† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light

ஆண்டவரின் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர்

திருப்பாடல் 119: 1 – 2, 4 – 5, 17 – 18, 33 – 34 இன்றைய திருப்பாடல் திருச்சட்டத்தைப்படி நமக்கு அறிவுரை கூறக்கூடிய பாடலாக அமைகிறது. திருச்சட்டம் என்பது என்ன? அது கடவுளின் சட்டம். அது கடவுள் கொடுத்திருக்கிற, அமைதியாக, நிறைவோடு வாழ கடவுள் கொடுத்திருக்கிற ஒழுங்குமுறை. நம்மை பக்குவப்படுத்தக்கூடிய வழிமுறைகள் அடங்கிய தொகுப்பு. நாம் கடவுளின் அரியணை நோக்கிச்செல்ல உதவும் வழித்தடம். வாழ்வைக் காட்டக்கூடிய வழி. கடைப்பிடிப்பதற்கு கடினமாக இருந்தாலும், வாழ்வின் முழுமையான நிறைவை நாம் பெற்றுக்கொள்வதற்கு இதுதான் ஒரே வழி. கடவுளின் ஒழுங்குமுறைகளைக் கடைப்பிடிப்பது எளிதானது அல்ல. ஆனால், அதனை கடைப்பிடிக்க வேண்டும் என்கிற எண்ணம் இருந்தாலே போதும், கடவுள் நம்மை வழிநடத்துவார் என்கிற நம்பிக்கையை இது நமக்கு முழுமையாக உணர்த்துகிறது. அதனைக் கடைப்பிடிப்பதற்கு நாம் கடவுளிடம் பலத்தைக் கேட்க வேண்டும். எந்தவொரு நன்மையான செயலையும் செய்கிறபோது, நமக்கு நிச்சயம் பலவிதமான சங்கடங்கள் வரும்....

WHAT RELIGION ARE YOU?

“Jeroboam thought to himself: ‘The kingdom will return to David’s house. If now this people go up to offer sacrifices in the temple of the Lord in Jerusalem, the hearts of this people will return to their master, Rehoboam, king of Judah.’ ” —1 Kings 12:26-27 Jeroboam realized that religion is part of human nature. Therefore, human beings must be religious. The only question is: “Will we be committed to the only true religion, Judaism fulfilled in the Church, or will we be involved in some of the many thousands of false religions?” Some think they have proven Jeroboam wrong:...

உதவிக்கரம் நீட்டுவோம்

இயேசு காதுகேளாதவருக்கு குணம் கொடுத்துவிட்டு கடவுளின் வார்த்தையைப் தெக்கப்போலி பகுதியில் போதித்துக்கொண்டிருக்கிறார். மக்கள் மூன்று நாட்களாக இயேசுவோடு தங்கியிருக்கிறார்கள். யார் இந்த மக்கள்? விவிலிய அறிஞர் ஒருவர் அழகான விளக்கம் ஒன்று தருகிறார். மாற்கு நற்செய்தி 5வது அதிகாரத்தில், இயேசு கெரசேனர் பகுதியில் பேய் பிடித்த மனிதர் ஒருவரை நலமாக்குகிறார். அந்த மனிதன் இயேசுவோடு கூட இருக்க வேண்டும் என்று விரும்பினான். இயேசுவோ அவரைப்பார்த்து, “உமது வீட்டிற்குப்போய் ஆண்டவர் உமக்குச்செய்ததையெல்லாம் உம் உறவினருக்கு அறிவியும்” என்றார். அவர் சென்று, இயேசு தமக்குச் செய்ததையெல்லாம் தெக்கப்போலி நாட்டில் அறிவித்து வந்தார், என்று பார்;க்கிறோம். இயேசுவோடு இப்போது இருக்கும் மக்கள், பேய்பிடித்திருந்த மனிதர் வழியாக இயேசுவைப்பற்றி அறிந்த மக்கள். அந்த மனிதர் சொன்னதை இப்போது நேரில் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். இயேசு சீடர்களிடம் ஒரு ஆலோசனைக்கேட்கிறார். இது சீடர்களுக்கு ஒருவிதமான பயிற்சி. என்னதான் சீடர்கள் சொல்கிறார்கள் பார்ப்போம் என்று சொல்லி, அவர்களிடம் அப்போது இருக்கிற சூழ்நிலையை விவரிக்கிறார்....

நன்றாக யாவற்றையும் செய்கிறார்

காது கேளாதவரின் நிலைமை உண்மையிலேயே, மிக மிக கடினமானது. அவர்களின் நிலையும் தர்மசங்கடமானது. யாராவது அவர்களைப்பற்றிப் பேசினாலும், சிரித்தாலும், அவர்களைப்பற்றிப் பேசுவது போலவும், அவர்களைப்பரிகசிப்பது போலவும் தான் இருக்கும். அப்படிப்பட்டச் சூழ்நிலையில்தான் இந்த மனிதனும் இருந்திருக்க வேண்டும். கண் இல்லையென்றால் கூட, தங்களை யார் என்ன சொல்கிறார்கள் என்பது தெரியாமல் இருக்கும். ஆனால், தங்களைப்பற்றிப்பேசுவதை உணர்ந்தாலும், பதில் சொல்ல முடியாத நிலைமை உண்மையிலேயே பரிதாபமானது. இயேசு அந்த மனிதனின் உணர்வுகளை அறிந்து கொள்கிறார். அவன் வாழ்வில்பட்ட வலிகளை இயேசு நிச்சயமாக உணர்ந்திருக்க வேண்டும். எனவேதான், அவனைத் தனியே அவர் அழைத்துச்செல்கிறார். அவனை ஒரு நோயாளியாக மட்டும் இயேசு பார்க்கவில்லை. அவனை ஒரு மனிதனாக, உணர்வுள்ளவனாகப் பார்க்கிறார். இயேசுவின் குணப்படுத்துகின்ற நிகழ்ச்சி, அவரை மக்கள் மத்தியில் ”நன்றாக யாவற்றையும் செய்கிறவராகக்” காட்டுகிறது. இயேசு நல்லது செய்ய வந்தார் என்பதைவிடு, நல்லதை மீட்க வந்தார் என்பது பொருத்தமாக இருக்கும். ஏனென்றால், தொடக்கத்தில் கடவுள் இந்த...

FROM HEALING TO BAPTISM TO HEALING

“Their amazement went beyond all bounds: ‘He has done everything well. He makes the deaf hear and the mute speak!’ ” —Mark 7:37 Jesus healed people physically as a sign of healing people spiritually. He opened the ears of the deaf and freed the tongues of the mute as a sign that He would open our ears so that we can have a greater faith and open our mouths to proclaim that faith (see Mk 7:35). Our spiritual deafness, dumbness, blindness, and paralysis are potentially damning. We live in potentially devastating spiritual conditions. However, Jesus is our Hope, our only...