† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light

தலைசிறந்த கட்டளை எது?

மத்தேயு நற்செய்தியில் ”போதகரே, திருச்சட்ட நூலில் தலைசிறந்த கட்டளை எது?” என்ற கேள்வி, இயேசு சதுசேயரை வாயடைக்கச்செய்தார் என்பதைக்கேள்விப்பட்டவுடன் கேட்கப்பட்ட கேள்வி. அது இயேசுவை தாக்குவதற்காக, அவரில் குற்றம் காண்பதற்காகக்கேட்கப்பட்ட கேள்வி. ஆனால், மாற்கு நற்செய்தியில் இதனுடைய பிண்ணனி வேறு. இயேசுவை பாராட்டும்படியாகச்சொல்லப்பட்ட கேள்வி. இயேசு மதம் என்பதற்கான வரைவிலக்கணத்தை இங்கு தருகிறார். மதம் என்பது அன்பை அடிப்படையாகக்கொண்டது. அன்பில்லையென்றால் அது மதமல்ல. இந்த மதம் இரண்டு அடித்தளங்களைக்கொண்டு கட்டியெழுப்பப்படுகிறது. 1. இறையன்பு 2. பிறரன்பு. இந்த இரண்டில் முதன்மையான இறையன்பு. இறையன்பு இல்லாத இடத்தில் பிறரன்பு இருக்க முடியாது என்பது இயேசுவின் போதனை. கடவுளுக்கான அன்பு நம்மிடத்தில் பல வழிகளில் வெளிப்பட வேண்டும். நம்முடைய உறவில், உணர்வில், வாழ்வில், எண்ணத்தில் கடவுளன்பு வெளிப்பட வேண்டும். இந்த அன்பு இருக்கிறபோதுதான் பிறரன்பு நம்மில் உருவாகும். ஏனென்றால் மனிதன் என்பவன் வேதியியல் பொருளின் கலவையில்ல, படைப்பின் வெறும் பகுதி அல்ல, மாறாக, கடவுளன்பின்...

“THE WAR ON TERROR”

“He called His disciples and selected twelve of them to be His apostles…Simon called the Zealot…” –Luke 6:13, 15 Mass Readings: October 28 First: Ephesians 2:19-22;Resp: Psalm 19:2-5;Gospel: Luke 6:12-16 Listen to the Mass Readings Jesus places His heaven-sent ministry in the hands of Simon and Jude, along with ten other apostles. Simon was called the Zealot (Lk 6:15). Zealots were similar to what we would today call “terrorists.” Why would Jesus entrust His ministry and His reputation to a terrorist? Imagine the outcry today if a bishop hired a terrorist to lead a major diocesan ministry! Before meeting Jesus,...

இறைவனின் பிரசன்னம்

இயேசு செபிப்பதற்காக மலைக்குச் சென்றார் என்று நற்செய்தியாளர் சொல்கிறார். மலை என்பது விவிலியத்தில் உருவகமாகப் பயன்படுத்தப்படக்கூடிய வார்த்தை. பாலஸ்தீனத்தின் பூகோள அமைப்பும் இதற்கு ஒரு காரணமாகும். பாலஸ்தீனமும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளும் மலைப்பாங்கான இடங்களைக் கொண்டிருப்பதால், விவிலியத்தில் ஏறக்குறைய 500 க்கும் மேலாக, “மலை“ என்கிற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆன்மீகரீதியாக பார்க்கிறபோதும், மலை உயரமாக இருப்பதனால், அது கடவுளின் பிரசன்னத்தை வெளிப்படுத்தக்கூடிய வார்த்தையாகவும் இருக்கிறது. மலை என்பது உயரமான இடம். கடவுள் விண்ணுலகில் அதாவது மேலே வானத்தில் இருக்கிறார் என்பதால், மலை என்பது விண்ணகத்தின் அருகாமையைக் (கடவுளின் அருகாமை) குறிக்கிற சொல்லாக இருக்கிறது. ஆக, மலை கடவுளின் பிரசன்னத்தை அதிகமாக, நெருக்கமாக உணரக்கூடிய இடம் என்பதுதான், இங்கே நாம் அறிய வேண்டிய ஒன்று. பழைய ஏற்பாட்லே சீனாய் மற்றும் சீயோன் மலைகள் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. சீனாய் மலையில் தான், மோசே கடவுளிடமிருந்து பத்துக்கட்டளைகளைப் பெற்றார். சீயோன் மலையில் தான் எருசலேம் ஆலயம்...

JESUS, OUR LIFE (Jn 14:6)

“Who can free me from this body under the power of death?” –Romans 7:24 Mass Readings: October 27 First: Romans 7:18-25; Resp: Psalm 119:66,68,76-77,93-94; Gospel: Luke 12:54-59 Listen to the Mass Readings If we’re honest with ourselves, we will have to admit that we may have not been honest with ourselves. This is because, if we had been honest, we would have had to admit that there is something very wrong with us. No good dwells in us (Rm 7:18). We have “the desire to do right” but “not the power” (Rm 7:18). “What happens is that” we “do, not...

நீங்களே வழக்கைத் தீர்த்துக்கொள்ளுங்கள் !

இயேசு மக்கள் கூட்டத்துக்கு வழங்கிய அறிவுரைகளில் ஒன்று நீங்கள் உங்கள் எதிரியோடு ஆட்சியாளரிடம் போகும்போது வழியிலேயே உங்கள் வழக்கைத் தீர்த்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள் என்பது. இயேசுவின் இந்த வாக்கு எத்துணை ஞானம் நிறைந்தது, இந்த நூற்றாண்டுக்கும் எத்துணை பொருத்தமானது என்பதை எண்ணி, எண்ணி வியக்கிறோம். இன்றைய நாள்களில் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. குடும்ப நீதிமன்றங்களில் மணமுறிவுக்கான வழக்குகள் குவிகின்றன. சொத்துச் சண்டை, பாகப் பிரிவினை என்பது தனி நபர்களுக்குள் மட்டுமல்ல, மாநிலங்களுக்கிடையேகூட உருவாகி, மாநிலங்களும் வழக்கு தொடுக்கின்ற காட்சிகளை இன்று காண்கிறோம். நீதிமன்றங்களுக்குச் செல்வதால் பண விரயம், கால விரயம், மன உளைச்சல், தொடரும் பகை உணர்வு முதலியனதான் ஏற்படுகின்றனவே ஒழிய, நேர்மையான, அனைவருக்கும் ஏற்புடைய தீர்ப்புகள் கிடைப்பதில்லை. எனவே, இயேசுவின் அறிவுரை முன் எப்போதையும்விட இக்காலத்துக்கு இன்னும் நன்றாகப் பொருந்துகிறது. வழக்கு மன்றங்களுக்குச் செல்வதற்கு முன் உரையாடல் வழி சிக்கல்களைத் தீர்த்துக்கொள்ள முடியுமா என்று முயற்சி செய்ய வேண்டும்....