† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light

எல்லாவகை அச்சத்தினின்றும் ஆண்டவர் விடுவித்தார்

திருப்பாடல் 34: 1 – 2, 3 – 4, 5 – 6, 7 – 8 இந்த உலகத்தில் வாழ்கிற மனிதர்களுக்கு இயல்பாகவே அச்சம் என்பது உள்ளத்திலே இருக்கிறது. அந்த அச்சம் பலவிதமான காரணங்களுக்காக ஒருவருக்குள் எழலாம். இருளைப் பார்த்து ஒரு சிலர் பயப்படலாம். படிப்பைப் பார்த்து பயப்படலாம். பாம்பைப் பார்த்து பயப்படலாம். எதிர்காலத்தை நினைத்து அச்சம் கொள்ளலாம். மனிதர்கள் அச்சம் கொள்வதற்கு ஏராளமான காரியங்கள் இந்த உலகத்திலே இருக்கிறது. வாழ்க்கையில் எப்படிப்பட்ட அச்சம் இருந்தாலும், கடவுள் மீது நம்பிக்கை உள்ளவர்களை, ஆண்டவர் அச்சத்தினின்று விடுவிக்கிறார் என்று திருப்பாடல் ஆசிரியர் கூறுகிறார். கடவுள் மீது நம்பிக்கை உள்ளவர் நிச்சயம் அச்சம் கொள்ளமாட்டார். ஏனென்றால், கடவுளின் பிரசன்னம் தன்னோடு இருப்பதாக அவர் உணர்கிறார். நெருக்கடி வேளையில் ஆண்டவர் கைதூக்கி விடுவார் என்கிற நம்பிக்கை அவரிடத்தில் இருக்கிறது. எத்தகைய தீங்கு வந்தாலும், கடவுள் நிச்சயம் பாதுகாப்பார் என்பதில் உறுதியாக இருக்கிறார். ஏனென்றால்,...

“I WISH TO KNOW CHRIST” (PHIL 3:10)

“I never knew you. Out of My sight, you evildoers.” –Matthew 7:23 Some of the Jews in exile in Babylon didn’t know God in relationship (see 2 Kgs 24:14ff), and so they didn’t change their lives as they might have had they been in a loving relationship with Him. They knew some information about God, but they didn’t know Him. Because the book of the law had been “lost” in the Temple for many years (see 2 Kgs 22:8ff), many of these Jews did not even know the basic facts about God. Learning facts about Jesus is important, but catechesis,...

செயல்பாடுள்ள கிறிஸ்தவர்கள்

இயேசு வாழ்ந்த காலம் புதுமைகளுக்கு பெயர் போன காலம். பல போதகர்களால் புதுமைகளும் அற்புதங்களும் அரங்கேறின. புதுமைகள் பொதுவாக நடக்கக்கூடிய நிகழ்வுகளாக இருந்தன. பல நோய்கள் உளவியல் நோய்களாக இருந்தன. கடவுளின் பெயரைச்சொல்லி வேண்டுகிறபோது, கடவுள் மீது உள்ள நம்பிக்கை, பல பேருக்கு சுகத்தை கொடுத்தது. இந்த பிண்ணனியில் தான், நாம் இந்த நற்செய்தி வாசகத்தைப் புரிந்து கொள்ள முடியும். தொடக்ககால திருச்சபை தலைவர்கள், புதுமைகளை மறுக்கவில்லை. தொடக்ககால திருச்சபையில் இயேசுவை நம்பாத சிலரும், உதட்டளவில் இயேசுவின் பெயரைச் சொல்லி, பல பேய்களை ஓட்டினர். ஆனால், கடவுளை நம்பாதவர்கள், கடவுளின் பெயரைச் சொல்லி காரியம் சாதிக்கிறபோது, அதற்கான விளைவை, அவர்கள் சந்தித்தே ஆக வேண்டும் என்பது இயேசு கொடுக்கிற எச்சரிக்கை செய்தி. புதுமைகள் செய்வதனாலோ, கடவுளின் பெயரால் காரியங்கள் சாதிப்பதனாலோ, ஒருவர் கடவுளுக்கு உகந்தவர் ஆகிவிட முடியாது. கடவுளுக்கு ஒருவர் உகந்தவர் ஆக வேண்டுமென்றால், கிறிஸ்தவத்தை முழுமையாக வாழ முயற்சி எடுக்க...

FINDERS KEEPERS, LOSERS WEEPERS ?

“I have found the book of the law in the temple of the Lord.” –2 Kings 22:8 If we find the Word of God, it is a life-changing event. Jeremiah exclaimed: “When I found Your words, I devoured them; they became my joy and the happiness of my heart” (Jer 15:16). By finding God’s Word, we do not mean finding a copy of the Bible or parts of the Bible as Hilkiah did. We mean finding God’s Word from the Church and her Scriptures “not as the word of men, but as it truly is, the word of God” (1...

உண்மை கிறிஸ்தவர்களாக வாழ…

ஒரு மரம் அதன் கனியால் அறியப்படுகிறது என்பது, யூதர்கள், கிரேக்கர்கள் மற்றும் உரோமையர்கள் ஏற்றுக்கொண்ட பொது சிந்தனை. மத்திய கிழக்குப்பகுதிகளில் “வேரைப்போல அதன் கனி” என்கிற பழமொழி மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தது. இன்றைய நற்செய்தியில் இயேசு ”முட்செடிகளில் திராட்சைப் பழங்களையோ, முட்பூண்டுகளில் அத்திப்பழங்களையோ பறிக்க முடியுமா?” என்று கேட்கிறார். முட்செடிகளுக்கும் திராட்சைப்பழங்களுக்கும் என்ன தொடர்பு? முட்பூண்டுகளுக்கும், அத்திப்பழங்களுக்கும் என்ன ஒற்றுமை? பாலஸ்தீனப்பகுதியில் ஒரு சில முட்செடிகள், சிறிய பழங்களைக் கொண்டிருந்தது. அது திராட்சைப் பழங்களைப் போன்ற தோற்றம் உடையதாக இருந்தது. அதேபோல முட்பூண்டுகளில் இருக்கும் பழங்கள், அத்திப்பழங்களை நினைவுபடுத்துவது போன்று இருந்தது. எவ்வளவுதான் அவைகள் தோற்றத்தில், திராட்சைப் பழங்களையும், அத்திப்பழங்களையும் நினைவுபடுத்துவது போல இருந்தாலும், அவைகள் திராட்சைப்பழங்களாகவோ, அத்திப்பழங்களாகவோ மாறிவிட முடியாது. அதேபோலத்தான் போலி இறைவாக்கினர்களும். அவர்கள் இறைவாக்கினர்களைப் போல உடையில் காணப்பட்டாலும், அவர்கள் இறைவாக்கினர்கள் ஆகிவிட முடியாது. எனவே, அவர்களைக் குறித்து எச்சரிக்கையாய் இருக்க, இயேசு நமக்கு அழைப்புவிடுக்கிறார்....