† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light

ஒளிந்திருப்பது ஒன்றுமில்லை.

லூக்கா 8:16-18 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். நாம் செய்கிற எதையும் கடவுள்முன் மறைக்க முடியாது. அவர் அனைத்தையும் அறியும் ஆண்டவர். வெளிப்படாது மறைந்திருப்பது ஒன்றுமில்லை. அறியப்படாமலும் வெளியாகாமலும் ஒளிந்திருப்பதும் ஒன்றுமில்லை. ஆகவே மறைவாய் செய்யும் பாவங்களுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள் என்ற அவசரச் செய்தியோடு வேகமாக வருகிறது இன்றைய நற்செய்தி வாசகம். பாவங்களுக்கு நம்மால் முற்றுப்புள்ளி வைக்க முடியும். முயன்றால் முடியாததது உண்டோ? இரண்டு முயற்சிகளை எடுத்து பார்ப்போமா. 1. பயம் தீமையின் மீதான தெய்வபயம் கண்டிப்பாக இருக்க வேண்டும். தெய்வபயம் பாவத்தின் தொல்லைகளிலிருந்து விடுதலை அளிக்கிறது. தெய்வபயம் பாவத்தினால் வரும் விளைவுகளை நம் கண்முன் நிறுத்துகிறது. நமக்கு தடை போடுகிறது. 2. பாசம் கடவுள் மீது...

PLEASURE SEEKING OR TREASURE SEEKING

“You ask and you do not receive because you ask wrongly, with a view to squandering what you receive on your pleasures.” –James 4:3 Human history provides ample testimony about the effects of pleasure seeking. One pleasure is never enough. People always want the next pleasure, followed by another. Companies thrive by stoking the pleasure-seeking desires of masses of consumers. Left to our own desires, we become slaves of pleasure-seeking, servants of the cravings of our own flesh (see Rm 6:12). I challenge you to spend the next ten seconds looking at a crucifix. As you gaze on Jesus’ crucified...

வாழ்க்கையின் முதலமைச்சர் ஆகுங்கள்

மாற்கு 9:30-37 இறையேசுவில் இனியவா்களே! பொதுக்காலம் 25ம் ஞாயிறு வழிபாட்டைக் கொண்டாட வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். நமக்கு முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற எண்ணம் அதிகமாக உண்டு. தழிழ்நாட்டின் முதலமைச்சர் பதவி நமக்கு கிடைக்குமா என்ற கனவு கண்டதும் உண்டு. அதுவெல்லாம் பெரிதல்ல. யார் ஒருவர் வாழ்க்கையின் முதலமைச்சர் ஆகுகிறாரோ அவரே அனைத்தையும் வென்றவர். அவர் ஒருவருக்கே இந்த உலகம் சொந்தம். அவர் ஒருவரே சிகரத்தை எட்டிப்பிடித்த சிறப்பான மனிதர் ஆவார். வாழ்க்கையின் முதலமைச்சராக மாறுங்கள். முயன்றால் உங்களால் கண்டிப்பாக முடியும் என்ற உற்சாக வார்த்தைகளோடு வந்திருக்கிறது பொதுக்காலம் 25ம் ஞாயிறு. யார் வாழ்க்கையின் முதலமைச்சர்? தன்னைப் போன்று அடுத்தவர்களை நினைப்பவா்களையும் நேசிப்பவர்களையுமே நாம் முதலமைச்சர்கள் என்று சொல்ல முடியும். ஆண்டவர் இயேசு கிறிஸ்து இன்றைய நற்செய்தியிலே...

THE MIRACLE OF A HUNDREDFOLD

“But some fell on good soil, grew up, and yielded grain a hundredfold.” –Luke 8:8 The Lord promises we can receive His Word to bear fruit a hundredfold. This is like saying $1,000 will turn into $100,000 which is an astronomical increase. Most Christians believe God’s Word will help, bless, teach, and even heal them, but few expect the hundredfold harvest. If we took seriously the Lord’s promise of a hundredfold, we would do our very best to: tremble in prayer as we open the Bible, kiss the Bible before opening it, never miss our daily Bible reading, go to...

திருவிவிலியத்தை தியானி… மாறுவாய் நீ ஞானி…

லூக்கா 8:4-15 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். “கடவுள் யாரென்று அறிந்துக்கொள்ள திருவிவிலியத்தை படித்தேன். அது நான் யாரென்று காட்டியது” என்று பெரியவர்கள் மிகவும் அருமையாகச் சொல்வார்கள். திருவிவிலியத்தை வாசித்து தியானிக்க தியானிக்க நாம் நாம் சுத்தமாக்கப்படுகிறோம், புதுப்பிக்கப்படுகிறோம். திருவிவிலியம் நம்மை ஞானியாக மாற்றும் ஏணி என எழிலுற, அழகுற அருமையான கருத்துக்களை சுமந்து வருகிறது இன்றைய நற்செய்தி வாசகம். நாம் ஞானியாக மாற மறந்துவிடாமல் இரண்டு செயல்பாடுகளை செய்ய வேண்டும். 1. தொடு திருவிவிலியத்தை தினமும் எனது கரங்களால் தொட வேண்டும். இதன் அர்த்தம் என்ன? தினமும் திருவிவிலியத்தோடு என் தொடர்பு இருக்க வேண்டும். வாசித்து நான் கடவுளோடு பேச வேண்டும். நம் நன்றியை வெளிப்படுத்த...