Author: Jesus - My Great Master

தூய மிக்கேல், கபிரியேல், ரபேல் – அதிதூதர்கள் விழா

ஈனோக்கு எழுதிய நூல், ஏவபடாத நூலாக பார்க்கப்படுகிறது. எனவே அது விவிலியத்தின் ஒரு நூலாக இணைக்கப்படவில்லை. அது யூதப்பாரம்பரியத்திலிருந்து வந்த நூல். ஏவப்படாத நூலாக இருந்தாலும், விவிலிய வரலாற்றுப்பிண்ணனியை அறிந்து கொள்ள அது கொஞ்சம் உதவுகிறது. கடவுளுடைய திருமுன்னிலையில் ஏராளமான வானதூதர்கள் பணிபுரிகிறார்கள். அவர்களில் முதன்மைத் தூதுவர்களாக ஏழு பேர் இருக்கிறார்கள் என இந்த புத்தகத்திலிருந்து நாம் அறிய வருகிறோம். அவர்கள், கபிரியேல், மிக்கேல், இரபேல், உரியல், இரகுவேல், ரெமியேல், செரேகுவேல். அவர்களில் முதன்மைத்தூதுவர்களாக குறிப்பிடப்படுகிறவர்கள் இன்றைக்கு நாம் திருவிழாவைச்சிறப்பிக்கிற கபிரியேல், மிக்கேல், இரபேல். மிக்கேல் மற்றும் கபிரியேல் தூதுவர்கள் இஸ்லாம் சமயத்திலும், யூத சமயத்திலும் தூதுவர்களாக ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள். கத்தோலிக்க விவிலியத்தில் தோபித்து புத்தகம் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால், தோபித்து புத்தகத்தை “உறுதிப்படுத்தப்பட்ட” புத்தகமாக மற்ற கிறிஸ்தவர்கள் ஏற்றுக்கொள்ளாததனால், இபேலையும் ஏற்றுக்கொள்வதில்லை. கத்தோலிக்கத்திருச்சபையின் பாரம்பரியப்படி, எண்ணற்ற தூதுவர்கள் கடவுள் திருமுன்னிலையில் கடவுளைப் போற்றிப் புகழ்ந்து, ஆர்ப்பரித்து, கடவுளை மகிமைப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் அனைவருமே...

QUITE A FOLLOWING

“Someone said to Him, ‘I will be Your follower wherever You go.’ ” –Luke 9:57 Mass Readings: September 28 First: Job 9:1-12,14-16; Resp: Psalm 88:10-15; Gospel: Luke 9:57-62 The essence of the Christian life is to follow Christ – not on our terms, but on His. In following Him, Jesus calls us to make a total, self-sacrificing commitment – not even to expect a roof over our heads (see Lk 9:58). He also expects an immediate commitment – no delays (see Lk 9:59-61). Finally, following Jesus is forever. When we put our hands to the plow and begin to work...

இயேசுவைப் பின்பற்றுவோம்

நாம் அனைவருமே இயேசுவைப் பின்பற்ற வேண்டும் என்பதுதான் இன்றைய நற்செய்தி (+லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 57-62 ) வாசகத்தின் சாராம்சம். இன்றைக்கு பல புனிதர்களை தாய்த்திருச்சபை நமக்குத் தந்திருக்கிறது. இந்த புனிதர்கள் அனைவருமே சிறப்பான வாழ்வை வாழ்ந்தவர்கள். இப்படியெல்லாம் கூட வாழ முடியுமா? என்று, நாமே வியந்து பார்த்தவர்கள். நாம் வாழ்ந்த இந்த சமுதாயத்தில் வாழ்ந்த, புனித அன்னை தெரசா இதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. இந்த நவீன காலத்திலும் ஏழை, எளிய மக்கள் மீது அன்பு கொண்டு, சிறப்பான வாழ்வை வெளிப்படுத்தியவர்கள் நமது நாட்டில் பணிபுரிந்த இந்த புனிதை. எப்படி இவர்களால் இப்படி ஒரு வாழ்க்கை வாழ முடிந்தது என்றால், அவர்களது எளிமையான பதில், இறைமகன் இயேசுகிறிஸ்து. இயேசுவைப் பின்பற்றி வாழ்ந்த அந்த வாழ்க்கை தான், அவர்களால் இப்படிப்பட்ட சிறப்பான வாழ்வை வாழ, உறுதுணையாக இருந்தது. இயேசு தான், நமக்கு வழிகாட்டி. முன்மாதிரி. திருத்தூதர்கள் இயேசுவை பின்பற்றி தான்,...

LIFE LINES

“Why is light given to the toilers, and life to the bitter in spirit?” –Job 3:20 Mass Readings: September 27 First: Job 3:1-3,11-17,20-23; Resp: Psalm 88:2-8; Gospel: Luke 9:51-56 Nearly all of us can identify in some way with Job’s misery. Sometimes life is bitter (Jb 3:20) and full of drudgery (Jb 7:1). Relief eludes us (Jb 3:13), and death seems better than any hidden treasure the future could possibly hold (Jb 3:21). Then it gets worse. We “have forgotten what happiness is” (Lam 3:17; Jb 7:7). When life is no longer worth living, then we’ve forgotten what life really...

கடவுளின் அன்பு

இன்றைக்கு இந்த உலகத்தில் வாழக்கூடிய மனிதர்கள் பலபேர், கடவுளை பழிவாங்கக்கூடியவராக, கோபப்படக்கூடியவராக, இரக்கமில்லாதவராக பார்க்கக்கூடிய மனநிலையைப் பெற்றிருக்கிறார்கள். இந்த மனநிலை இன்றைக்கு உள்ள மனநிலை மட்டுமல்ல. இயேசுவோடு வாழ்ந்த சீடர்களின் மனநிலையும் கூட. தங்களை ஏற்றுக்கொள்ளவில்லை என்று கேள்விப்பட்டவுடன், சீடர்களுக்கு கோபம் வருகிறது. எப்படியாவது அவர்களை பழிவாங்கி, தங்களது ஆளுமையை நிலைநிறுத்த வேண்டும் என்று, அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், இயேசு அதனை தவறு என்று அவர்களுக்குச் சுட்டிக்காட்டுகிறார். கடவுள் தன்னுடைய வல்லமையை, வலிமையை சாதாரண மனிதர்களுக்கு காட்ட வேண்டும் என்பதில்லை. அவர் அனைத்தையும் கடந்தவராக இருக்கிறார். அவர் மனிதர்கள் மட்டில் மிகப்பொறுமையோடு இருக்கிறார். கடவுள் எவ்வளவு தான் மனிதர்கள் மீது அன்பு வைத்திருந்தாலும், மனிதர்கள் கடவுளின் அன்பைப் புரிந்து கொள்ள முடியாதவர்களாகத்தான் இருக்கிறார்கள். அதற்காக, கடவுள் அவர்கள் மீது கோபப்படவில்லை. அதனை சாதாரணமாக எடுத்துக் கொள்கிறார். அவர்கள் மீது கோபப்படும் தன்னுடைய சீடர்களை, அவர்களது செயல் தவறு என்பதை எடுத்துரைக்கிறார். காரணம்,...