† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light

ஆண்டவரே! உம் பேரன்பு எங்கள் மீது இருப்பதாக

திருப்பாடல் 33: 4 – 5, 18 – 19, 20, 22 இறைவனுடைய மகிமையை, மகத்துவத்தை வெளிப்படுத்தக்கூடிய அற்புதமான பாடல் இது. கடவுளைப் போற்றுவதும், புகழ்வதும் தான், இந்த பாடலின் மையக்கருத்து. நீதிமான்கள் கடவுளைப் போற்ற வேண்டும், புகழ வேண்டும் என்று இந்த திருப்பாடல் அழைப்புவிடுக்கிறது. ஏனென்றால், அந்த அளவுக்கு கடவுளின் செயல்பாடுகள் மகிமைக்குரிதாக, வல்லமையுள்ளதாக, போற்றுதற்குரியதாக இருக்கிறது. கடவுள் மீது ஆசிரியர் வைத்திருக்கிற நம்பிக்கையோடு, கடவுளின் பிரசன்னம் எப்போதும் இருக்க வேண்டும் என்கிற செப வேண்டுதலோடு, இந்த பாடல் முடிவுறுகிறது. கடவுளின் அன்பிற்காக திருப்பாடல் ஆசிரியர் இந்த பாடலைப் பாடினாலும், விவிலியத்தில் கடவுள் எந்த அளவுக்கு மானுட சமுதாயத்தின் மீது அன்புள்ளவராக இருந்திருக்கிறார் என்பதை பார்க்கிறபோது, நமக்கு மிகவும் வியப்பாக இருக்கிறது. ஏனென்றால், கடவுளிடமிருந்து எல்லா நன்மைகளையும் பெற்றுக்கொண்ட மனிதர்கள், எப்போதுமே நன்றி இல்லாதவர்களாக, கடவுளுக்கே துரோகம் செய்கிறவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள். தொடக்க மனிதன் ஆதாம் முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட இஸ்ரயேல்...

ABBA

“This will prove that you are sons of your heavenly Father.” —Matthew 5:45 In this time of Lent, the Church emphasizes more than ever the command: “In a word, you must be made perfect as your heavenly Father is perfect” (Mt 5:48). Like our Father, we must show love practically even to our persecutors and enemies (Mt 5:44-45). Lent is traditionally a time of God the Father confirming His love for us as His sons and daughters. Before Jesus was led into the desert by the Holy Spirit (Mt 4:1), He heard His Father say: “This is My beloved Son....

அன்பே மனிதன்

மத் 5 : 43 -48 ‘அன்பே கடவுள்’ (1யோவான் 4:8) என்பது உண்மையென்றால் ‘அன்பே மனிதன்’ என்று அமைவது தான் நியதி. ஒவ்வொருவரும் கடவுளின் சாயலோடு படைக்கப்பட்டிருக்கிறோம். ‘என் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல நீங்களும் நிறைவுள்ளவராய் இருங்கள் என்கிறார் இயேசு. மனிதனின் நிறைவு என்பது அவன் புனிதனின் நிலையை அடைவதே. அவரின் சாயலோடு படைக்கப்பட்டவர்கள் அவரின் சாயலாகவே மாற வேண்டும். இது சாத்தியமா? சாத்தியமே. எப்படியென்றால், அன்பினால் இது சாத்தியமாகும். நாங்கள் தான் எங்களை அன்பு செய்கிறவர்களை அன்பு செய்கிறோமே என்பது போதாமை. மாறாக விண்ணகத் தந்தை எவ்வாறு அனைவரையும் ஒன்று போல் அன்பு செய்கிறாரோ அவரைப் போல நாமும் தீயவர்களையும், நமது பகைவர்களையும் அன்பு செய்ய வேண்டும். அவன் எனது பெயரைக் கெடுத்து விட்டானே! வாழ்வை சீர்குலைத்து விட்டானே! எனக்குரிய வாய்ப்புகளைத் தட்டிப் பறித்து விட்டானே! அவனை எவ்வாறு அன்பு செய்ய முடியும் என்று நினைக்கும் பொழுதெல்லாம்...

TODAYLIGHT SAVINGS TIME

“Lose no time.” —Matthew 5:25 “All’s well that ends well.” “If the wicked man turns away from all the sins he committed, if he keeps all My statutes and does what is right and just, he shall surely live, he shall not die” (Ez 18:21). The “good thief” lived a miserable life, but ended well and is in paradise with Jesus (Lk 23:43). Because our ending is all-important, some people wait until the end to convert to Jesus. This is a serious mistake. “Delay not your conversion to the Lord, put it not off from day to day; for suddenly...

மனநிலையும் வழிபாடும்

மத் 5 : 20 -26 கண்ணால் காணமுடியாத கடவுளை அன்பு செய்கிறேன். அவருக்குப் பலி செலுத்துகிறேன் என்று அவருக்கும் நமக்கும் உள்ள உறவினை சரிசெய்வதற்கு முன்பாக, முதலில் கண்ணால் நீ காண்கின்ற உன் அயலானோடு உள்ள உறவுச் சிக்கலை சரிசெய்ய வேண்டும் என்பதே இன்றைய நற்செய்தி நமக்கு முன் படைக்கின்ற பாடமாகும். இதற்கு பரிசேயர்களின் அறநெறியைக் காட்டிலும் இயேசுவைப் பின்பற்றுகிறவர்களின் அறநெறி சிறந்ததாக இருக்க வேண்டும். பரிசேயர்களின் அறநெறி என்பது சட்டத்தை மட்டுமே சார்ந்தது. இரக்கம், அன்பு, மன்னிப்பு இவற்றிற்குச் சட்டத்தில் வேலையில்லை. ஆனால் இயேசு ‘நான் பலியை அல்ல இரக்கத்தையே விரும்புகிறேன்’ என்று சொல்லி அவர்களின் சட்டத்திற்கு புதிய பொருளும், அழுத்தமும் கொடுக்கிறார். அவர்களின் சட்டங்கள் அனைத்தும் ஒருவரின் செயலினை மட்டும் கொண்டே மதிப்பீடு செய்யப்பட்டது. ஆனால் ஆண்டவர் கூறும் புதிய நெறியில் செயலுக்குக் காரணமான மனநிலையையும் (யுவவவைரனந) நாம் கருத்தில் கொள்ள வேண்டும் என்கிறார். எடுத்துக்காட்டாக, கொலை...