† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light

நீங்கள் சுறுசுறுப்பானவரா? அல்லது தளர்வுற்றவரா?

மத்தேயு 11:28-30 நீங்கள் சுறுசுறுப்பானவரா? அல்லது தளர்வுற்றவரா? என்ற கேள்வியோடு நாம் கருத்துக்கணிப்பு நடத்தினால் வாழ்க்கையில் பல மனிதர்கள் சுறுசுறுப்பாக செயல்படுவதில்லை. மாறாக தளர்வுற்றவர்கள் தான் என்பது தெரிய வரும். வாடிய முகத்தோடு அவா்கள் நடப்பதைப் பார்க்கின்றபோது அவர்களிடத்தில் ஆற்றல் தீர்ந்துபோய் விட்டது என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. உங்களிடத்திலே சுறுசுறுப்பாக செயல்படுவதற்கான ஆற்றல் தீர்ந்துவிட்டது என்றால் கவலை வேண்டாம். அந்த ஆற்றலைப் பற்றித்தான் இன்றைய நற்செய்தி வாசகம் பேசுகிறது. அந்த ஆற்றலை தருபவர் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து. பெருஞ்சுமைகளை இறக்கி வையுங்கள். கவலைகளை கொட்டுங்கள். சோகங்களை சொல்லுங்கள். உங்கள் துயரத்தின் புலம்பலை பற்றி பேசுங்கள். கவலை, சோகம், துயரம், பிரச்சினை, நோய் இவைகள் தானே உங்கள் ஆற்றலை உங்களிடமிருந்து பிடுங்கியது. அதனால்தானே நீங்கள் தளர்வுற்றுப் போனீர்கள்? அதைப்பற்றி கவலைப்படாதீர்ள். இப்போது எல்லாவற்றுக்கும் இளைப்பாறுதல் பெறுங்கள். அனைத்து ஆற்றலையும் அள்ளுங்கள். நிறைய அள்ளுங்கள். ஆண்டவரே அந்த ஆற்றல். மனதில் கேட்க… •...

WE ARE HIS INSTRUMENTS AND CHILDREN

“Will the axe boast against Him Who hews with it?” –Isaiah 10:15 We are instruments and tools in God’s hands. Our loving Father employs us according to who we are and what gifts we have. We can experience this both in the present and through hindsight, seeing how the Father has directed our lives. Our Father employs us using a symphony of our free choices and His divine, loving omnipotence. As an example of this, the homilist at today’s Mass mentioned that his own free choice to attend a Calvinist seminary was used by God as a part of His...

ஆண்டவரின் கருவி அசீரியா ! (முதல் வாசகம்)

அசீரியர்கள் இஸ்ரயேல் மக்களைத் தோற்கடித்து, அடி பணியச் செய்த நிகழ்ச்சியை இறைவனின் பார்வையில் பார்த்து, பொருள் கொள்கிறார் எசாயா இறைவாக்கினர். இஸ்ரயேல் இறைவனைவிட்டுப் பிரிந்து சென்றதால், அதற்கு ஒரு பாடம் கற்றுத் தரும் நோக்குடன், அசீரியாவைத் தனது கருவியாக இறைவன் பயன்படுத்தினார் என்று சொல்கிறார் எசாயா. சில நேரங்களில் நமது வாழ்விலும் இதுபோன்று நிகழலாம். நாம் மனம் திரும்ப வேண்டும், இறைவனிடம் திருந்தி வரவேண்டும் என்பதற்காக, நமது எதிரிகளைக் கருவியாகப் பயன்படுத்துகிறார் இறைவன். நம்மைத் தாழ்வுக்கு உட்படுத்துகிறார். இவ்வாறு, அனைத்தும் இறைவனின் திருவுளப்படியே நிகழ்கின்றன என்னும் ஞானத்தை எசாயாவிடமிருந்து இன்று நாம் கற்றுக்கொள்கிறோம். நமக்குத் துன்பம் இழைக்கின்றவர்கள்கூட, இறைவனின் அனுமதியோடுதான் செயல்படுகின்றார்கள் என்பது ஒரு விடுதலை தரும் எண்ணம். மன்றாடுவோம்: தீமையையும் உமது கருவியாகப் பயன்படுத்தும் இறைவா, உம்மைப் போற்றுகிறோம். எங்கள் ஆணவத்தை அடக்கி, உம் பக்கம் எங்கள் இதயங்களைத் திருப்பவே, நீர் தீமைகளை, தோல்விகளை, அவமானங்களை எங்கள் வாழ்வில் அனுமதிக்கிறீர்...

WHAT WILL HAPPEN ON JUDGMENT DAY?

“I assure you, it will go easier for Tyre and Sidon than for you on the day of judgment.” –Matthew 11:22 Although many people don’t want to talk or think about it, it is a fact that “we shall all have to appear before the judgment seat of God” (Rm 14:10). After dying (Heb 9:27) and at the end of the world (Mt 25:31), each person will be “judged according to his conduct” (Rv 20:13). The Lord “will bring to light what is hidden in darkness and manifest the intentions of hearts” (1 Cor 4:5). Those who have lost their...

தீமைக்கு விடைகொடு … கடவுளின் துயருக்கு பதில்கொடு

மத்தேயு 11:20-24 பழைய ஏற்பாட்டில் கடவுள் கவலையடைந்தார். மனம் வருந்தினார். அவரது உள்ளம் துயரமடைந்தது. இதை தொடக்கநூல் 6:5-6 வரையுள்ள இறைவார்த்தைகளில் வாசிக்கிறோம், “மண்ணுலகில் மனிதர் செய்யும் தீமை பெருகுவதையும் அவர்களின் இதயச் சிந்தனைகளெல்லாம் நாள் முழுவதும் தீமையையே உருவாக்குவதையும் ஆண்டவர் கண்டார். மண்ணுலகில் மனிதரை உருவாக்கியதற்காக ஆண்டவர் மனம் வருந்தினார். அவரது உள்ளம் துயரமடைந்தது”. புதிய ஏற்பாட்டில் குறிப்பாக இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து கவலையடைகிறார். மனம் வருந்துகிறார். உள்ளம் உடைந்துப்போகிறார். கொராசின், பெத்சாய்தா மற்றும் கப்பர்நாகும் நகர்களில் தீமை பெருகியதையும் அவர்களின் இதயச் சிந்தனைகளில் நாள் முழுவதும் தீமை உருவானதையும் அவர் கண்ணாரக் கண்டதால் கலங்கி நிற்கிறார். அவர்கள் வாழ்வில் முன்னேற்றம் காண்பார்கள் என்பதற்காக ஆண்டவர் இயேசு கிறிஸ்து பல வல்ல செயல்களை அந்நகர்களில் செய்தார். அவையெல்லாம் பலனில்லாமல் போயிற்று. அவருடைய எதிர்பார்ப்பு எல்லாம் எரிந்து சாம்பலானது. நம் ஒவ்வொருவரையும் வரலாறு படைக்க வேண்டும் என்ற...