† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light

பொல்லார் கையினின்று என்னை விடுவித்தருளும்

திருப்பாடல் 71: 1 – 2, 3 – 4, 5 – 6, 17 பொல்லார் யார்? தீங்கு செய்யக்கூடியவர்களே பொல்லார். தீங்கு செய்யக்கூடிய மனிதர்களிடமிருந்து விடுவித்தருள வேண்டும் என, திருப்பாடல் ஆசிரியர் வேண்டுகிறார். யாரெல்லாம் சுயநலத்தோடு சிந்திக்கிறார்களோ அவர்களே தீங்கு செய்யக்கூடியவர்கள். அவர்கள் வெறுமனே உடலுக்கு மட்டும் தீங்கு செய்யக்கூடியவர்கள் அல்ல. மாறாக, அவர்கள் ஆன்மாவிற்கும் ஊறு விளைவிக்கக்கூடியவர்கள். அவர்களின் சுயநலத்திலிருந்தும், தீங்கு செய்யக்கூடிய எண்ணத்திலுமிருந்து தன்னைக் காத்தருள கோரிக்கை வைக்கிறார். ஏன் கடவுளிடம் கோரிக்கை வைக்கிறார்? கடவுள் மட்டும் தான், அரணாகவும், கோட்டையாகவும் இருந்து தன்னை காக்க முடியும் என்று, ஆசிரியர் நம்புகிறார். மனிதன் பலவீனன். அவன் நல்லவனாக வாழ வேண்டும் என்று விரும்பினாலும், நினைத்தாலும் இந்த உலகம் அவனை சும்மா விட்டுவிடாது. ஒருவன் நல்லவனாக வாழ விரும்பினால், அவன் சந்திக்கக்கூடிய சவால்கள் இந்த உலகத்தில் நம்ப முடியாதவையாக இருக்கும். அந்த அளவுக்கு சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும்....

THE FOOLISH “FANATICISM” OF FAITH

“Many Jews were going over to Jesus and believing in Him on account of Lazarus.” —John 12:11 On the first day of the Easter season, the Lord through His Church will question us publicly to determine whether we believe in God the Father, God the Son, and God the Holy Spirit. If each of us says “I do” to these questions, we will be making the greatest decision a human being can make. By this act of faith, we will completely submit our intellect and will to God (Catechism of the Catholic Church, 143). “Faith is first of all a...

உலகமா? உன்னதவரா?

யோவான் 12:1-11 மார்த்தா மரியா குடும்பத்தின் உற்ற நண்பர் இயேசு. எருசலேமில் இட நெருக்கடியான பாஸ்கா காலத்தில், பயணிகள் பெத்தானியாவில் தங்குவது வழக்கம். நாடோடி வாழ்வு வாழ்ந்து, தலைசாய்க்க இடமில்லாத இயேசுவுக்கு இவர்களின் வீடே இளைப்பாறும் இடம். அங்கு நடந்த நிகழ்ச்சியின் ஒவ்வொரு நிகழ்வும், கதை மாந்தர்களும் நம்மை பிறதிப்பலிக்கிறவர்களாகவே தெரிகின்றனர். புனித வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ள நாம் மரியா போல இயேசுவிடம் உறவு கொண்டுள்ளோமா? அல்லது யூதசைப்போல இயேசுவிடம் நடந்து கொள்கின்றோமா? மரியா: ஆண்டவரின் காலடியில் அமர்ந்து அவரது வார்த்தைக்குச் செவி சாய்த்தவர். (லூக்10:34) ஆண்டவரிடத்தில் அளவுக்கதிகமாக அன்பினைக் கொண்டவள், அவ்வன்பினை தன் செயலில் காட்டியவள். ‘விலையுயர்ந்த’, ‘நல்ல’ என்ற ஒவ்வொரு சொல்லும் அவரின் அன்பிற்கு சான்றே, அவர் தன் சீடர்களின் கால்களை நீரினால் கழுவும்முன்பே இவள் இவரின் கால்களை நறுமணத்தைலம் கொண்டு கழுவுகிறார். சீடத்துவத்தின் சிகரம் ஆகுகிறாள். யூதாஸ்: இயேசுவை காசுக்காகவே காட்டிக்கொடுக்கப் போகிறான் என்பதின் முன்னோட்டமாகவே இந்நிகழ்வு...

FORGIVING AND GIVING ALL

“In His anguish He prayed with all the greater intensity, and His sweat became like drops of blood falling to the ground. Then He rose from prayer and came to His disciples.” —Luke 22:44-45 Jesus prayed always (see Lk 18:1). He even prayed while He was hanging on the cross and dying. He prayed: “Father, forgive them; they do not know what they are doing” (Lk 23:34). With His last breath, He prayed: “Father, into Your hands I commend My spirit” (Lk 23:46). These two prayers are related. To give ourselves totally to the Lord, we must forgive. When Jesus...

குருத்து ஞாயிறு

லூக் 22 :14- 23:56 சந்தித்து சாதிக்க, சிந்திக்க குருத்து ஞாயிறு, ‘ஆண்டவருடைய திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு’ என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் இன்று இயேசு எருசலேம் நகரில் நுழைந்ததே தமதுப் சாவினை சந்திப்பதற்காகவே. இன்றைய முதல் இரண்டு வாசகங்களும் நற்செய்தியும் கிறிஸ்துவின் திருப்பாடுகளை நமக்கு நினைவூட்டுகின்றன. கிறிஸ்துவின் பாடுகளின் மறைபொருளை அறிந்து, நமது துன்பங்களை கிறிஸ்துவின் பாடுகளுடன் இணைத்து அவற்றை மீட்பின் சக்தியாக மாற்றக் கற்றுக் கொள்ள வேண்டும். ஏன் எருசலேம்? இறைவாக்கினர் யாரும் எருசலேமில் மடிவதில்லை என்பதை அவர் நன்கு தெரிந்திருந்தார். இதுவரை என் காலம் இன்னும் வரவில்லை என்றவர் காலம் வந்துவிட்டதை மிகவும் நன்றாக அறிந்தே எருசலேம் நகருக்குள் நுழைகிறார். ஏன் இன்று? யூதர்களின் ஆண்டுகளில் ‘நிசான்’ என்னும் மாதம் மிகவும் முக்கியமானது. காரணம் அவர்களுக்கு இதுவே முதல்மாதம், இந்த மாதத்தின் பத்தாம் நாள் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படம் நாள், ஆம் அந்த நாளில் தான் யூதர்கள் தங்கள்...