற்சி எடுக்கிறார். அதனுடைய வெளிப்பாடு தான் இந்த உரையாடல். நம்முடைய வாழ்விலும் துன்பங்கள் வருகிறபோது, கடவுளைக்கடிந்து கொள்ளாமல், கடவுள் எதையாவது உணர்த்த விரும்புகிறாரா? என்று நம் வாழ்வை சுய ஆய்வு செய்து கொள்ள அழைக்கப்படுகிறோம். நமது வாழ்வில் நடப்பவை...