† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light

`

மருத்துவரை யார் தேடுவார்கள்? எப்போது தேடுவார்கள்? நோய்வாய்ப்பட்டிருக்கிற அல்லது தான் பாதிக்கப்பட்டிருக்கிறோமோ என்று நினைக்கிற ஒருவர் தான் மருத்துவரை நாடுவார். அதுவரை யாரும் மருத்துவரை நினைத்துக் கொண்டிருப்பதில்லை. தேவை எழுகிறபோது மருத்துவரின் உதவியை ஒருவா் நாடுகிறார். தன்னை நோயாளி என்று கருதாத, நினைக்காத, நம்பாத யாரும் மருத்துவரை தேடுவது கிடையாது. இதுதான் பரிசேயர்கள், மறைநூல் அறிஞர்களின் வாழ்க்கையிலும் நடந்து கொண்டிருந்தது. அவர்கள் தங்களை தூய்மையானவர்களாக, புனிதமானவர்களாக கருதிக்கொண்டிருந்தனர். கடவுளின் இரக்கம் தங்களுக்கு தேவையில்லை என்ற எண்ணம் கொண்டிருந்தனர். அப்படிப்பட்ட எண்ணம் கொண்டிருக்கிறவர்களுக்கு இந்த உவமையை இயேசு சொல்கிறார். இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இரண்டு பேரும் வேறுபாடான எண்ணங்களைக் கொண்டிருக்கிறவர்கள். இன்றைக்கு இந்த சமுதாயத்திலும் ஒவ்வொருவரும் வேறுபாடான கோணத்தில் சிந்திக்கிறவர்களாகத்தான் இருக்கிறார்கள். அது நேர்மறையாக சிந்திக்கப்பட்டால் வளர்ச்சியை நோக்கியதாக இருக்கும். எதிர்மறையாகச் சிந்தித்தால் அழிவை நோக்கியதாக இருக்கும். இந்த இரண்டு பிள்ளைகளிடத்திலும் தந்தை ஒரே கோரிக்கையைத்தான் வைக்கிறார். பதில் முரண்பட்ட பதிலாக அவருக்கு...

NO-KNOW

“We do not know.” –Matthew 21:27 Balaam called himself the man who “knows what the Most High knows” (Nm 24:4, 16). He was so highly regarded for his ability as a fortune-teller that nations sent large delegations of dignitaries with large amounts of money to obtain his services (Nm 22:6-7, 15). Yet this man who “sees what the Almighty sees” (Nm 24:16) couldn’t even get the picture when his donkey began to talk to him! (Nm 22:28ff) He had to admit that he “did not know that” God opposed His greedy plot against Israel (Nm 22:34). The Jewish religious leaders...

அதிகாரப்போதை

இயேசுவை ஆளும்வர்க்கமும், அதிகாரவர்க்கமும் எதற்காக எதிர்த்தார்கள்? என்பதற்கான விடையாக வருவது இன்றைய நற்செய்தி வாசகம். தலைமைக்குருக்களும், மூப்பர்களும் கடவுளைப்பற்றிய செய்தியையும், மக்களை ஆன்மீகத்தில் கட்டி எழுப்புவதற்காக நியமிக்கப்பட்டவர்கள். உண்மையில் இயேசு அந்த பணியைத்தான் செய்துகொண்டிருந்தார். அப்படியென்றால், அவர்கள் இயேசுவின் பணியை, போதனையைக் கேட்டு மகிழ்ச்சியடைந்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் இயேசுவின் மீது கோபப்படுகிறார்கள். இயேசுவை விரோதியாகப் பார்க்கிறார்கள். எதற்காக? அதிகாரம் தான் அங்கே மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. ஆள்வதில் ஏற்கெனவே அரசர்களுக்குள்ளாக அதிகாரப்பிரச்சனை. இதில் சமயமும் விலக்கல்ல என்ற தவறான முன் உதாரணத்திற்கு, இவர்கள் அனைவருமே எடுத்துக்காட்டுகள். ஆள்வதும், அதிகாரமும் மக்களை நல்வழிப்படுத்தவே. அதனை இயேசு செய்துகொண்டிருக்கிறார். மக்கள் நலனில் அவர்கள் அக்கறை கொண்டிருந்தால், நிச்சயம் இயேசுவை ஒரு விரோதியாகப் பார்த்திருகக மாட்டார்கள். மாறாக, அவர்கள் இயேசுவை தங்களுக்கு உதவி செய்யக்கூடியவராகப் பார்த்திருப்பார்கள். அதிகாரம் தான் அவர்களை கடவுளையே எதிர்ப்பவர்களாக மாற்றியிருந்தது. இன்றைக்கு நாம் வாழக்கூடிய உலகத்திலும் அதிகாரப்போட்டிக்காக எத்தனை இழப்புக்களை...

THE TRAGEDY OF TRAGEDIES

“The Spirit of the Lord God is upon me, because the Lord has anointed me.” –Isaiah 61:1 The Holy Spirit wants to bring Good News to the poor, heal the broken-hearted, and set captives free (Is 61:1). Only the Holy Spirit can renew the face of the earth (Ps 104:30). However, we stifle, quench (1 Thes 5:19), sadden, and grieve the Spirit (Eph 4:30). Then the poor stay depressed and oppressed; the broken-hearted are shattered; the captives are chained with even more chains; and the face of the earth becomes more defaced. One of the greatest tragedies in life is...

எல்லாத்தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர்

லூக்கா 1: 47 – 48, 49 – 50, 53 – 54 அன்னை மரியாள் உள்ளப்பூரிப்போடு இந்த பாடலை பாடுகிறார். இந்த பாடல் பழைய ஏற்பாட்டில், எல்கானாவின் மனைவி அன்னா பாடிய பாடல். அந்த பாடலை, அன்னை மரியாளுக்கு ஏற்ற வகையில், லூக்கா நற்செய்தியாளர் பொருத்துகிறார். கடவுளின் மகளை கருத்தாங்கப் போகிற பூரிப்பு, அன்னை மரியாளின் உள்ளத்தில் நிரம்பியிருக்கிறது. அன்னை மரியாள் கலக்கத்திலிருந்து விடுதலைப் பெற்ற மகிழ்ச்சியில் பாடுகிறார். ”நான் கன்னி ஆயிற்றே? இது எங்ஙனம் நிகழும்” என்கிற சந்தேகம், வானதூதரால் நிவர்த்தி செய்யப்பட்டவுடன், கடவுளின் மகனைத் தாங்குவதற்கு இறைவன் தனக்கு தந்திருக்கிற, இந்த வாய்ப்பை எண்ணிப் பார்த்து, அவர் மகிழ்ச்சியோடு பாடுகிறார். இனி வரக்கூடிய எல்லா தலைமுறையினரும், அன்னை மரியாளைப் போற்றுவர் என்று, எதற்காக அன்னை பாடுகிறார்? அன்னை மரியாள் தன்னை தகுதியற்ற நிலைக்கு ஒப்பிட்டுப் பேசுகிறார். ஒரு பெண்ணாக, சமூகத்தின் பொருளாதாரப் பார்வையிலும் சாதாரணமானவராக இருக்கிற...