† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light

ஆண்டவரே, எம் பாவங்களுக்கு ஏற்றபடி எம்மை நடத்தாதேயும்

திருப்பாடல் 79: 8, 9, 11, 13 ”ஆண்டவரே, எம் பாவங்களுக்கு ஏற்றபடி எம்மை நடத்தாதேயும்” பாபிலோனை ஆண்ட நெபுகத்நேசர் யெருசலேமையும், ஆலயத்தையும் தரைமட்டமாக்கினார். யூதர்களின் அடையாளம் அழிந்துபோனதாக, யூதர்கள் உணர்ந்தனர். எரேமியாவின் புலம்பல் ஆகமத்தை ஒட்டிய வசனங்கள், இதிலும் காணப்படுகிறது. மொத்தத்தில், இந்த திருப்பாடல் அழுகை, புலம்பல், வருத்தம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்துகின்ற பாடலாக அமைந்திருக்கிறது. இதுபோன்ற தண்டனைகளுக்கு என்ன காரணம்? என்பதை சிந்தித்ததின் வெளிப்பாடு தான், இந்த திருப்பாடல். தங்களுக்கு நேர்ந்திருக்கிற இவ்வளவு கொடுமையான சூழ்நிலைகளுக்கு யார் காரணம்? என்பதை ஒவ்வொருவருமே, துன்ப காலத்தில் சிந்தித்து பார்ப்பது இயல்பு. அதுபோலத்தான், வளமையாக, செழிப்பாக, மகிழ்வாக வாழ்ந்த நமக்கு, திடீரென்று ஏன் இந்த துன்பம்? என்கிற கேள்விக்கான காரணத்தை, திருப்பாடல் ஆசிரியர் காண முயல்கிறார். தாங்கள் கடவுள் முன்னிலையில் நீதிமான்களாக வாழவில்லை என்றாலும், இவ்வளவு துன்பத்தை அனுபவிக்கின்ற அளவுக்கு, தவறு செய்யவில்லை என்பது, ஆசிரியரின் திடமான நம்பிக்கை. ஒருவேளை, தங்களுடைய...

HE LOVES ME. HE LOVES ME NOT. HE LOVES ME…

“A cloud came, overshadowing them, and out of the cloud a voice: ‘This is My Son, My Beloved. Listen to Him.’ ” –Mark 9:7 “God is for us” (Rm 8:31). He “did not spare His own Son but handed Him over for the sake of us all” (Rm 8:32). After that, will He not “grant us all things besides?” (Rm 8:32) God couldn’t love us more. He loves us unconditionally, sacrificially, infinitely, perfectly, and eternally. Nevertheless, God does things and allows things in our lives which we can’t understand. Although this should make us question our powers of understanding, we...

இயேசுவின் உருமாற்றம் !

இன்று நம் ஆண்டவரின் உருமாற்ற விழாவைக் கொண்டாடுகிறோம். இயேசுவோடு மூன்று ஆண்டுகள் வாழ்ந்த சீடர்களில் மூவருக்கு மட்டுமே கிடைத்த ஒரு வியப்புக்குரிய அனுபவம் இந்த உருமாற்றம். இயேசுவின் மானிடத் தன்மை மறைந்து, அவரது இறைத் தன்மை, இறை மாட்சியை வெளிப்படுத்தப்பட்ட விவரிக்க முடியாத ஓர் அனுபவத்தை இந்த மூவரும் உயர்ந்த மலை மேலே கண்டனர். அத்தோடு, இயேசு இறைத் தந்தையின் அன்பார்ந்த மகன். அவருக்கு செவி மடுப்பது இறைவனுக்கே செவிமடுப்பதாகும் என்னும் இறைவனின் குரலையும் கேட்கும் பேறு பெற்றனர். இந்த உருமாற்றம் உடனடியாக இல்லாவிட்டாலும், இயேசுவின் உயிர்ப்புக்குப் பின் அவர்களின் இறைநம்பிக்கையை ஆழப்படுத்த உதவியது. இயேசு இறைமகனாய், மாட்சிமை நிறைந்தவராய் இருந்தும்கூட, இறைத் திருவுளத்துக்குப் பணிந்து அனைத்தையும் துறந்து, எளிய மானிடராய் வாழ்ந்தார் என்னும் உண்மையை இந்தச் சீடர்கள் எத்தனையோ நாள்கள் எண்ணி, எண்ணி வியந்திருப்பர். தமது பணியில் உறுதிப்படுத்தப்பட்டிருப்பர். நாமும் இன்று இயேசுவின் இந்த வியப்புக்குரிய எளிமையை, கீழ்ப்படிதலை, பணிவை...

LIVING LIFE’S COVENANT DIMENSION

“The Lord is making this agreement with you: you are to be a people peculiarly His own, as He promised you; and provided you keep all His commandments…” –Deuteronomy 26:18 In the old covenant, God made us His people. Our responsibility in the covenant was “to walk in His ways and observe His statutes, commandments and decrees” (Dt 26:17). We were utterly incapable of the complete obedience called for in this covenant. So we broke the covenant. Then God made a new covenant not just with the Jewish people but with all people. He covenanted not only to be our...

”ஆண்டவரின் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர்”

திருப்பாடல் 119: 1 – 2, 4 – 5, 7 – 8 ”ஆண்டவரின் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர்” இந்த திருப்பாடல் ஒரு சில தனித்தன்மைகளைப் பெற்ற திருப்பாடல். இருபத்திரெண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த இருபத்திரெண்டு என்பது எபிரேய மொழியில் இருக்கக்கூடிய எழுத்துக்களின் எண்ணிக்கை. ஒவ்வொரு பிரிவும், எபிரேய எழுத்து வரிசையில் தொடங்கக்கூடியதாக இருக்கிறது. (தமிழில் ஆத்திச்சூடி பாடல் அமைந்திருப்பது போல…. அறம் செய்ய விரும்பு, ஆறுவது சினம், இயல்வது கரவேல்…) திருச்சட்டத்தின் புகழைப் பரப்பும் பாடல் என்றும் சொல்லலாம். இளைய தலைமுறையினருக்கான அறத்தையும், வாழ்க்கைநெறிகளையும் கற்றுத்தரும் பாடல். அவர்களது வாழ்க்கையின் மீதுள்ள அக்கறையினை வெளிப்படுத்தும் பாடல். திருச்சட்டம் என்பது கடவுள் வகுத்துக்கொடுத்தச் சட்டம். அந்த சட்டத்தை நாம் அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று ஆண்டவர் பணிக்கிறார். கடவுளுடைய சட்டம் நாம் தவறான பாதைக்குச் செல்வதிலிருந்து பாதுகாப்பு தருகிறது. அவரைப் பற்றிப்பிடித்து வாழ, அவரது வழியில் நடக்க நமக்கு பேருதவியாக...