Author: Jesus - My Great Master

இறைவனின் செயல்களை மறவாதீர்

இஸ்ரயேல் மக்களின் வாழ்க்கையில் மையமாக இருந்தது யாவே இறைவான் மட்டும் தான். அவர் தான் அவர்களுக்கு எல்லாமுமாக இருக்கிறவர் என்று அவர்கள் உறுதியாக நம்பினார்கள். அந்த இறைவன் செய்த வல்லமையுள்ள செயல்களை அவர்கள் அடிக்கடி நினைவுகூர்ந்து, தங்களின் பிள்ளைகளுக்கும் கற்றுக்கொடுத்தனர். அதனை ஒரு முக்கிய நிகழ்வாகவே, ஒவ்வொரு ஆண்டும் நினைத்துப்பார்த்தனர். அதைத்தான் திருப்பாடல் ஆசிரியர் இங்கே நினைவுகூர்கிறார். இறைவன் செய்த செயல்கள் என்ன? அவற்றில் நினைத்துப் பார்ப்பதற்கு என்ன இருக்கிறது? தொடக்கத்தில் இறைவன் இந்த உலகத்தைப் படைத்தார். படைப்பின் சிகரமாக மனிதர்களைப் படைத்தார். மனிதன் கீழ்ப்படியாமையால் தவறு செய்தாலும், அவர்களை தொடர்ந்து பாதுகாப்பாக வழிநடத்தினார். தன்னுடைய விலைமதிப்பில்லா சொந்தமாக, இஸ்ரயேல் மக்களை தேர்ந்தெடுத்தார். உருத்தெரியாமல் இருந்த அவர்களுக்கு உருக்கொடுத்தார். எகிப்தில் அடிமைகளாக இருந்த அவர்களை, விடுதலை வாழ்வை நோக்கி அற்புதமாக வழிநடத்தினார். பாலைநிலத்தில் நாற்பது ஆண்டுகள், யாரும் நினைத்துப்பார்க்க முடியாத வகையில் உணவளித்தார். தண்ணீர் வழங்கி, மக்களின் தாகம் தணித்தார். இயற்கையின்...

CASUAL DISOBEDIENCE

“Oh, that today you would hear His voice: ‘Harden not your hearts.’ ” –Psalm 95:7-8 Jesus miraculously and instantaneously healed a leper and then gave him a stern warning not to tell anyone (Mk 1:43-44). The man promptly and completely disobeyed Jesus and began to publicize the whole matter (Mk 1:45). This casual attitude toward disobedience has been the curse of the human race from Adam and Eve to the last person going to hell. All of us recognize this casual attitude toward disobedience in other people. We chide or condemn those who disobey in areas where we may be...

உங்கள் இதயத்தைக் கடினப்படுத்தாதீர்கள்

திருப்பாடல் 95: 6 – 7, 8 – 9, 10 – 11 ஒருவிதமான பிடிவாத நிலையில் இருப்பதுதான், இந்த திருப்பாடல் வரிகளின் பொருளாக இருக்கிறது. கடவுள் இஸ்ரயேல் மக்களை மீட்பின் வரலாற்றில் மிகச்சிறப்பாக வழிநடத்தி வந்திருக்கிறார். அடையாளமே இல்லாத மக்களுக்கு அடையாளத்தைக் கொடுத்து, நாடில்லாமல் நாடோடிகளாக வாழ்ந்தவர்களுக்கு நாட்டைக்கொடுத்து, முதுபெரும் தலைவர்கள் வழியாக, நீதித்தலைவர்கள் வழியாக, அரசர்கள் வழியாக, இறைவாக்கினர்கள் வழியாக, அவர்களை இறைவன் வழிநடத்த வந்திருக்கிறார். இந்தளவுக்கு மக்கள் மீது அன்பு வைத்திருக்கிற இறைவனை, இஸ்ரயேல் மக்கள் விட்டுவிட்டு, பாவ வாழ்க்கையில் வாழ ஆரம்பித்தனர். அநீதி செய்தனர். வேற்றுத் தெய்வங்களை ஆராதித்தனர். தவறான ஒழுக்கச் சீர்கேட்டில் வாழ்ந்து வந்தார்கள். தங்களை வழிநடத்திய கடவுளுக்கு எதிராக இவ்வளவு செய்தாலும், கடவுள் அவர்களை மன்னிப்பதற்காகவே காத்திருந்தார். தொடர்ந்து அவர்களுக்கு நன்மைகளைச் செய்தார். அவர்களை தன்னுடைய பிள்ளைகளாக, திரும்பிவர எதிர்பார்த்து நின்றார். ஆனால், இஸ்ரயேல் மக்களோ, பிடிவாதமாக, தங்களது தீய வாழ்க்கையைத்...

LORD OF OUR DARKNESS

“As evening drew on, they brought Him all who were ill, and those possessed by demons.” –Mark 1:32 In today’s Gospel, Jesus heals in the evening, in the midst of the darkness (Mk 1:32-34). Jesus entered the darkness to drive the demons out of the darkness. “A people living in darkness has seen a great light. On those who inhabit a land overshadowed by death, light has arisen” (Mt 4:16). In today’s first reading, Jesus enters the darkness of our fallen human state (Heb 2:14ff). He became one of us. The Almighty God, Whom the universe could not contain (1...

ஆண்டவர் தம் உடன்படிக்கையை என்றும் நினைவிற்கொள்கின்றார்

திருப்பாடல் 105: 1 – 2, 3 – 4, 6 – 7, 8 – 9 ஆண்டவர் இஸ்ரயேல் மக்களோடு உடன்படிக்கை செய்துகொண்டார். தொடக்கநூல் 17: 7 ல் பார்க்கிறோம். ” தலைமுறை, தலைமுறையாக உன்னுடனும், உனக்குப்பின் வரும் உன் வழிமரபினருடனும் என்றுமுள்ள உடன்படிக்கையை நான் நிலைநாட்டுவேன். இதனால், உனக்கும், உனக்குப்பின் வரும், உன் வழிமரபினருக்கும் நான் கடவுளாக இருப்பேன்”. கடவுள் இஸ்ரயேல் மக்களோடு இந்த உடன்படிக்கையைச் செய்கிறார். இஸ்ரயேல் மக்கள் கடவுளின் கட்டளைகளைக் கடைப்பிடித்து வர வேண்டும். கடவுள் அவர்களுக்கு துணையாக இருப்பார் என்பதுதான் இந்த உடன்படிக்கை. இந்த உடன்படிக்கையை இஸ்ரயேல் மக்கள் மீறி பாவம் செய்தார்கள். அவர்கள் வேற்று தெய்வங்களை ஆராததித்தனர். எகிப்தின் அடிமைத்தளையிலிருந்து, பார்வோனின் அடக்குமுறையிலிருந்து விடுவித்த இறைவனை மறந்து, வேற்று தெய்வத்தை நாடினர். இதனால், அவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகினர். வேற்றுநாட்டினர் அவர்களை அடிமைப்படுத்தினர். யாவே இறைவன் அவர்களோடு இருந்தவரை, மற்றவர்களால் இஸ்ரயேல்...