† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light

நேர்மையாளரோ மகிழ்ச்சியடைவர்

திருப்பாடல் 68: 1 – 2, 3 – 4, 5 – 6 நேர்மையாளர்கள் யார்? அவர்கள் ஏன் மகிழ்ச்சியடைவார்கள்? நேர்மையாளர்கள் என்பவர்கள், கடவுளின் சட்ட திட்டங்களுக்கு தங்களையோ முழுமையாக ஒப்புக்கொடுத்து மன்றாடுகிறவர்கள். கீழ்ப்படிதலோடு வாழ்கிறவர்கள். தங்கள் மனச்சான்றுக்கு பயந்து வாழக்கூடியவர்கள். சுயநலத்தோடு எல்லாவற்றையும் அபகரிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாதவர்கள். அவர்கள் எப்போதும் கடவுளுக்காகவே தங்களது வாழ்வை அர்ப்பணித்திருக்கிறவர்கள். அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று ஆசிரியர் சொல்கிறார். இந்த உலக வாழ்க்கையோடு ஒப்பிட்டுப்பார்க்கிறபோது, மேலே சொல்லப்பட்டிருக்கிற விழுமியங்களோடு ஒரு மனிதர் வாழ்ந்தால், அவர் நிச்சயம் கவலைகொள்வதற்குத்தான் அதிகமான காரணங்கள் நமக்குக் கிடைக்கிறது. பின்னர் எப்படி நோ்மையாளர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்? அநீதி இந்த உலகத்தில் இருந்தாலும், அதற்கென்று ஒரு வரைமுறை இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குப் பிறகு அநீதி செய்கிறவர்களால், தொடர்ந்து அநீதியோடு வாழ முடியாது. அவர்களுக்கும் ஒரு முடிவு வரும். அதுதான் இந்த திருப்பாடலில் வெளிப்படுகிறது. அநீதி செய்கிறவர்கள்...

LITTLE OLD ME

” ‘Did you receive the Holy Spirit when you became believers?’ They answered, ‘We have not so much as heard that there is a Holy Spirit.’ ” –Acts 19:2 The Lord chooses the “lowborn and despised, those who count for nothing” (1 Cor 1:28). He pours out His Spirit on all mankind, even on the servants and handmaids (Acts 2:18; Jl 3:1-2). The “God-forsaken” Samaritans, the blasphemer Paul, and the pagan Cornelius received the Holy Spirit (see Acts 8, 9, 10). The twelve Ephesians, like the twelve apostles, received the Holy Spirit and “began to speak in tongues and to...

இயேசுவின் விண்ணேற்றம்

சீடர்கள் மகிழ்வோடு யெருசலேம் திரும்புகிறார்கள். அந்த மகிழ்ச்சியோடு கடவுளைப்போற்றிப் புகழ்கிறார்கள். சீடர்களின் மகிழ்விற்கு என்ன காரணம்? எது இயேசுவின் பிரிவிலும் சீடர்கள் மகிழ்ச்சியாக இருக்க உதவியது? காரணம், இத்தனை ஆண்டுகளாக அவர்களோடு இருந்த இயேசு, இப்போது அவர்களிடமிருந்து நிரந்தரமாக பிரிகிறார். எனவே அந்த பிரிவு சீடர்களுக்கு வருத்தத்தைத்தான் கொடுத்திருக்க வேண்டும். ”யாரிடம் செல்வோம் இறைவா?” என்று தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்த சீடர்களால், எப்படி இயேசுவின் பிரிவை மகிழ்வோடு பார்க்க முடிந்தது? சீடர்களின் உறுதிப்பெற்றிருந்த விசுவாசம் தான் அவர்களுக்கு அந்த மகிழ்ச்சியைத் தந்தது? அது என்ன விசுவாசம்? இயேசு எங்கும் செல்லவில்லை. நம்மில் அவர் கலந்திருக்கிறார். இத்தனை நாட்களாக, அவர் ஒரு இடத்தில் மட்டும் இருந்தார். ஆனால், இப்போது எங்கு சென்றாலும் இருக்கிறார். அந்த எண்ணம் அவர்களை மகிழ்ச்சிப்படுத்தியது. வாழ்க்கையில் எது நடந்தாலும் அவர்களுக்கு கவலையில்லை. ஏனென்றால், உயிர்த்த இயேசு அவர்களோடு இருக்கிறார். அவர்களை வழிநடத்துகிறார். அவர்களை உற்சாகப்படுத்துகிறார். அவர்களுக்கு உந்துசக்தியாக இருக்கிறார்....

YOU AIN’T SEEN NOTHIN’ YET

“When Priscilla and Aquila heard him, they took him home and explained to him God’s new way in greater detail.” –Acts 18:26 Satan’s most effective way of preventing us from receiving the Holy Spirit’s graces is to make us think we already have them. We certainly won’t seek what we think we’ve already found. The devil tries to pass off good things for God’s things. For example, Apollos had many good things about him. He was eloquent, “an authority on Scripture and instructed in the new way of the Lord,” and “full of spiritual fervor” (Acts 18:24-25). Yet he didn’t...

நம்முடைய நற்செய்திப்பணி

திருத்தூதர் பணி 18: 23 – 28 அப்போல்லா என்ற பெயருடைய யூதர் ஒருவரைப் பற்றிய செய்தி இன்றைய முதல் வாசகத்தில் நமக்குத் தரப்படுகிறது. அவர் சொல்வன்மை மிக்கவர் என்றும், மறைநூல்களில் புலமை வாய்ந்தவர் என்றும், அவருக்கு அடைமொழிகள் தரப்படுகிறது. இவற்றிற்கும் மேலான ஒரு பண்பும் அவருக்குத் தரப்படுகிறது. அதுதான் அவருடைய பணிவாழ்க்கையில், மிகச்சிறந்த பண்பாக இருக்க முடியும் என்று நினைக்கிறேன். அவர் ஆர்வமிக்க உள்ளம் கொண்டிருந்தார். ”ஆர்வமிக்க உள்ளத்தோடு இயேசுவைப் பற்றிய செய்தியைப்பிழையற அறிவித்தும் கற்பித்தும் வந்தார். இறைவனுடைய பணியைச் செய்வதற்கு நமக்கு முதலாவதாக ஆர்வம் இருக்க வேண்டும். எந்த ஒரு செயலையும் இரண்டு விதத்தில் நாம் செய்ய முடியும். ஏனோதானோவென்று வெறும் கடமைக்காக செய்வது முதல் வகை. செய்வதில் நிறைவோடு, ஆர்வத்தோடு செய்வது இரண்டாவது வகை. அப்போல்லோ இரண்டாவது வகையான மனிதராக இருக்கிறார். அந்த ஆர்வம் பல உதவி செய்யக்கூடிய நண்பர்களையும், கேட்கிறவர்களை கிறிஸ்துவின்பால் ஈர்க்கக்கூடியதாகவும் இருக்கிறது. திருப்பாடல்...