† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light

வாழ்வின் துன்பம் கற்றுத்தரும் பாடம்

இயேசு கலிலேயா மற்றும் சமாரியா எல்லைப்பகுதியில், பத்து தொழுநோயாளிகளைச் சந்திக்கிறார். அதில் ஒருவர் சமாரியர். அவர்களுக்குள் நிச்சயம் ஓர் உரையாடல் நடைபெற்றிருக்க வேண்டும். இயேசு அவர்களிடம் உறவாடியிருக்க வேண்டும். அவர்கள் எந்த ஊரைச்சார்ந்தவர்கள், எந்த குடும்பத்தைச் சார்ந்தவர்கள், அவர்களுக்கு திருமணமாகி விட்டதா? அவர்கள் எப்படி இந்த நோயால் தாக்கப்பட்டார்கள்? என்பதெல்லாம், நிச்சயம் கேட்டு அறிந்திருப்பார். அதனால் தான், கடைசியில், இந்த அந்நியனைத்தவிர வேறு யாரையும், நன்றி சொல்லக் காணோமே? என்று, அவனை அடையாளப்படுத்த, இயேசுவால் முடிந்தது. பொதுவாக, யூதர்களுக்கும், சமாரியர்களுக்கும் சமாதானம் கிடையாது என்பது நாம் அறிந்தது தான். ஆனால், இங்கே அவர்கள் ஒரே குழுவாக வருகிறார்கள். அவர்களுக்கு வந்த துன்பம், அவர்களிடையே இருந்த, அந்த வேற்றுமையை, வெறுப்புணர்வை களைந்து விட்டது. ஆனால், இறைவனிடமிருந்து ஆசீரைப்பெற்று, குணமடைந்தவுடன், அவர்களுக்குள் இருந்த அந்த வேறுபாடு, மீண்டும் தளைத்தோங்குகிறது. மனிதனுக்குள் இருக்கக்கூடிய தன்னைப்பற்றிய உயர்ந்த மதிப்பீடு, மற்றவர்களை தாழ்வாக நினைப்பது, தான் என்கிற எண்ணம்,...

THANKFUL “USELESS SERVANTS”

“We are useless servants. We have done no more than our duty.” –Luke 17:10 Mass Readings: November 14 First: Wisdom 2:23–3:9; Resp: Psalm 34:2-3,16-19; Gospel: Luke 17:7-10 Listen to the Mass Readings To serve the Lord is the most awesome privilege possible for a human being. One day serving in His courts is better than a thousand elsewhere (Ps 84:11). To take out the garbage for Jesus is better than being the CEO for a multi-national conglomerate. Therefore, in serving the Lord, we should not focus on how much we’re doing for Him but on how much He’s doing for...

நாம் கடவுளின் படைப்புக்கள்

கடவுளுக்கு நாம் அனைவரும் எந்த அளவுக்கு கடன்பட்டிருக்கிறோம், என்பதை இன்றைய நற்செய்தி வாசகம் எடுத்துச் சொல்கிறது. கடவுள் நமக்கு இந்த அழகான உலகத்தைத் தந்திருக்கிறார். இந்த உலகத்தில் வாழ நல்ல வாழ்வைத் தந்திருக்கிறார். இந்த உலகத்தில், நமது வாழ்வை மகிழ்ச்சியாக வாழ, தொடர்ந்து வழிநடத்திக் கொண்டிருக்கிறார். அவர் இல்லையென்றால், நாம் யாருமே இல்லை. அவர் தான் நமக்கு எல்லாமே. அப்படியிருக்கிறபோது, நாம் தான், அவருக்கு கடன்பட்டிருக்கிறவர்களாக இருக்கிறோம். நாம் பணிவிடை செய்வது தான், நியாயமானதாக இருக்க முடியும். பணிவிடை என்றால் என்ன? நாம் எப்படி பணிவிடை கடவுளுக்குப் பணிவிடை செய்ய முடியும்? அதற்கு இயேசு இந்த உவமை வழியாக விளக்கம் கொடுக்கிறார். பணியாளர் என்பவர், தலைவருக்குச் சொந்தமானவர். அவர் ஒன்றைச் செய்கிறபோது, அதை அவர் செய்தாலும், அதனால் விளையக்கூடிய புகழும், பெருமையும் தலைவருக்கேச் சேரும். ஓர் இயந்திரத்தைக் கண்டுபிடித்த நபருக்குத்தான், அந்த இயந்திரத்தினால் விளையும் அனைத்தும் பெருமையும் சேரும். அதுபோலதத்தான், நாம்...

SCANDALIZED OR DE-SCANDALIZED?

Jesus “said to His disciples: ‘Scandals will inevitably arise, but woe to him through whom they come.’ ” –Luke 17:1 Mass Readings: November 13 First: Wisdom 1:1-7; Resp: Psalm 139:1-10; Gospel: Luke 17:1-6 Listen to the Mass Readings Throughout the history of Christianity and humanity, scandals have inevitably arisen. Talking about these scandals makes matters worse. However, we can make even scandals work together for the good of all who love God (Rm 8:28), if we: are on guard so as not to cause scandals (Lk 17:3), are on guard to prevent scandals (Lk 17:3), correct our brothers and sisters...

வழிகாட்டலும், வழிநடத்தலும்

பாவச்சோதனை வருவதை தடுக்க முடியாது என்று இயேசு சொல்கிறார். தொடக்கத்தில் கடவுள் இந்த உலகைப்படைத்தபோது அனைத்தும் நன்றாக இருந்தது எனக்கண்டார். ”கடவுள் தாம் உருவாக்கிய அனைத்தையும் நோக்கினார். அவை மிகவும் நன்றாய் இருந்தன” (தொடக்கநூல் 1: 31). ஆனால், அலகை பாம்பின் வடிவில் முதல் பெற்றோரை தனது நயவஞ்சகப்பேச்சினால் மயக்கி, இந்த உலகத்தில் பாவத்தை நுழைத்தது. அதுவரை நன்றாக இருந்த இந்த உலகம், முதல் மனிதனின் கீழ்ப்படியாமையால் பாவத்திற்கு இரையானது. இந்த உலகத்தில் சோதனை, தீமை இருப்பதை தவிர்க்க முடியாது. நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அதற்காக, நாமே தீமையாக மாறிவிட முடியாது. நாமும் பாவத்திற்கு பலியாகி, மற்றவர்களையும் பலியாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அது மிகப்பெரிய தண்டனைக்குள்ளாக்கக்கூடிய பாவம். மற்றவர்களை இடறிவிழச்செய்வதும், மற்றவர்கள் இடறி விழ காரணமாவதும் மிகப்பெரிய குற்றம். . இந்தப்போதனை மக்களை வழிநடத்துகிற தலைவர்களுக்கு மிக மிகப்பொருந்தும். வழிநடத்துகின்ற பணி என்பது எளிதான பணி அல்ல. ஒவ்வொரு முடிவு எடுக்கின்றபோதும்,...