Author: Jesus - My Great Master

உதவி செய்வோம்

இயேசுவைப்பற்றிய செய்தி சுற்றுப்புறமெங்கும் பரவிக்கொண்டிருந்தது. அவருடைய வல்லமை, நோயாளர்களைக் குணமாக்கும் ஆற்றல், அதிகாரம் மக்கள் மத்தியில் பிரபலமாகிக்கொண்டிருந்தது. அதை நிச்சயமாக மறைத்து வைக்க முடியாது என்கிற அளவுக்கு, மக்கள் இயேசுவைத்தேடி வர ஆரம்பித்தனர். இயேசு பேதுருவின் இல்லத்தில் இருப்பதைக்கேள்விப்பட்டு, ஓய்வுநாள் முடிகின்ற நேரத்திற்காக காத்திருந்து, ஓய்வுநாள் முடிந்தவுடன், நோயாளர்களை இயேசுவிடம் கொண்டு வருகிறார்கள். மூன்று இடங்களில் இயேசு பொதுவாக நோயாளர்களைக் குணப்படுத்துகிறார். 1. தொழுகைக்கூடம் 2. நண்பர்களில் இல்லம் 3. தெரு வீதி. எங்கே இயேசுவின் உதவி தேவை என்றாலும், அங்கே உதவி செய்வதுதான் இயேசுவின் பணியாக இருந்தது. மனிதத்தேவையை நிறைவேற்றுவதற்கு, அவர் நாளோ, நேரமோ, இடமோ, ஆளோ பார்க்கவில்லை. தேவையைப்பூர்த்தி செய்வதில் கவனத்தோடு இருந்தார். தேவையில் இருக்கிற ஒவ்வொருவருக்கும் தனது உதவி கிடைக்க வேண்டும் என்பதில் இயேசு உறுதியா இருப்பதை இன்றைக்கு நற்செய்தி தெளிவாக்குகிறது. உதவி என்பது நாளோ, இடமோ, ஆளோ பார்த்து செய்வதல்ல. தேவையை நிறைவேற்றுவதாக இருக்க வேண்டும்....

CHANGE THE SUBJECT

“In subjecting all things to Him, God left nothing unsubjected. At present we do not see all things thus subject, but we do see Jesus crowned with glory and honor.” –Hebrews 2:8-9 Mass Readings: January 10 First: Hebrews 2:5-12; Resp: Psalm 8:2,5-9; Gospel: Mark 1:21-28 Everyone and everything is to be subjected to Jesus. “He went to heaven and is at God’s right hand, with angelic rulers and powers subjected to Him” (1 Pt 3:22). “Now He waits until His enemies are placed beneath His feet” (Heb 10:13), “so that at Jesus’ name every knee must bend in the heavens,...

இறை வல்லமையை நம்புவோம்

தீய ஆவிகளைப்பற்றி பலவிதமான நம்பிக்கைகளும், கதைகளும் யூத மக்களிடையே உலாவி வந்தது. யார் இந்த தீய ஆவிகள்? இவைகளின் பிறப்பிடம் என்ன? மூன்று வகையான கருத்துக்கள் தீய ஆவிகளைப்பற்றி உலாவி வந்தது. 1. மனிதர்களைப்போல அவைகளும் படைப்புக்கள் தான் என்கிற நம்பிக்கை மக்களிடத்தில் இருந்தது. 2. தீயவர்களாக வாழ்ந்தவர்கள் இறந்தபிறகும், அதே நோக்கத்தோடு அலைவதாகவும் நம்பிக்கை இருந்தது. 3. தொடக்க நூல் 6: 1 – 8 ல் சொல்லப்பட்ட நிகழ்வையும், தீய ஆவிகளோடுப் பொருத்திப்பார்த்தார்கள். இன்னும் பல கதைகள் தீய ஆவிகளைப்பற்றி மக்களிடையே இருந்து வந்தது. நாமும் இந்த தீய ஆவிகளைப்பற்றிய கதைகளை நம்பலாம், நம்பாமல் இருக்கலாம். நாம் நம்புகிறோமோ, இல்லையோ, இயேசு வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த மக்கள் முழுமையாக நம்பினார்கள். இந்த நற்செய்திப்பகுதியின் மூலமாக நாம் கற்றுக்கொள்ளும் செய்தி, கடவுளின் வல்லமையின் மீது நாம் நம்பிக்கை வைக்க வேண்டும். இன்றைய சமூகத்தில், சாத்தான் அனைவரையும் மிஞ்சியவன் என்கிற எண்ணம்...

LIVE DAILY YOUR BAPTISM

“Jesus was baptized…” –Matthew 3:16 Mass Readings: January 9 First: Isaiah 42:1-4,6-7; Resp: Psalm 29:1-4,3,9-10; Second: Acts 10:34-38; Gospel: Matthew 3:13-17 Baptism forgives and erases our sins (Catechism, 403, 405). Jesus never sinned. So why did He submit to Baptism? “The baptism of Jesus is on His part the acceptance and inauguration of His mission as God’s suffering Servant. He allows Himself to be numbered among sinners” (Catechism, 536). In addition, the Father reaffirmed Jesus’ Sonship, which was important, since Satan was about to attack His status as God’s Son (Mt 4:3ff). In accepting Baptism, “already [Jesus] is anticipating the...

இயேசு எதற்காக திருமுழுக்குப்பெற வேண்டும்?

இயேசு எதற்காக திருமுழுக்குப்பெற வேண்டும்? என்ற கேள்வி நம் ஒவ்வொருவரின் மனதில் எழுவது இயல்பு. மத்தேயு 3: 6 ல் வாசிக்கிறோம்: “மக்கள் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு யோர்தான் ஆற்றில் யோவானிடம் திருமுழக்குப் பெற்றுவந்தார்கள்”. இயேசு பாவமே அறியாதவர், கடவுளின் திருமகன். அப்படிப்பட்டவர் பாவங்களிலிருந்து மனமாற்றம் பெற்றதன் அடையாளமாக திருமுழுக்கு யோவானால் கொடுக்கப்பட்ட திருமுழுக்கை ஏன் பெற வேண்டும்? பொதுவாக, யூத வரலாற்றிலே திருமுழுக்கு என்பது யூதர்களுக்கு கொடுக்கப்படவில்லை. மாறாக, வேற்று மதத்திலிருந்து யூத மதத்தைத் தழுவுகிறவர்களுக்குத்தான் கொடுக்கப்பட்டது. காரணம், யூதர்கள் தங்களை கடவுள் தேர்ந்தெடுத்த மக்களினம், தூய்மையான மக்களினம் என்று கருதியதால், தங்களைப் பாவிகள் என்று ஒருபோதும் கருதியதில்லை. யோவானுடைய போதனைக்குப்பிறகு தான், தாங்களும் கடவுள் முன்னிலையில் பாவிகளாகத்தான் இருக்கிறோம், நமது வாழ்வும் மாற்றம் பெற வேண்டும் என்ற தெளிவு அவர்களின் உள்ளத்தில் ஏற்படுகிறது. யூத வரலாற்றிலே இது ஒரு புதிய அத்தியாயம். இத்தகையச்சூழ்நிலையில்தான் இயேசு தானும் திருமுழுக்குப்பெற ஒப்புக்கொடுக்கிறார்....