† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light

ஆண்டவர் பெயர் வாழ்த்துக்குரியது

தானியேல் 1: 29, 30 – 31, 32 – 33 சாத்ராக்கு, மேசாக்கு, ஆபெத்நெகோ என்கிற மூன்று இளைஞர்கள் ஆண்டவர்க்கு அஞ்சி வாழ்ந்தவர்கள். அதனால், அவர்கள் தண்டிக்கப்பட இருந்தார்கள். ஒன்று கடவுளை மறுதலிப்பது அல்லது மடிவது. இதுதான் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட சோதனை. அவர்கள் மடிவதை தேர்ந்தெடுத்தார்கள். எனவே அவர்கள் தீச்சூளையில் தூக்கி எறியப்பட்டனர். சூளையின் தீ எந்தளவுக்கு அதிகமாக இருந்தது என்றால், அவர்களைத் தூக்கி எறியச் சென்ற காவலர்கள், தீயின் தாக்கம் தாங்காமல் எறிந்து போயினர். ஆனால், இவர்கள் எரியாமல், தீச்சூளையினுள் நடமாடிக்கொண்டிருந்தார்கள். இறைவன் அவர்களுக்குச் செய்த ஆச்சரியத்தில், அவர்கள் கடவுளைப் புகழ்ந்து பாடுவதுதான் இன்றைய பாடல். கடவுளை மூதாதையரின் கடவுளாக அவர்கள் பாடுகிறார்கள். அவர்களது முன்னோர்களாக இருந்த ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபின் கடவுள் மாட்சியும், தூய்மையும் நிறைந்தவர் என்று பாடுகிறார்கள். கடவுள் வாக்குறுதி மாறாதவராக இங்கே சித்தரிக்கப்படுகிறார். கடவுளின் வாக்குறுதி ஏதோ ஒரு தலைமுறையோடு நின்றுவிடவில்லை. வழிவழியாக கடவுளின்...

MIGHTY MITE

“He called His disciples over and told them: ‘I want you to observe that this poor widow contributed more than all the others who donated to the treasury.’ ” —Mark 12:43 Jesus accused the scribes of devouring the savings of widows and making a show of religion (Mk 12:40). Then He commended a widow for putting “all that she had to live on” into the collection box (Mk 12:44). Why did Jesus commend a widow for helping finance the scribes’ misuse of religion to advance themselves? In this Scripture passage, Jesus does not seem to focus on how the Temple...

ஏழை எளியவர்களின் கடவுள்

மறைநூல் அறிஞர்களுக்கு இன்றைய நற்செய்தி மூலம், இயேசு எச்சரிக்கை விடுக்கிறார். அவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை அடுக்குகிறார். தொங்கலான ஆடை என்பது, ஒரு மதிப்பைக் கொடுக்கக்கூடிய ஆடை. ஆடை தரையில் பட நடந்து வருவது, மேன்மையைக் குறிக்கக்கூடியதாக, மக்கள் மத்தியில் உணரப்பட்டது. ஏனென்றால், கடினமாக உழைப்பவர்களோ, அவசரமாக நடந்து செல்கிறவர்களோ, இந்த ஆடையை அணிய முடியாது. தங்களை மேன்மைமிக்கவர்களாக, தங்களுக்கு பணிசெய்ய வேலையாட்கள் இருக்கிறார்கள், என்பதைக் காட்டிக்கொள்ளக்கூடியவர்களால் மட்டும் தான், இதுபோன்ற ஆடைகளை அணிய முடியும். ஆக, மற்றவர்களை தங்களுக்குக் கீழானவர்களாக மதிக்கக்கூடிய எண்ணம் தான், அவர்களை தொங்கலான ஆடை அணியச்செய்திருக்கிறது. சட்ட வல்லுநர்கள் தங்களுடைய போதனைகளுக்கு, எந்த கூலியும் பெற்றுக்கொள்ளக் கூடாது. தங்களது வாழ்விற்குத் தேவையான பொருளாதாரத்தை, செல்வத்தை அவர்கள், வேலை செய்து சம்பாதித்துக் கொள்ள வேண்டும். ஆனால், அப்படிச் செய்யாமல், ஏழை, எளியவர்களை ஏமாற்றி, தங்களுக்கு வேண்டியதை, கடவுளின் பெயரால் இவர்கள் பெற்றுக்கொண்டார்கள். சாதாரண, பாமர மக்களை ஏமாற்றிப்பிழைக்கக்கூடிய செயல்கள்,...

THE WORD AT WORK WITHIN YOU (1 THES 2:13)

“My heart stands in awe of Your word.” —Psalm 119:161 Presentation Ministries publishes One Bread, One Body for the purpose of opening up the Church’s daily Eucharistic Scripture readings to as many people as possible. We pray fervently that each teaching will touch your hearts deeply and bear great fruit in your lives, in the Church, and in God’s kingdom. Our guiding principle is to use a number of Scripture references and quotations on these pages, for “all Scripture is inspired of God and is useful for teaching” (2 Tm 3:16). The real power in any of these teachings comes...

புதிய சிந்தனைகள்

எபிரேய மொழியிலிருந்து எழுதப்பட்ட கிரேக்க விவிலியத்தில், “ஆண்டவர்“ (Lord) என்ற வார்த்தை ”யாவே” (Yahweh) என்ற வார்த்தையின் மொழிபெயர்ப்பு. இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறபோதெல்லாம், இஸ்ரயேல் மக்கள் மனத்தில், கடவுளைப்பற்றிய எண்ணம் தான் வரும் எப்போதெல்லாம், அவர்கள் ”ஆண்டவர்” என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார்களோ, அப்போதெல்லாம், கடவுள் செய்த நன்மைகள், அவருடைய ஆற்றல்கள், மாண்பு மற்றும் மகத்துவம், இஸ்ரயேல் மக்களுக்கு நினைவில் வரும். இயேசு இந்த வார்த்தையை பயன்படுத்துவதன் மூலம், மக்கள் மனதில் ஒரு புதிய சிந்தனையை விதைக்கிறார். மெசியா என்றாலே, அரசர், போர், மண்ணகத்தில் அரசாட்சி என்ற மனநிலையோடு, சிந்தனையோடு வாழ்ந்து வந்த மக்களுக்கு, இயேசு இந்த வார்த்தையின் மூலம் கடவுளின் அரசை நினைவுறுத்துகிறார். மக்கள் மனதில் இருக்கக்கூடிய மெசியா, போர் தொடுத்து, கடவுளின் அரசை நிலைநிறுத்த வேண்டும் என்ற, எண்ணத்தை எடுத்துவிட்டு, உண்மையான மெசியா, அமைதியின் அரசர் என்ற செய்தியை அவர் விதைக்கிறார். இயேசுவின் மிகப்பெரிய சவால், மக்களின் தவறான புரிதல்களை...