† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light

தங்களை விடுவித்த இறைவனை மறந்தார்கள்

திருப்பாடல் 106: 6 – 7b, 13 – 14, 21 – 22, 23 ”திரும்பிப்பார்த்தல்” என்பது வெற்றிக்கான ஆரம்பப்புள்ளி என்பார்கள். திரும்பிப்பார்ப்பது என்பது நம்முடைய வாழ்வை நாம் சீர்தூக்கிப்பார்ப்பது என்கிற பொருளாகும். ஒவ்வொருநாளும் நம்முடைய வாழ்வை நாம் திரும்பிப்பார்க்கிறபோது, அது நமக்குள்ளாக பல மாற்றங்களை ஏற்படுத்துகிறது. எந்த இடத்தில் நாம் தவறியிருக்கிறோம், எந்த இடத்தில் நாம் சரி செய்ய வேண்டும்? எவையெல்லாம் நம்முடைய பலமாக இருக்கிறது என்பதை, நமக்குக் கற்றுக்கொடுப்பதாக இது அமைந்திருக்கிறது. இன்றைய திருப்பாடலில், இஸ்ரயேல் மக்களுக்கு இறைவன் செய்த வியத்தகு செயல்களையும், அதற்கு முரணாக, நன்றியில்லாதத் தன்மையோடு இஸ்ரயேல் மக்களின் பதில்மொழிகளையும், ஆசிரியர் எடுத்துரைக்கிறார். எகிப்தில் இஸ்ரயேல் மக்களுக்கு பல அற்புதச்செயல்களைச் செய்து, இறுகிய மனதுடைய பார்வோன் மன்னரிடமிருந்து, அவர்களை விடுவித்தார். ஆனால், இறைவன் செய்த நன்மைகளையெல்லாம் பாராமல், இறைவனை விட்டு, இஸ்ரயேல் மக்கள் விலக ஆரம்பித்தனர். இந்த செயல்களையெல்லாம் திருப்பாடல் ஆசிரியர் திரும்பிப்பார்ப்பது, அவர்கள்...

REPAIR SHOP

“Miriam and Aaron spoke against Moses.” –Numbers 12:1 Moses prayed for Miriam after she accused him, and she was healed (Nm 12:13ff). Jesus prayed for and suffered for His accusers. Those who repented and received Him were given eternal life. He “bore wrongs patiently” and achieved the greatest work of mercy ever, dying for His enemies (see Rm 5:8-10). Some years ago, when the news broke of sexual scandals of some Catholic priests, a certain man was publicly berating all priests, even on occasion during Holy Mass. This angered me to the point that I had to bring it to...

பயப்பட வேண்டாம்

பயம் என்பது இந்த மானிட வாழ்வின் அன்றாட நிகழ்வுகளுள் ஒன்று. நாம் பலவற்றிற்கு பயப்படுகிறோம். இன்றைய நற்செய்தி வாசகத்தின் சிந்தனையாக இந்த பயத்தை எடுத்துக்கொள்வோம். இதனை நாம் இரண்டு விதங்களில் சிந்திக்கலாம். எவற்றிற்கு பயப்பட வேண்டும்? எவற்றிற்கு பயப்படக்கூடாது? வாழ்வின் சவால்களுக்கு, வாழ்க்கையில் சந்திக்கும் சங்கடங்களுக்கு, வாழ்வின் தொல்லைகளுக்கு நாம் பயப்படக்கூடாது. பயப்படத் தேவையில்லை. மாறாக, நேர்மையற்ற செயல்பாடுகளில் நாம் ஈடுபடும்போது, பொய்மைக்கு துணைபோகிற போது, நாம் பயப்பட வேண்டும். நமது வாழ்க்கை இதற்கு முற்றிலும் முரணானதாக இருக்கிறது என்றால், அது மிகையாகாது. காரணம், நாம் சவால்களை, சங்கடங்களைக் கண்டு பயப்படுகிறோம். நேர்மையற்ற காரியங்களுக்கு துணைபோவதற்கு நாம் பயப்படுவது கிடையாது. இன்றைய நற்செய்தியிலும் இதே தவறுதான் நடக்கிறது. சீடர்கள் இயேசுவோடு இருந்திருக்கிறார்கள். பல பேய்களை இயேசு ஓட்டுவதை, கண்கூடாக கண்டிருக்கிறார்கள். புதுமைகளை அவர்களும் செய்திருக்கிறார்கள். ஆனாலும், அவர்கள் பயப்படுகிறார்கள். இயேசுவைக் கண்டே பயப்படுகிறார்கள். நேர்மையான காரியங்களில் நாம் ஈடுபடுகிறபோது, நிச்சயம் பல...

CLOSING THE DEAL

“Give them something to eat yourselves.” –Matthew 14:16 Jesus has placed His disciples in a fantastic position. On one side is the human race, which continually grows hungry and has a daily need for food. On the other side is the Lord, Who has a continual desire to feed, nourish, and even satisfy hungry humanity (see Ps 81:11, 17; Mt 14:20). God has placed us, as His disciples, between Him and the rest of mankind, charging us with feeding His people (Mt 14:16; Jn 21:15ff). We are God’s middlemen, His ambassadors (2 Cor 5:20), charged with bringing the two parties...

என் மக்கள் எனது குரலுக்கு செவிகொடுக்கவில்லை

திருப்பாடல் 81: 11 – 12, 13 – 14, 15 – 16 வேதனையினாலும், வருத்தத்தினாலும் வெளிப்படுகிற வார்த்தைகள் தான், இந்த திருப்பாடலில் வருகிற வார்த்தைகள். இறைவனுடைய பார்வையிலிருந்து இந்த வரிகள் எழுதப்பட்டுள்ளன. தான் செய்த நன்மைகளையும், அற்புதங்களையும் மறந்து, வேறு தெய்வங்களை மக்கள் நாடிச்சென்று விட்டார்களே? என்கிற வருத்தத்தை இந்த பாடலில் நாம் பார்க்கலாம். இஸ்ரயேல் மக்களின் உள்ளம் எந்த அளவுக்கு கடினமானதாக மாறிவிட்டது என்கிற ஏக்கத்தையும் இந்த பாடல் நமக்கு ஒருங்கிணைத்துக் காட்டுகிறது. இஸ்ரயேல் மக்களின் நன்றியற்றத்தனம் இங்கே வெளிப்படுத்தப்பட்டாலும், கடவுளின் அன்பில் எந்த குறையும் இல்லை என்பதும், இங்கே நமக்குத்தரப்படுகிற செய்தியாக இருக்கிறது. இஸ்ரயேல் மக்கள் மட்டும், கடவுளின் குரலைக் கேட்டிருந்தால், இவ்வளவுக்கு துன்பங்களை அனுபவிக்க வேண்டியிருக்காதே என்று கடவுள் வேதனைப்படுகிறார். நடந்தது நடந்து விட்டது. இவ்வளவு நடந்த நிகழ்வுகளுக்கும் இஸ்ரயேல் மக்கள் தான் காரணம் என்றாலும், கடவுள் அதனை பொருட்படுத்தாமல், அவர்களின் எதிரிகளை அழிக்க...