Author: Jesus - My Great Master

யாருக்கு முன்னுரிமை

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தமது குடும்பம், தமது சீடர்கள் அடங்கிய குழுமம் இவற்றில் யாருக்கு முன்னுரிமை தருகிறார் என்பது நமக்குப் பாடமாக அமைகிறது. இரண்டு தரவுகளை நாம் மனதில் கொள்ளவேண்டும். 1. இயேசு மக்கள் கூட்டத்தோடு பேசிக்கொண்டிருந்தபோது, அவரது தாயும், சகோதரர்களும் வந்து வெளியே நின்றுகொண்டிருந்தார்கள். அவர்களும் சரி, இயேசுவும் சரி குடும்பம் முன்னுரிமை பெறவேண்டும் என்று எண்ணவில்லை. எனவே, இயல்பாகவே அவர்கள் வெளியே காத்துக்கொண்டிருந்தார்கள். 2. இயேசுவும் இறைவனின் திருவுளத்தை நிறைவேற்றுபவர்களே தமது குடும்பத்தினர் என்று சொல்லி, தம்மோடு இருந்து, தமது அருளுரையைக் கேட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்குகின்றார். இறையாட்சியின் படிமுறையில் குடும்பத்தைவிட, சீடத்துவமே முதன்மை பெறுகிறது என்பதை நாம் கற்றுக்கொள்வோம். நமது இரத்த உறவுகளைவிட, இறையாட்சியின் உறவுகளுக்கு இயேசுவைப்போல நாமும் முன்னுரிமை கொடுக்க முன்வருவோம். நமது குடும்பத்தினரையும் இறைவனின் திருவுளத்தை நிறைவேற்றுபவர்களாக மாற்றி. அவர்களை இறைநம்பிக்கையின் அடிப்படையிலும் நமது நெருங்கிய உறவுகளாக மாற்றுவோம். மன்றாடுவோமாக: ஆண்டவராகிய இயேசுவே, நாங்கள்...

THE FREEDOM TRAIN

“Far better for us to be the slaves of the Egyptians than to die in the desert.” —Exodus 14:12 If we are willing to give up our freedom to get something or prevent something, Satan, who specializes in enslaving us (see Heb 2:15), will probably oblige us. If we and our freedom can be bought, he will “buy us out” of freedom. If we can be intimidated and manipulated, Satan, who enslaves through fear, will be willing to play the games by which we surrender our freedom. Consequently, to prevent Satan from robbing us of our freedom, we must accept...

ஆண்டவரே! என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது

திருப்பாடல் 63: 1, 2 – 3, 4 – 5, 7 – 8 இந்த உலகத்தில் தாகம் எடுக்காதவர்கள் என யாருமே இருக்க முடியாது. இந்த உடலுக்கு தண்ணீர் தேவை. ஏனென்றால், நம்முடைய உடல் பஞ்சபூதங்களால் இணைந்த ஒன்று. இந்த உடல் தண்ணீராலும் நிரப்பப்பட்டிருக்கிறது. தண்ணீர் அருந்துகிறபோது, நம்முடைய தாகம் தணிகிறது. இந்த தாகம் என்பதை நாம் பல வழிகளில் அறிந்து கொள்ளலாம். அதிகார தாகம், செல்வம் சேர்க்கக்கூடிய தாகம், முதல் இடம் பெற வேண்டும் என்கிற தாகம் என்று, இந்த பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. இப்போது நாம் பார்த்த தாகமெல்லாம், இந்த உலகம் சார்ந்த தாகம். இன்றைய திருப்பாடலில் இந்த உலகம் சார்ந்த தாகம் குறிப்பிடப்படவில்லை. மாறாக, ஆன்மா சார்ந்த தாகம் குறிப்பிடப்பட்டிருக்கிறது. திருப்பாடல் ஆசிரியரின் தாகம், இந்த உலகம் சார்ந்த தாகமாக இருக்கவில்லை. அவருடைய தாகம் இறையனுபவத்தைப் பெறுவதற்கான தாகமாக இருக்கிறது. இது உயர பறக்க...

THE SCHOOL OF SUFFERING

“Even now I find my joy in the suffering I endure for you. In my own flesh I fill up what is lacking in the sufferings of Christ for the sake of His body, the Church.” —Colossians 1:24 Before we become committed to the Lord, we naturally choose to live a life of maximum pleasure and minimum pain. Because true love often entails pain, the life of maximum pleasure and minimum pain amounts to a life of maximum selfishness and minimum love. If we repent, choose love, and totally commit our lives to the Lord, we choose a life of...

வீண் கவலை வேண்டாம்

வீணாக, தேவையில்லாமல் கவலைப்பட வேண்டாம் என்பது தான், இயேசு இன்றைய நற்செய்தி வாயிலாக நமக்குக் கற்றுத்தரும் பாடம். இந்த உலகத்தில் நாம் பலவற்றை நினைத்து கவலைப்படுகிறோம். நமது பிள்ளைகளை நினைத்து, அவர்களது கல்வி வளர்ச்சியை எண்ணிப்பார்த்து, அவர்களது திருமண காரியங்களை நினைத்து, அவர்கள் நல்ல வேலையில் அமர வேண்டும் என்று, இதுபோன்று பல காரியங்களை நினைத்து நாம் கவலைப்படுகிறோம். ஆனால், இவையனைத்துமே தேவையில்லாத கவலைகள். எதற்கு நாம் கவலைப்பட வேண்டுமோ, அவற்றை நினைத்து நாம் கவலைப்படுவது கிடையாது. நமது ஆன்மீக காரியங்களில் நமக்கு உள்ள ஈடுபாடு சிறப்பாக இருக்கிறதா? நமது ஆன்மா சார்ந்த வளர்ச்சி காரியங்களில் நான் முழுமையாக பங்கெடுக்கிறேனா? பிள்ளைகள் கடவுளுக்கும், மனச்சான்றுக்கு பயந்து நடக்கிறார்களா? பெரியவர்களை மதிக்கிறார்களா? அவர்கள் கடவுள் சார்ந்த காரியங்களில் ஈடுபாட்டோடு பங்கெடுக்கிறார்களா? நேரத்தை சரியாகப் பயன்படுத்துகிறார்களா? இதைப்பற்றித்தான் நாம் அதிகமாக சிந்திக்க வேண்டும். இதைப்பற்றித்தான் நாம் அதிகமாக எண்ண வேண்டும். ஆனால், நாம் இதுபோன்று...