† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light

மீண்டு(ம்) எழுவோம்

இந்த உலகத்தில் கவலைகொள்ளாத மனிதர்கள் இல்லை. கவலைப்படுவதினால் நாம் ஒன்றும் செய்துவிட முடியாது, என அறியாதவர்களும் யாரும் இல்லை. ஆனாலும், ஒவ்வொருநாளும் கவலை என்கிற கரையான், நம்மை அரித்துக்கொண்டே இருக்கிறது. இத்தகைய சூழலில் இயேசுவின் வார்த்தைகள் மீண்டும் ஒருமுறை, நமது சோகமயமான வாழ்வை சிந்தித்துப் பார்த்து, மகிழ்ச்சியான வாழ்வு வாழ அழைப்புவிடுக்கிறது. அடிப்படையில் கவலை கொள்வது என்பது, கடவுள் நம்பிக்கையற்ற தன்மையைக் குறிக்கிறது. நாம் கடவுளை நம்புகிறோம். அவர் நம்மை கரம்பிடித்து வழிநடத்துகிறார் என்று விசுவசிக்கிறோம். அந்த விசுவாசத்தைத்தான் நாம் வாழ்ந்து கொண்டு, அறிக்கையிடுகிறோம். ஆனாலும், பல வேளைகளில் கவலை, அந்த நம்பிக்கையை, காட்டாற்று வெள்ளம் போல, அடித்துச்சென்று விடுகிறது. அதனை எப்படி எதிர்கொள்வது? விடாமுயற்சி. மீண்டும், மீண்டும் நாம் விழுந்தாலும், மீண்டும், மீண்டும் நாம் எழ வேண்டும். நமது முயற்சியை எக்காரணத்தைக்கொண்டும், எந்த காலத்திலும் விட்டுவிடக்கூடாது. இயேசு எவ்வாறு தனது கல்வாரி பயணத்தின்போது, கீழே விழுந்தாலும், மீண்டும், மீண்டும் எழுந்தாரோ,...

EYE OF THE HURRICANE

“If your eyes are good, your body will be filled with light.” –Matthew 6:22 Are your eyes good? Good eyes see only what God wants them to see. Good eyes do not look around carelessly (see Prv 4:25-27). That’s too dangerous. Good eyes are selective. We close our eyes lest we look on evil (Is 33:15). It’s important to protect them from the evil one. We must hold faith up as a shield (Eph 6:16) or be hit in the eye and be wounded. Our eyes and thoughts “should be wholly directed to all that is true, all that deserves...

நல்ல செயல்பாடுகள்

ஒரு மிகப்பெரிய செல்வந்தன் ஒருவன், துறவியைச் சந்தித்தானாம். இந்த உலகத்திலே தான் நினைத்தது எல்லாம் சாதித்து விட முடியும், தனக்கு தேவையானதை எல்லாம் வாங்கிவிட முடியும். என்னால் வாங்க முடியாதது ஒன்றுமேயில்லை, என்று தற்பெருமையாகச் சொன்னானாம். அவர் கூறியதை அமைதியாக கேட்ட அந்த துறவி, ஒரு சிறிய ஊசியைக்கொடுத்து, ”தயவுசெய்து, நீங்கள் இறந்து மேலுலகத்திற்கு வருகிறபோது, இதனை எனக்காக கொண்டு வருவீர்களா? என்று கேட்டானாம். கோபமடைந்த அந்த செல்வந்தன், இது என்ன முட்டாள்தனமான பேச்சு? யாராலும் இதனைக் கொண்டு வரமுடியாதே? என்று கத்தினான். ”அதேபோலத்தான், நீ சேர்த்து வைத்திருக்கிற செல்வமும். இதனால், மேலுலகத்தில் ஒரு பயனும் கிடையாது. ஒரு பைசா கூட, நீ இங்கிருந்து அடுத்த உலகத்திற்கு எடுத்துச்செல்ல முடியாது. பகிர்ந்து வாழ்வதற்கு முயற்சி செய்” என்று துறவி தன் வழியே சென்றாராம். வாழ்க்கையில் தேவைக்கு அதிகமாக செல்வத்தைச் சம்பாதித்துவிட்ட பலபேரின் மனநிலை, இந்த செல்வந்தனின் மனநிலையைப் போலத்தான் இருக்கிறது. இந்த...

FATHER’S DAY

“Your Father knows what you need.” –Matthew 6:8 The essence of the Christian life is knowing and believing in God the Father’s love for us (1 Jn 4:16). Jesus was sent to reveal the Father’s love (Jn 15:9). The Holy Spirit cries out in our hearts “Abba,” that is, “Father” (Rm 8:15; Gal 4:6). When Jesus taught us to pray, He taught us to say “Our Father” (Mt 6:9). When Satan tempts us, he questions whether we are sons and daughters of God the Father (Mt 4:3, 6). Prayer is primarily expressing and deepening our relationship with our Father through...

ஆண்டவரின் செயல்கள் உயர்ந்தவை

திருப்பாடல் 111: 1 – 2, 3 – 4, 7 – 8 யூதர்கள் தங்களின் வாழ்க்கையில் நடக்கிற எல்லாவற்றையும், கடவுளின் செயலோடு பொருத்திப்பார்க்கிறவர்கள். தங்கள் வாழ்வில் நடக்கிற எல்லாமே கடவுளின் ஆணைப்படி தான் நடக்கிறது. கடவுள் தான் தங்களை வழிநடத்துகிறார் என்பதில், ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தனர். இந்த பிண்ணனியில் தான், திருப்பாடல் ஆசிரியர், ஆண்டவரின் செயல்கள் நம்பிக்கைக்குரியவை என்று சொல்கிறார். இதனுடைய பொருள் என்ன? வாழ்க்கையில் ஒரு சில விரும்பாத நிகழ்வுகள் நடக்கிறபோது, நாம் கடவுளிடத்தில் கோபப்படுகிறோம். கடவுள் தான் நம்மை இந்த நிலைக்கு விட்டுவிட்டார் என்று வருத்தமடைகிறோம். அவரிடத்தில் நாம் முறையிடுகிறோம். ஆனால், காலம் கடந்து நாம் சிந்திக்கிற வேளையில், நாம் விரும்பாத நிகழ்வுகள் தான், நமக்கு மிகச்சிறப்பான ஆசீர்வாதத்தை தந்திருப்பதை, நம்முடைய வாழ்வில் நாம் அனுபவித்திருப்போம். அப்போதுதான், நாம் கடவுளுக்கு அந்த விரும்பாத நிகழ்வுகளைத் தந்ததற்கு நன்றி செலுத்துகிறோம். இந்த பிண்ணனியில் பார்க்கிறபோது, கடவுளின் செயல்கள்...