Author: Jesus - My Great Master

இயேசு நம்மைவிட்டு அகலவேண்டுமா?

இன்றைய நற்செய்தி வாசகம் தரும் செய்தி நமக்குக் கொஞ்சம் வியப்பைத் தருகிறது. கதரேனர் வாழ்ந்த பகுதியில் இயேசு பேய் பிடித்த இருவரை நலப்படுத்துகிறார். அந்தப் பேய்கள் இயேசுவின் அனுமதியுடன் பன்றிகளுக்குள் புக, பன்றிகள் கடலில் வீழந்து மடிகின்றன. எனவே, “நகரினர் அனைவரும் இயேசுவுக்கு எதிர்கொண்டு வந்து, அவரைக் கண்டு. தங்கள் பகுதியைவிட்டு அகலுமாறு வேண்டிக்கொண்டனர்”. இயேசுவும் சற்று வியந்திருப்பார், அந்த மக்களின்மீது பரிவும் கொண்டிருப்பார். காரணம், அவர்களுக்கு விழுமியங்களின் தராதரம் தெரியவில்லை. தங்கள் பகுதியைச் சேர்ந்த இரு மனிதர்கள் பேயின் பிடியிலிருந்து நலம் பெற்றுவிட்டார்களே என்று மகிழாமல், தங்களின் பன்றிகள் மடிந்துவிட்டனவே என்று வருந்துகிறார்கள். அதனால், இயேசுவின் அருமையும் தெரியாமல் அவரையும் தங்கள் பகுதியை விட்டு அகலச் சொல்கின்றனர். அவர்களைப் பற்றி வியப்படையும் நாம் நமது வாழ்வை அலசிப் பார்த்தால், நாமும் ஒருவேளை அந்த நகரினர் போலவே நடந்திருப்போம் எனத் தெரியவரும். நாமும் இந்த உலகின் சிறிய இன்பங்கள், மகிழ்ச்சிகளுக்காக, பேரின்பமாம்,...

SEE, THEN BELIEVE WHAT YOU CAN’T SEE

“You became a believer because you saw Me. Blest are they who have not seen and have believed.” –John 20:29 Contrary to the old saying, seeing is not believing. Faith is “conviction about things we do not see” (Heb 11:1). However, seeing is a platform from which we make “the leap of faith,” as Blaise Pascal called it. Jesus told St. Thomas that those who jumped or leaped to the conclusion that Jesus was Lord and God were especially blest if they did this without ever seeing Jesus physically. Jesus specifically prays for these people who believe in Him through...

கடவுளுக்கு உரியவற்றை தேர்ந்தெடுப்போம்

மனித வாழ்வில் நாம் எதைத்தேர்ந்தெடுக்கிறோம் என்பது முக்கியமான ஒன்று. இன்று நாம் விழா எடுக்கும் இந்திய அப்போஸ்தலர் புனித தோமையார் நாம் எதைத்தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை தம் வாழ்வின் மூலம் நமக்குக் கற்றுத்தருகிறார். தேர்ந்தெடுத்த இரண்டுவகை: 1. கடவுளுக்கு உரியவற்றை தேர்ந்தெடுத்தல். 2. மனிதனுக்கு உரியவற்றை தேர்ந்தெடுத்தல். கடவுளுக்கு உரியவற்றை நாம் தேர்ந்தெடுக்கும்போது, நாம் சிலுவையைத்தூக்க தயாராக இருக்க வேண்டும். எப்படிப்பட்ட சிலுவை. உதாரணமாக, தன்னலம் துறந்து, பொது வாழ்க்கையிலே, பொதுநலத்தில் ஈடுபட்டு மக்களுக்காக உழைக்கும்போது, நமக்கு அவமானங்கள் மட்டுமே கிடைக்கும். போகிறவர்கள், வருகிறவர்கள் எல்லாம் நம்மைத் திட்டலாம். நம்மீது, அவமானங்களை வாரி இறைக்கலாம். நமது பெரைச் சீரழிக்கலாம். நம்மீது அபாண்டமாக, பழிகளைச் சுமத்தலாம். ஆனால், அந்த சிலுவை தான் நம் வாழ்வுக்கு மீட்பைத்தர போகிறது. நம்மேல் சிலுவையைச் சுமத்தியவர்களுக்கு அழிவைத்தரப்போகிறது. ஏனென்றால், சிலுவையிலே தான் நமக்கு, மீட்பு உண்டு. ஒருவேளை மனிதனுக்கு உரியவற்றைத் தேர்ந்தெடுத்தால், இந்த உலகத்திலே பல சொத்துக்களை...

LIKE FATHER, LIKE SON

“Son and father go to the same prostitute.” –Amos 2:7 My adult son and I are attending early morning Mass on vacation at the beautiful diocesan Cathedral in Cheyenne, Wyoming. The Bishop of the diocese is saying a Mass devoted to Mary, Help of Christians. This is a father-son camping vacation. My son and I are doing our best to put God first in our vacation, and the Lord in turn is blessing us abundantly by giving the two of us a Mass said by a bishop. Fathers have been blessed by God to have such a primary influence on...

செயல்பாடுகளும், எண்ணங்களும்

நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கிறபோதும், நல்ல வார்த்தைகளைப் பேச வேண்டும் என்று நினைக்கிறபோதும், மற்றவர்களுக்கு இரக்கம் காட்ட வேண்டும் என்று நினைக்கிறபோதும் அதனை நாம் உடனே செய்ய வேண்டும். பல வேளைகளில் நாம் நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால் செய்வதில்லை. அந்த கணம் மறைந்தபிறகு, அதனை நிச்சயமாக செய்ய முடியாது. அதேபோல ஒருவருக்கு ஆறுதலான வார்த்தைகளைச் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறோம். அந்த நேரத்தில் சொல்லவில்லை என்றால், அந்த கணம் மறைந்துவிடும். அதற்கு பிறகு அதேபோ ஒரு தருணத்தை நாம் எதிர்பார்க்க முடியாது. அதேபோலத்தான் இரக்கம் காட்ட வேண்டும் என்று நினைத்தாலும், நாம் உடனடியாக இரக்கம் காட்ட வேண்டும். அல்லது நாம் அதைச்செய்யவே முடியாது. இதுதான் இன்றைய நற்செய்தியிலும் சொல்லப்படுகிறது. இயேசுவைப் பின்பற்ற ஒருவன் விரும்புகிறான். அவன் உடனடியாக பின்பற்றுவதற்கு தயங்குகிறான். அதற்கு பல காரணங்களையும் சொல்கிறான். இயேசுவின் அனுபவத்தில் அவருக்கு நன்றாகத் தெரியும். அந்த கணம்...