Author: Jesus - My Great Master

இறைவனின் அருள்

இறைவனுடைய அருளைப்பெறுவது என்பது மிகப்பெரிய பேறு. அதற்கு ஈடுஇணை இந்த உலகத்திலே எதுவும் கிடையாது. அதற்கு மேல் பெறக்கூடிய சிறப்பு இந்த உலகத்திலே இல்லை. மரியாளுக்கு கடவுளுடைய வார்த்தை அறிவிக்கப்பட்டபோது, இத்தகைய மகிழ்ச்சி அவளுள் நிறைந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஏனென்றால், வானதூதர் அவளைப்பார்த்து, ”அருள்மிகப்பெற்றவரே!வாழ்க!” என்று வாழ்த்துகிறார். கடவுளுடைய அருளை அன்னை மரியாள் பெற்றிருக்கிறாள் என்பதுதான் இதனுடைய பொருள். ஆக, அந்த வார்த்தைகள் அன்னை மரியாளுக்கு சொல்ல முடியாத அளவுக்கு ஆனந்தத்தைக் கொடுத்திருக்கும். அதே வேளையில், கடவுளின் அருள் மற்றொரு அனுபவத்தையும் தாங்கியதாக இருக்கும். அதுதான் மரியாளின் இதயத்தை வாளாக ஊடுருவ இருப்பதாகும். கடவுளின் அருள் கொடுக்கப்படுவது பெற்றுக்கொண்டு வைத்திருப்பதற்கு மட்டும் அல்ல. அது வாரி வழங்கப்படுவதற்காக கொடுக்கப்படுகிறது. அதில், நாம் நமது வாழ்வை, தியாகம் செய்ய வேண்டியது வரலாம். இழப்புகளைச் சந்திக்கலாம். ஆனால், கடவுளின் அருளைப்பெறுவதற்கு, எதையும் இழப்பதற்கு தயாராக இருக்கிறேன் என்பதுதான், அன்னை மரியாளின் வாழ்வாக இருந்தது....

“O COME, O COME IMMANUEL?”

“The virgin shall be with Child, and bear a Son, and shall name Him Immanuel.” –Isaiah 7:14 Mass Readings: December 20 First: Isaiah 7:10-14; Resp: Psalm 24:1-6;Gospel: Luke 1:26-38 One of the greatest prophecies in the history of the human race is Isaiah’s prophecy of “Immanuel.” This does not merely mean that God is present but that God is incarnate (see Mt 1:23). “The Word became flesh and made His dwelling among us” (Jn 1:14). God became a man. Immanuel is Jesus, Who is God incarnate, crucified, risen, glorified, and eucharistic. Immanuel is Jesus, a Sign as “deep as the...

நேர்மையுற்றோரின் வாழ்வு

கடவுளின் தூதர் மரியாளை வாழ்த்துகிறபோது, மரியாள் கலங்குகிறாள். “இந்த வாழ்த்து எத்தகையதோ” என்ற அச்சம் கொள்கிறாள். மரியாள் எதற்காக கலங்க வேண்டும்? கடவுளின் தூதரே அவரை வாழ்த்துகிறபோது, அவள் மகிழ்ச்சி தானே கொண்டிருக்க வேண்டும். அதை விடுத்து, அவள் கலங்குவது எதற்காக? என்ற கேள்வி நிச்சயம் நமது உள்ளத்திலே எழும். யார் நம்மைப் புகழ்ந்தாலும், அதிலே மகிழ்ச்சி அடைவதை விட, அதில் நாம் எச்சரிக்கை உணர்வு கொண்டிருப்பது மிக முக்கியமானதாகிறது. யார் நம்மைப் புகழ்கிறார்களோ அவர்கள் மட்டில் கொண்டிருக்க வேண்டிய எச்சரிக்கை உணர்வல்ல, நமது வாழ்வை இதே போன்று வாழ வேண்டும் என்கிற எச்சரிக்கை உணர்வு நமக்குத் தேவைப்படுகிறது. இதுவரை சிறப்பாக வாழ்ந்திருக்கிறோம். இனியும், மற்றவர்களின் நல்ல வார்த்தைகளுக்கு ஏற்ப, புகழ்ச்சிக்கு ஏற்ப, நமது வாழ்வை வாழ வேண்டிய பொறுப்புணர்வு இங்கே நமக்கு தேவைப்படுகிறது. அந்த பொறுப்புணர்வு, இவ்வளவு நாள் வாழ்ந்த வாழ்வை, இனிவரக்கூடிய நாட்களிலும் சிறப்பாக வாழ வேண்டிய, அந்த...

SALVATION IS INCARNATE

“Prepare for the Lord a people well-disposed.” –Luke 1:17 Mass Readings: December 19 First: Judges 13:2-7,24-25; Resp: Psalm 71:3-6,16-17; Gospel: Luke 1:5-25 In today’s Scripture readings, God takes the initiative to break into human lives and begin to deliver His people. His deliverance occurs through the conception of children, in this case Samson and John the Baptizer (see Jgs 13:5ff; Lk 1:13ff). These babies prepare the way for the birth of another Baby, Jesus. God does not drop salvation impersonally out of the sky. He sends His salvation in incarnate, human packages to which we can relate and whom we...

மனஉறுதி

கடவுள் நம்பிக்கை உள்ளவர்களும், கடவுள் மீது பற்று உள்ளவர்களும் தங்களது வாழ்வில் சந்திக்கும் சோதனை, பல மடங்கு வேதனையானது. ஏனென்றால், மக்களின் கேலிப்பேச்சுக்களும், உள்ளத்தைக் காயப்படுத்தும் பேச்சுக்களும் அடிக்கடி வாழ்வில் நடக்கக்கூடியதாக இருக்கும். கடவுள், கடவுள் என்று பின்னால் சென்றானே, கடவுள் இவனுக்கு என்னதான் கொடுத்தார், என்ற எகத்தாளப் பேச்சுக்கள், மக்கள் நடுவில் அன்றாடம், நாம் பார்க்கக்கூடிய நிகழ்வு. இப்படிப்பட்ட ஒரு நிலையில் தான் செக்கரியா மாட்டிக்கொண்டார். செக்கரியாக ஒரு குரு. கடவுளுக்கும், மனிதருக்கும் இடையே பாலமாக இருக்கக்கூடியவர். மக்களின் விண்ணப்பங்களை, தான் செலுத்தும் பலி மூலமாக, இறைவனிடம் எடுத்துச்சொல்கிறவர். அப்படிப்பட்ட, குருவுக்கு மிக்ப்பெரிய குறை வாழ்வில் இருந்தது. அதுதான் குழந்தை இல்லாத குறை. நிச்சயம் பலபேருடைய ஏளனத்திற்கு அவர் ஆளாகியிருப்பார். பலிசெலுத்துகிறபோதெல்லாம், தனக்காக, தன்னுடைய மனைவிக்காக மன்றாடியிருப்பார். ஆனால், ஒன்று தெளிவாகத்தெரிகிறது. அவர் சோர்ந்து போகவில்லை. உறுதியாக இருக்கிறார். எனவே தான், இத்தனை ஆண்டுகளானாலும், உண்மையான கடவுளை விட்டு விலகிச்செல்லாமல்...