Author: Jesus - My Great Master

ஆபிரகாமோடு செய்து கொண்ட உடன்படிக்கை

திருப்பாடல் 105: 1, 5, 8 – 9, 24 – 25, 26 – 27 ஒரு சில திருப்பாடல்கள் மிக நீளமானதாக அமைந்திருக்கும். ஒரு சில திருப்பாடல்கள் மிகக் குறுகியதாக இருக்கும். குறுகியதோ, நீளமானதோ, எப்படிப்பட்ட மனநிலையோடு வார்த்தைகளில் ஒன்றித்திருக்கிறோம் என்பதுதான் இங்கே முக்கியமானது. இந்த திருப்பாடல் நீளமான திருப்பாடல். வழக்கமான மற்ற திருப்பாடல்களைப் போல, இறைவனின் மாட்சிமையைப் புகழ்வதற்கான பாடல் தான் இது. உடன்படிக்கைப் பேழையை கொண்டு வரக்கூடிய நிகழ்வை குறிக்கக்கூடிய பிண்ணனியைக் கொண்டதனால், இறைவன் இஸ்ரயேல் மக்களோடு செய்து கொண்ட உடன்படிக்கையை இது குறித்துக் காட்டுவதாக அமைந்திருக்கிறது. இன்றைய திருப்பாடல் ஆபிரகாமோடும், இஸ்ரயேலின் முதுபெரும் தந்தையர்களோடும் இறைவன் செய்து கொண்ட உடன்படிக்கையை நினைவூட்டுவதாக அமைந்திருக்கிறது. ஆபிரகாம் குழந்தை இல்லாமல் இருந்த காலத்தில், கடவுள் அவர் வழியாக சந்ததியைப் பெருக்குவேன் என்று வாக்குறுதி கொடுக்கிறார். ஆபிரகாமோ உடன்படிக்கையை மேற்கொள்கிறார். அந்த வாக்குறுதிக்கு உண்மையானவராக இருக்கிறார். இஸ்ரயேலை வழிநடத்திய...

HOW TO BETTER ONESELF

“Moses decided, ‘I must go over to look at this remarkable sight.’ ” —Exodus 3:3 To become better, live better, pray better, and work better, we must know God better. To become better husbands, wives, parents, religious, or people, we must know God better. For example, Moses, to do better than be a shepherd, had to know God better in the burning bush (Ex 3:2ff). Isaiah (Is 6:1ff), Jeremiah (Jer 1:5ff), and Ezekiel (Ez 1:4ff) all had to know God better before they could fulfill their prophetic ministry. Paul had to know God better before he could become the great...

என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு!

திருப்பாடல் 103: 1 – 2, 3 – 4, 6 – 7 எல்லா திருப்பாடல்களிலும் இறைவனைப் போற்றுவதும், இறைவனுக்கு நன்றி செலுத்துவதும் மீண்டும் மீண்டும் வலியுறுத்திச் சொல்லப்படுகிறது. அதற்கான காரணம் என்ன? இறைவனுக்கு நாம் ஒவ்வொருநாளும் நன்றி சொல்ல வேண்டுமா? இறைவனுக்கு நமது உள்ளம் தெரியாதா? இறைவனை எதற்காக நாம் போற்றிக்கொண்டே இருக்க வேண்டும்? இந்த கேள்விகள் பல நாட்கள் எனக்குள்ளாக எழுந்திருக்கின்றன. சற்று ஆழமாகச் சிந்தித்தபோது, எதற்காக திருப்பாடல் ஆசிரியர் இதனை திரும்ப திரும்ப வலியுறுத்திக் கூறுகிறார் என்பதை உணர முடிந்தது. இஸ்ரயேல் மக்கள் எகிப்திலிருந்து விடுதலை பெற்ற அந்த நிகழ்வுகளை, பாஸ்கா விழா எடுத்துக் கொண்டாடி, அந்த நாளில் குடும்பத் தலைவர் தன்னுடைய பிள்ளைகளுக்கு, கடவுள் கொடுத்த அந்த விடுதலையின் நிகழ்வுகளை ஒவ்வொரு ஆண்டும் சொல்ல வேண்டும் என்று கடவுள் கட்டளை கொடுத்தார். அதற்கான காரணம், கடவுள் செய்த நன்மைகளை நாம் மீண்டும், மீண்டும் கேட்கிறபோது,...

HOW GREAT IS OUR GOD

“Pharoah’s daughter…adopted [Moses] as her son.” —Exodus 2:10 Pharoah, out of fear of the prospering Hebrew people, issued the command to kill every baby boy born to the Hebrews. In a wonderful reversal of this brutally unjust law, God, in His mercy and justice, led Pharoah’s very daughter to break her father’s law and thus begin the deliverance of the Hebrew people. Last week we read about God bringing about a similar reversal in the case of Joseph. His brothers meant evil in trying to kill him, but God reversed Joseph’s fortunes for the good (Rm 8:28; Gn 37-50). The...

எளியேன், சிறுமைப்பட்டவன்

திருப்பாடல் 69: 2, 13, 29 – 30, 32 – 33 இயற்கையின் அழிவுக்கு நடுவில் இருப்பது போல் உணர்வதாக திருப்பாடல் ஆசிரியர் உணர்ந்து எழுதுகிறார். ஆழமான நீர்த்திரள், நிலைகொள்ளாத நீர், வெள்ளம் போன்ற உருவகங்கள், அவர் துயரங்களுக்கு மத்தியில் இருப்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்திருக்கிறது. அவருடைய இதயம் நொறுக்கப்பட்ட நிலையில் இருக்கிறது. அவருடைய மனம் புண்பட்ட நிலையில் இருக்கிறது. அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். சவுலின் எதிர்ப்பு, உடனிருந்தவர்களின் துரோகம், உயிரைப்பற்றிய பயம் போன்றவை அவருக்கு இந்த கலக்கத்தைக் கொடுத்திருக்க வேண்டும். இப்படிப்பட்ட துன்பமயமான நேரத்தில் அவருக்கு ஆறுதலாய் இருப்பது என்ன? கடவுளின் பாதுகாப்பு. இந்த உலகத்தில் யாரையெல்லாம் அவர் நம்பினாரோ, அவர்கள் கைவிட்ட நிலையில், கடவுளிடம் அவர் பாதுகாப்பை உணர்கிறார். அந்த பாதுகாப்பின் மகிழ்ச்சியில் கடவுளைப் புகழ்கிறார். இந்த புகழ்ச்சி வெறும் உதட்டளவில் வந்த புகழ்ச்சி அல்ல. மாறாக, உள்ளத்தின் ஆழத்திலிருந்து வருகின்ற புகழ்ச்சி. கடவுளின் உண்மையான அன்பை...