† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light

நம்பிக்கையின்மையை நீக்க உதவும்

தீய ஆவி பிடித்திருந்த இளைஞனின் தந்தை இயேசுவை நோக்கி, “உம்மால் ஏதாவது செய்ய இயலுமானால் எங்கள்மீது பரிவுகொண்டு எங்களுக்கு உதவி செய்யும்” என்று வேண்ட, இயேசு அவரை நோக்கி, “இயலுமானாலா? நம்புகிறவருக்கு எல்லாம் நிகழும்” என்று சொல்ல, அச்சிறுவனின் தந்தை “நான் நம்புகிறேன். என் நம்பிக்கையின்மை நீங்க உதவும்” என்று கதறினார். இயேசு அவரைக் குணமாக்கினார். அந்தச் சிறுவனின் தந்தையைப் போன்ற மனநிலையே நம்மிலும் இருக்கலாம். அப்படியானால், அவரைப் போன்றே நாமும் மன்றாட வேண்டும். பல நேரங்களில் நமது விசுவாசம், இறைநம்பிக்கை நிறைவானதான, முழுமையானதாக இல்லை. எனவேதான், இறைவனின் நன்மைத்தனத்தை, பேரன்பை நாம் சந்தேகிக்கிறோம். எனவே, நாமும் நமது நம்பிக்கையின்மை நீங்க உதவவேண்டும் என்று இறைவனிடம் மன்றாட வேண்டும். மேலும், இறைநம்பிக்கை என்பதே இறைவனின் ஒரு கொடைதான் என்பதையும் இந்நிகழ்வு நமக்கு நினைவூட்டுகிறது. அவரது அருளின்றி, இறைவன்மீது நாம் நம்பிக்கை கொள்ள முடியாது, அவரை அப்பா, தந்தாய் என்று அழைக்கவும் முடியாது....

ONE SPIRIT (EPH 4:4)

“Receive the Holy Spirit.” –John 20:22 Happy Pentecost! Happy birthday of the Church! Come, Holy Spirit! On this “last and greatest day of the festival,” Jesus continues to cry out: “If anyone thirsts, let him come to Me; let him drink who believes in Me. Scripture has it: ‘From within Him rivers of living water shall flow.’ (Here He was referring to the Spirit)” (Jn 7:37-39). The Holy Spirit will come to us and through us renew the face of the earth (Ps 104:30). The Spirit will make us witnesses for the risen Christ (see Acts 2:32). He will give...

பாவ மன்னிப்பு

இயேசுவின் சீடர்கள் கடைசி இரவு உணவு சாப்பிட்ட அந்த இடத்தில் சீடர்கள் கூடியிருக்கிறார்கள். அவர்கள் கொண்டிருந்த பயத்தைப்பற்றி நாம் விளக்கத்தேவையில்லை. யார் வந்தாலும், தங்களைக்கொல்லத்தான் வருகிறார்களோ என்று எண்ணியவர்களாக, சீடர்கள் கதிகலங்கிப்போய் .இருந்திருப்பார்கள் என்பது நாம் அனைவருமே உணரக்கூடிய ஒன்று. அப்படி பயந்து நடுங்கிக்கொண்டிருக்கிற சமயத்தில், இயேசு அவர்கள் நடுவில் தோன்றி, ”உங்களுக்குச் சமாதானம்” என்று சொல்கிறார். இங்கு சமாதானம் என்று சொல்வது, கடவுளின் அனைத்து ஆசீர்வாதங்களும் கிடைக்கும் என்ற பொருளில் அர்த்தப்படுத்தப்படுகிறது. இயேசு தனது சீடர்களுக்குக் கொடுத்த முக்கியமான கொடை, மற்றவர்களின் பாவங்களை மன்னிப்பது. பாவங்களை மன்னிப்பதற்கான அதிகாரத்தைக்கொடுக்கிறார். இங்கே, அதிகாரம் என்று சொல்லப்படுவது, சீடர்களுக்கான அதிகாரம் இல்லை. அந்த அதிகாரத்தை அவர்கள் தவறாகப்பயன்படுத்த முடியாது. அவர்கள் நினைத்தவர்களுக்கு மன்னிப்பு வழங்க முடியாது. அவர்கள் நினைத்தால் தான், கடவுளின் மன்னிப்பு கிடைக்கும் என்று நாம் அர்த்தம் கொள்ளக்கூடாது. மாறாக, மன்னிப்புப் பெறுகிறவரின் மனநிலையைப்பொறுத்து, மன்னிப்பு அவர்கள் வழங்க வேண்டும். உண்மையிலே,...

THE SPIRIT OF INFINITY

“He preached the kingdom of God and taught about the Lord Jesus Christ with full assurance and without any hindrance.” –Acts 28:31, our transl. Paul was under house arrest for two years in Rome (Acts 28:16, 30). Before that, he was in prison for two additional years (Acts 24:27). Prior to that, he was in prison several other times (see 2 Cor 11:23). Trial, distress, persecution, hunger, nakedness, danger, and the sword made it very difficult for Paul to preach the Gospel (Rm 8:35). Nevertheless, the last word of Acts of the Apostles is that Paul “preached God’s kingdom with...

நேர்மையாளரையும், பொல்லாரையும் ஆண்டவர் சோதித்தறிகிறார்

திருப்பாடல் 11: 4, 5, 7 ”நேர்மையாளரையும், பொல்லாரையும் ஆண்டவர் சோதித்தறிகிறார்” ஒருவரை நல்லவரா? கெட்டவரா? என்று அறிவதற்கு, சோதனை செய்து பார்ப்பது மனிதர்களின் குணம். மிகப்பெரிய பொறுப்பை ஒருவரிடம் கொடுக்க விரும்பும் தலைவர், யாரிடத்தில் அதனைக் கொடுக்க விரும்புகிறாரோ, அவரை பலமுறை சோதித்திருப்பார். அந்த சோதனையில் எல்லாம், அவர் வெற்றி பெற்றிருந்தால் மட்டுமே, அவரால் மிகப்பெரிய பொறுப்பை அவரிடம் கொடுக்கலாம் என்கிற எண்ணம் வருவதாக இருக்கும். இது மனிதர்களுக்குப் பொருந்தும் ஆனால், கடவுள் ஒருவரைச் சோதித்துப்பார்த்துதான் அறிந்து கொள்ள முடியுமா? அல்லது சோதித்து தான் அறிந்து கொள்ள வேண்டுமா? கடவுள் நேர்மையாளர்களையும், பொல்லாரையும் சோதித்து அறிகிறார் என்று திருப்பாடல் ஆசிரியர் சொல்கிறார். கடவுளுக்கு ஒருவரை யாரென்று தெரிய, சோதித்து அறிய வேண்டியதில்லை. அப்படியென்றால், எதற்காக கடவுள் சோதித்தறிகிறார்? என்று திருப்பாடல் ஆசிரியர் சொல்கிறார்? கடவுள் அறிய வேண்டும் என்பதைவிட, மற்றவர்கள் ஒருவரை நேர்மையாளர் அல்லது பொல்லார் என்பதை அறிய வேண்டும்...