Author: Jesus - My Great Master

வாழ்க்கை என்னும் கொடை

திருத்தூதர் பணி 14: 5 – 18 வாழ்க்கை என்னும் கொடை தனி மனித வழிபாடு, நாம் வாழும் இந்த நவீன உலகத்தில் மட்டுமல்ல. பல நூற்றாண்டுகளுக்கு முன்னதாகவே இருந்திருக்கிறது என்பதற்கு, இன்றைய வாசகம் அருமையான எடுத்துக்காட்டு. பவுல் மற்றும் பர்னபா ஆகிய இருவரும், மக்கள் நடுவில் சென்று, நோய்களை குணமாக்குகின்றனர். முடவர்களை நடக்கச் செய்கின்றனர். அதனைக்கண்டு அவர்களை வழிபடுவதற்காக, அவர்களுக்கு பலி செலுத்துவதற்காக ஒரு கூட்டம் அவர்களிடத்தில் வருகிறது. அதனைப் பார்த்து, பவுலும், பர்னபாவும் அதனை புறக்கணித்துவிட்டு, அவர்களை கண்டிக்கின்ற விதமாக, கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றனர். பணம் கொடுத்து விளம்பரங்களை தேடிக்கொள்ளும் இந்த உலகத்தில், இறைவன் ஒருவர் தான் மகிமைப்படுத்தப்பட வேண்டியவர் என்பதில், உறுதியாக இருந்து அதனை வாழ்ந்தும் காட்டியிருக்கிறார் பவுலடியார். உண்மைதான். இறைவனுக்காக அனைத்தையும் குப்பையென்று கருதுகிறேன் என்று வெறும் வார்த்தையில் மட்டுமல்ல. வாழ்க்கையிலும் நிறைவாக வாழ்ந்து காட்டியிருக்கிறார். புறவினத்து மக்களுக்கு நற்செய்தி அறிவிப்பதற்காக, தன்னுடைய வாழ்க்கை முழுவதையுமே...

DISCIPLES WHO MAKE DISCIPLES

“When [Saul] arrived back in Jerusalem, he tried to join the disciples there; but it turned out that they were all afraid of him. They even refused to believe that he was a disciple.” –Acts 9:26 Disciples of Jesus bear fruit for the Lord, fruit that is evident to other disciples. Disciples also imitate the Lord Jesus in His character, that is, His holiness, and in His ministry, that is in bringing others to the Lord. It’s very understandable that the Jerusalem Christians did not believe that Saul of Tarsus, that is, the Apostle Paul, was a disciple. The only...

நானே உண்மையான திராட்சைச்செடி

இயேசு திராட்சைச் செடியைப்பற்றிப் பேசுகிறபோது, திராட்சைச்செடியைப்பற்றி நன்றாக அறிந்தவராகப்பேசுகிறார். பாலஸ்தீனத்தின் அனைத்துப்பகுதிகளிலும் திராட்சைச்செடி வளர்க்கப்படுகிறது. திராட்சைச்செடியை வளர்க்கிறபோது, அதற்கான தனிக்கவனம் செலுத்த வேண்டும். திராட்சைச்செடி தன் வசதிக்கு ஏற்றாற்போல கொடிகளைப்படரவிட்டாலும், அது நல்லமுறையில் வெட்டப்பட்டு, பராமரிக்கப்பட வேண்டும். இல்லையென்றால் அதனால் பயன் ஒன்றும் இல்லை. இயேசு இந்த உவமையை யாருக்குச்சொல்கிறார்? இரண்டு விளக்கங்கள் தரப்படுகிறது. முதலாவதாக, யூதர்களைப்பார்த்து இந்த உவமையைச்சொல்லியிருக்கலாம். ஏனென்றால், இஸ்ரயேல் இனம் தேர்ந்தெடுக்கப்பட்ட இனம். பழைய ஏற்பாடு முழுவதும் இஸ்ரயேல் இனம் திராட்சைச்செடியோடு ஒப்பிடப்படுகிறது. அது கடவுளின் தேர்ந்தெடுக்கப்பட்ட இனமாக இருந்தாலும், தன்போல வளரமுடியாது. அவ்வப்போது கடவுள் இறைவாக்கினர் வழியாக, இஸ்ரயேல் இனம் மற்ற இனங்களுக்கு ஆசீயாக இருக்கும் வண்ணம் கண்டித்து திருத்துவார். அப்படி திருந்தாதவர்கள், அதற்கான தீர்ப்பைப்பெறுவார்கள். இரண்டாவது, அது கிறிஸ்தவர்களுக்காகவும் எழுதப்பட்டிருக்கலாம். கிறிஸ்தவர்களில் பலர், தொடக்ககாலத்தில், பெயரளவு கிறிஸ்தவர்களாக வாழ்ந்து வந்தனர். அவர்கள் உண்மையான கிறிஸ்தவர்களாக வாழ வேண்டும் என்ற அழைப்பு இதன் மூலமாக தரப்படுகிறது....

GRAFTED (SEE RM 11:17FF)

“We now turn to the Gentiles.” –Acts 13:46 “Jesus sent these men on mission as the Twelve, after giving them the following instructions: ‘Do not visit pagan territory and do not enter a Samaritan town. Go instead after the lost sheep of the house of Israel’ ” (Mt 10:5-6). Although Jesus delivered a Canaanite woman’s daughter from the devil, He did not proclaim God’s kingdom to her (Mt 15:26-28). Therefore, the early Christians believed that life in Christ was for Jews only. The Old Testament prophecies about saving the nations were thought to refer only to the Jews scattered throughout...

இறைவனோடு கொண்டிருக்கிற உறவு

திருத்தூதர் பணி 13: 44 – 52 இறைவனோடு கொண்டிருக்கிற உறவு யூதர்களில் பெரும்பாலானவர்கள் பவுலையும், திருத்தூதர்களின் போதனையையும் ஏற்றுக்கொள்ளவில்லை. பலர் மனந்திரும்பி, இயேசுவை மீட்பராக ஏற்றுக்கொண்டாலும், அதிகாரவர்க்கத்தினர் அவர்களை நம்பவில்லை. எந்தெந்த வழியில் அவர்களுக்கு இன்னல்களை தர முடியுமோ, அத்தனை வழிகளிலும் அவர்கள் முயற்சி எடுத்து, அவர்களை தடை செய்ய பார்த்தார்கள். அதிகாரவர்க்கத்தினரின் இந்த மிரட்டல்களைக் கண்டு, சீடர்கள் பயப்படவில்லை. ஒளிந்து ஓடவுமில்லை. அதிகாரவர்க்கத்தினரை துணிவோடு எதிர்த்து நின்றனர். ”கடவுளின் வார்த்தையை உதறித்தள்ளி, நிலைவாழ்வுக்குத் தகுதியற்றவர்கள் என்று உங்களுக்கு நீங்களே தீர்ப்பளித்துக் கொண்டீர்கள்” என்று பவுல், யூதர்கள் முன்னிலையில் துணிவோடு பேசுகிறார். இவ்வளவு எதிர்ப்புகளுக்கு நடுவிலும், சீடர்கள் கலக்கமுறவில்லை. அவர்கள் மகிழ்ச்சியோடு வாழ்ந்தனர். ”சீடர்களோ தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு மகிழ்ச்சியில் திளைத்திருந்தனர்”. அவர்கள் கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிக்க எவ்வளவோ இன்னல்களை அனுபவித்தபோதிலும், மிகுந்த மகிழ்ச்சியோ வாழ்ந்தனர். இறைவன் அவர்களோ இருக்கிறார் என்கிற ஆழமான விசுவாசம் தான், அவர்களுக்கு இந்த மகிழ்ச்சியைத்...