Author: Jesus - My Great Master

ஆண்டவரே! நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்

கடவுள் நம்மோடு எப்போதும் இருக்கிறார் என்று நம்புகிறோம். அப்படிப்பட்ட நம்பிக்கைக்கு மத்தியில் திருப்பாடல் ஆசிரியரின் வார்த்தைகள் நமக்கு ஒரு சில கேள்விகளை எழுப்புகிறது. நாம் மன்றாடுகிற நாளில் மட்டும் தான், கடவுள் நமக்கு உதவி செய்வாரா? நம்மை வழிநடத்துவாரா? நாம் மன்றாடவில்லை என்றால், அவர் நமக்கு துணைநிற்க மாட்டாரா? என்ற கேள்விகள் நம் உள்ளத்தை அரிக்கிறது. இதனை எப்படி புரிந்து கொள்வது? கடவுள் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தார் என்கிற வரிகள், கடவுள் நமக்கு வழங்கியிருக்கிற சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதாக அமைகிறது. கடவுள் இந்த உலகத்தைப் படைத்து, நமக்கு வாழ்வையும் கொடுத்திருக்கிறார். எல்லாவற்றையும் கொடுத்த கடவுள், அவரே நம்மை இயக்கினால், நாம் பெற்றுக்கொண்ட வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும். எனவே, அவர் நமக்கு சுதந்திரத்தை வழங்கியிருக்கிறார். நன்மை எது? தீமை எது? என்று கற்றுக்கொடுத்திருக்கிறார். தொடக்கநூலில் நமது முதல் பெற்றோரிடம், இந்த உலகத்தை ஒப்படைத்தபோது, கடவுள் இதைத்தான் சொல்கிறார். ”தோட்டத்தில் இருக்கும் எந்த...

MILLIONS CONVERT IN ONE DAY

“The people of Nineveh believed God; they proclaimed a fast and all of them, great and small, put on sackcloth.” –Jonah 3:5 Mass Readings: March 8 First: Isaiah 65:17-21; Resp: Psalm 30:2,4-6,11-13; Gospel: John 4:43-54 One-hundred-and-twenty-thousand very wicked people converted to the Lord in one day through a one-sentence prophecy from Jonah, a vengeful, reluctant prophet. And we “have a greater than Jonah here” (Lk 11:32). We have Jesus, the Savior of the world, the King of kings, the Lord of lords, the Son of God. In fact, not only is Jesus greater than Jonah, but each Christian is greater...

பலியினால் உம்மை மகிழ்விக்க முடியாது

திருப்பாடல் 51: 1 – 2, 10 – 11, 16 – 17 இஸ்ரயேல் மக்கள் வாழ்வில், கடவுளுக்கு பலி செலுத்துவது என்பது மிக மிக முக்கியமான ஒன்று. அதற்கு அதிக அளவில் முக்கியத்துவத்தைக் கொடுத்தார்கள். லேவியர் புத்தககத்தில் நாம் வாசித்துப் பார்த்தால் பலி செலுத்துவது பற்றிய விளக்கங்களை நாம் தெளிவாகப் பார்க்கலாம். எதையெல்லாம் பலி செலுத்த வேண்டும்? எப்படி பலி செலுத்த வேண்டும்? என்று பல ஒழுங்குமுறைகளை இஸ்ரயேல் மக்கள், லேவியர் நூலைப் பின்பற்றி கடைப்பிடித்தார்கள். ஆக, பலி செலுத்துவது இஸ்ரயேல் மக்களின் வழிபாட்டில் முக்கியமான ஒன்று என்பது தான், இங்கு நாம் அறிய வேண்டிய ஒன்றாக இருக்கிறது. எதற்காக பலி செலுத்தப்படுகிறது? கடவுள் நம்மிடமிருந்து பலி வேண்டுவதில்லை. அவருக்கு அது அவசியமுமில்லை. நாம் புதிதாக பலி என்று ஒன்றை செலுத்திவிட முடியாது. ஏனென்றால், நாம் செலுத்தக்கூடிய காணிக்கையும் அவருடைய அருளினால் தான் பெற்றிருக்கிறோம். பின் ஏன் பலி...

“WE DARE TO PRAY…”

“This is how you are to pray: ‘Our Father in heaven…’ ” –Matthew 6:9 Mass Readings: March 7 First: Joshua 5:9,10-12; Resp: Psalm 34:2-7; Second: 2 Corinthians 5:17-21; Gospel: Luke 15:1-3,11-32 The “Our Father” is not only a prayer but the Lord’s pattern for all authentic prayer. In the “Our Father,” the Lord teaches us how to pray. St. Augustine taught that the “Our Father” is not only the pattern of prayer but also the criterion for all authentic prayer intentions. Therefore, we should not pray for something unless it fits into the “Our Father.” St. Thomas Aquinas taught that...

நீதிமான்களை இறைவன் அனைத்துத் துன்பங்களிலிருந்தும் விடுவிக்கின்றார்

திருப்பாடல் 34: 3 – 4, 5 – 6, 15 – 16, 17 – 18 நீதிமான்களை இறைவன் அனைத்துத் துன்பங்களிலுமிருந்து விடுவிக்கின்றார் என்று ஆசிரியம் பாடுகிறார். நீதிமான் யார்? என்ற அடிப்படை கேள்வி நம் நடுவில் எழுகிறது. எசேக்கியேல் 18: 9 இதற்கான விளக்கத்தைத் தருகிறது, ”என் நியமங்களையும், நீதி நெறிகளையும் கடைப்பிடித்து, உண்மையுள்ளவனாக நடந்துகொண்டால், அவன் நீதிமான் ஆவான்”. கடவுளுடைய நியமங்களையும், கடவுள் வகுத்து தந்திருக்கிற நீதி நெறிகளையும் கடைப்பிடிக்கிறவன் தான் நீதிமான். நாம் கடவுள் நமக்கு வகுத்து தந்திருக்கிற நெறிகளுக்கு ஏற்ப நமது வாழ்க்கையை அமைத்துக்கொண்டால், நாம் நீதிமான்களாக வாழ ஆரம்பிக்கிறோம். நீதிமான்களுக்கு கடவுள் தரும் சிறப்பு என்ன? அனைத்துத் துன்பங்களிலுமிருந்து அவர்களை விடுவிக்கின்றார். கடவுள் துன்பங்களே கிடையாது என்று சொல்லவில்லை. மாறாக, துன்பங்கள் வருகிறபோது, அவர்களுக்கு விடுதலை தருவேன் என்கிறார். அப்படியென்றால், நீதிமான்களுக்கு துன்பங்கள் வருமா? நிச்சயம். நாம் கடவுள் வகுத்திருக்கிற நியமங்களின்படி...