† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light

அற்புதக் குழந்தை இயேசுவின் பக்தியின் தொடக்கம்

பிரேகு நகரக் குழந்தை இயேசுவின் பக்தி இரு நூற்றாண்டுகளுக்கு மேலாக ஐரோப்பா நாடு எங்கும் பரவியிருந்த ஆரம்ப காலத்தில் குழந்தை இயேசுவின் திருச்சுரூபம் ஸ்பெயின் நாட்டிலிருந்து வந்ததென வரலாறு கூறுகிறது .அரும்பெரும் பரம்பரைச் செல்வமாக தன் குடும்பத்தில் வைத்து பேணிபாதுகாத்து வந்த இத்திருச் சுரூபத்தை மரிய மோரிக்-தெ-லாரா என்னும் ஸ்பெயின் நாட்டு இளவரசி பொலிக்செனா லோகோவிட்ஸ் என்ற தன் மகளுக்கு திருமணப் பரிசாக அளித்தாள். திருமணத்துக்குப்பின் பொகிமியாவிலுள்ள தன் கணவனின் இல்லம் செல்லுகையில் இதை அவள் தன்னுடன் எடுத்துச் சென்றாள்.கி.பி.1623 -ம் ஆண்டில் கணவன் மறைந்த பிறகு எஞ்சிய தன் வாழ்நாட்களை  பக்திப்பணியிலும் பிறரன்பு சேவையிலும் கழிக்க உறுதிபூண்டு இளவரசி பொலிக்சொனா பிரேகு நகர கார்மேல் துறவியருக்கு இந்த திருச்சுருபத்தை கொடுத்தாள். கொடுக்கும்போது அவள் கூறிய இறைவாக்கு இது உலகிலேயே மிகமிக உயர்வாக நான் மதித்துப் போற்றும் தன்னிகரில்லாத தனிப்பெரும் செல்வமான இந்தச் சுறுபத்தை உங்களுக்குச் கொடுக்கிறேன்.குழந்தை இயேசுவை மதித்து மகிமைப்படுத்துங்கள்.குறை...

கொரட்டூர் அற்புதக் குழந்தை இயேசுவின் பக்தியின் துவக்கம்

1986-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் வியாழன் மாலைத் திருப்பலிகளில் பக்தர் ஒருவர் குழந்தை இயேசுவின் சிறிய சுரூபம் ஒன்றை காணிக்கையாக கொடுத்தார்.அன்று முதல் ஒவ்வொரு முதல் வியாழன் அன்று மாலைத் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. 1990-ஆம் ஆண்டு புதிய ஆலயம் அர்ச்சிக்கப்பட்டது 14.04.1990 அன்று அற்புதக் குழந்தை இயேசுவின் பெரிய சுரூபம்,இன்னுமொரு பக்தரால் காணிக்கையாக வழங்கப்பட்டது.அதே வருடத்தில் குழந்தை பாக்கியம் பெற்றதற்காக ஒரு குடும்பம் நன்றியறிதலாக குழந்தை இயேசு சுரூபம் கொடுக்கப்பட்டது.அச்சுறுபம் ஜீபிலி ஆண்டு 2000 நினைவாக கெபி ஒன்று கட்டி அதில் அர்ச்சிக்கப்பட்டது.வியாழன் தோறும் கெபியின் முன்னால் நவநாள் சேபிக்கப்பட்டு அதன்பின் ஆலயத்தில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.அந்த வருடத்திலிருந்து மாதத்தின் முதல் வியாழன் காலை 11.00 மணிக்கு சிறப்புத் திருப்பலி ஆரம்பிக்கப்பட்டது.திருப்பலியி ல் நோயாளிகள் நலம் பெறவும் முதியோர்கள் மன அமைதியடையவும்.குழந்தையில்லாதோர் குழந்தை பாக்கியம் பெறவும்,வேலையில்லாத திண்டாட்டம் ஒழியவும்,குழந்தைகள் நற்ப்படிப்பு பெறவும் தீய பழக்கங்கள் ஒழிந்து சமுதாயம் சீர்படவும் தடைப்பட்ட திருமணங்கள்...