† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light

படைகளின் ஆண்டவர் இவர்

திருப்பாடல் 24: 7, 8, 9, 10 படைகளின் ஆண்டவர் என்கிற வார்த்தை, பழைய ஏற்பாட்டு நூலில் ஏறக்குறைய 261 முறை வருகிறது. 1சாமுவேல் 1: 3 ல், முதன்முறையாக இந்த வார்த்தைப் பயன்படுத்தப்படுகிறது. விண்ணகத்தில் இருக்கிற படைகளுக்கு தலைவராக ஆண்டவர் இருக்கிறார் என்பதுதான் இதனுடைய பொருளாகும். இஸ்ரயேல் மக்களின் படைகளுக்கும் கடவுள் தான் தலைவர் என்பதையும் மறைமுகமாகக் குறிக்கக்கூடிய சொற்களாகவும் இவற்றைப் பார்க்கலாம். தாவீது அரசர், படைகளின் ஆண்டவர் என்று சொல்கிறபோது, இந்த விண்ணகத்திற்கு மட்டுமல்லாது, மண்ணகத்திற்கும், இங்கிருக்கிற படைகளுக்கும் ஆண்டவர் தான் தலைவராக இருக்கிற என்கிற பொருளில், இங்கே எழுதுகிறார். ஆக, கடவுள் தான் அனைத்திற்கும் அதிபதி என்பதை, இந்த வார்த்தைகள் நமக்குத் தெளிவுபடுத்துகிறது. படைகளின் தலைவராக இருக்கிறவர் தன்னுடை சேனையை வழிநடத்தி, அடிமைத்தனத்திலிருந்து விடுதலை கொடுக்க வேண்டும். மக்களைப் பாதுகாக்க வேண்டும். விண்ணகத்திற்கும், மண்ணகத்திற்கும் அதிபதியாக இருக்கக்கூடிய கடவுள் தன்னுடைய மகனை இந்த உலகத்திற்கு அனுப்புகிறார். பாவத்திலிருந்து...

HAVING OUR DIFFERENCES

“Do not disdain the discipline of the Lord.” —Hebrews 12:5 When many of today’s Christians hear about the discipline of the Lord, they think of getting up early for Mass, being faithful to daily prayer and Bible reading, fasting, and persevering in a commitment to serve the Lord. When the writer of Hebrews thought of discipline, he thought of Christians having their blood shed (Heb 12:4) and being martyred. The people to whom the book of Hebrews was addressed also knew discipline to be public insult and trial, imprisonment, and the confiscation of their possessions by the government (Heb 10:33-34)....

ஆண்டவருடைய கனிவான செயல்களை மறவாதே!

திருப்பாடல் 103: 1 – 2, 13 – 14, 17 – 18 ஆண்டவருடைய கனிவான செயல்கள் எவை? ஆண்டவர் நம் குற்றங்களை மன்னிக்கின்றார். நம் நோய்களை குணமாக்குகின்றார். நம் உயிரைப் படுகுழியினின்று மீட்கின்றார். மொத்தத்தில் நம் வாழ்நாளை அவர் நலன்களால் நிறைவுறச் செய்கிறார். எனவே, நாம் ஆண்டவரையும், அவர் நமக்குச் செய்திருக்கிற உதவிகளையும் மறக்கக்கூடாது. இந்த செயல்களை நாம் மறக்காமல், ஆண்டவர்க்கு நன்றியுணர்வோடும், நம்பிக்கை உணர்வோடும் வாழுகிறபோது மட்டும் தான், இந்த செயல்களை நாம் தொடர்ந்து நமது வாழ்க்கையில் பெற முடியும். அதைத்தான் இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு உணர்த்துகிறது. இன்றைய நற்செய்தியில் இயேசு தன்னுடைய சொந்த ஊரில், வல்ல செயல்கள் செய்ய முடியாத நிலையில் இருப்பதைப் பார்க்கிறோம். தீய ஆவிகளைத் துணிவோடு எதிர்த்து அடக்கியவர், காற்றையும், புயலையும் உரிமையோடு கடிந்து கொண்டவர், நோயாளிகளை ஏராளமான எண்ணிக்கையில் குணப்படுத்தியவர், இங்கே தன்னுடைய சொந்த ஊரில் சுகம் கொடுக்க முடியாமல்...

THE TOUCH

” ‘If I just touch His clothing,’ she thought, ‘I shall get well.’ ” –Mark 5:28 A woman who was hemorrhaging touched Jesus. According to Jewish law, this made Jesus unclean (cf Lv 15:25, 27). Instead, His touch made the woman healed and whole (Mk 5:29ff). Touching Jesus is unlike touching anyone else in the world. Jesus reached out to touch and take the hand of a dead, twelve-year-old girl (Mk 5:41). According to Jewish law, this made Jesus unclean (see Nm 19:11). Instead, Jesus’ touch raised the girl from the dead (Mk 5:42). No one else’s touch can raise...

நோயினையும் சாவினையும் முறியடிப்போம்

படிப்படியாக இறைமகன் இயேசுவின் இறைத்தன்மையை படம்படித்துக் காட்டுகிறார் நற்செய்தியாளர் தூய மாற்கு. இதன் உச்சமாக புயலை அடக்கியவர் (4: 35-41) பேயை ஓட்டியவர் (1:21-27) இன்றைய நற்செய்தியில் பிணியைப் போக்குகின்றார், இறந்தவரை உயிர்ப்பிக்கின்றார். இரண்டு அற்புதத்திற்கும் அடிப்படையாக இருப்பது “நம்பிக்கையோ”. நோயோ, இறப்போ, எதுவும் நம் ஆண்டவரின் இயேசுவின் மீது நம்பிக்கையோடிருந்தால் நம்மை அனுகாது, அனுகினாலும் அவர் அதனை வெற்றிக் கொள்வார். இதன் மூலம் அவர் மருத்துவர்கெல்லாம் மருத்துவராகவும், “என்னில் நம்பிகை கொள்பவன் இறப்பினும் வாழ்வான்” (யோவான் 11:26) என்ற இறைவார்த்தையும் நிறைவுப் பெறுகிறது. இன்றைய நற்செய்தியில் இருவருமே நம்மை ‘பயத்திலிருந்து நம்பிகையை’ நோக்கி அழைத்து செல்கின்றனர். இந்த இருவரைப் போலவே நாமும் இயேசுவின் “காலில் விழுவோம”; நம்பிகையோடும் உறுதியோடும். இந்த இருவரைப் போலவே இயேசுவின் “காலில் விழுவோம்” அன்போடும் பக்தியோடும் இந்த இருவரைப் போலவே இயேசுவின் “காலில் விழுவோம்” எதிர்பார்ப்போடும் மகிழ்ச்சியோடும் இந்த இருவரைப் போலவே இயேசுவின் “காலில் விழுவோம்”...