Author: Jesus - My Great Master

என்றும் உள்ளது ஆண்டவரது பேரன்பு

திருப்பாடல் 136: 1 – 3, 16 – 18, 21 – 22&24 நன்றி என்கிற மூன்றெழுத்து வார்த்தை, நம்முடைய மூச்சோடு கலந்துவிட்ட வார்த்தை. நமக்கு நன்மை செய்கிறவர்களை உள்ளன்போடு நினைத்துப்பார்ப்பது நம்முடைய கடமை. ஒருவர் நன்மை செய்கிறபோது அல்லது நமக்கு உதவி செய்கிறபோது, நன்றி என்ற வார்த்தையை உதிர்க்கிறோம். நன்றி என்ற வார்த்தை பொதுவாக உச்சரிக்கப்பட்டாலும், அது உதட்டளவில் உச்சரிக்கப்படுகிற வார்த்தையாகவும், உள்ளத்தளவில் உச்சரிக்கப்படுகிற வார்த்தையாகவும் உணரப்படுகிறது. நன்றி என்ற வார்த்தை எப்போது உச்சரிக்கப்பட்டாலும் அது உணர்வுப்பூர்வமாகவும், உதட்டளவிலும் அமைந்துவிடாமல், உள்ளத்திலிருந்து எழுவதாக அமைய வேண்டும். அதுதான் இன்றைய திருப்பாடல் நமக்கு தருகிற செய்தி. நன்றி என்பது மூன்றாவது நபருக்கு வார்த்தையால் சொல்லிவிடுகிறோம். நம்மைப் பெற்றெடுத்து, நம்மை பேணிவளர்த்த நம்முடைய அன்புப்பெற்றோருக்கு நாம் எப்போதும் நன்றி என்று சொல்வதில்லை. அப்படிச்சொல்லப்படுகிற வார்த்தையை எவரும் விரும்புவதும் இல்லை. காரணம், அது நம்முடைய நெருங்கிய உறவுகளிடமிருந்து நம்மை அந்நியப்படுத்திவிடுகிறது. அப்படியென்றால், நம்முடைய...

FROM VICTIM TO VICTOR

“God Who is mighty has done great things for me, holy is His name.” —Luke 1:49 In much of the Western world, this date is associated with victory, the end of World War II. In Catholic liturgical tradition, today’s celebration of Mary being taken to heaven is associated with the ultimate victory: Jesus’ victory over death and our victory over death through faith in Jesus. United with Jesus, the Church is “a woman clothed with the sun, with the moon under her feet, and on her head a crown of twelve stars” (Rv 12:1). In Jesus, the Church has total...

மரியாளின் விண்ணேற்பு பெருவிழா & சுதந்திர திருநாள்

மரியாளின் விண்ணேற்பு பெருவிழா & சுதந்திர திருநாள் தாய்க்கும் தாய்நாட்டிற்கும் பெருமை சேர்ப்போம் லூக்கா 1:39-56 உங்கள் அனைவருக்கும் அன்னை மரியாளின் விண்ணேற்பு பெருவிழா நல்வாழ்த்துக்களையும், சுதந்திர திருநாள் நல்வாழ்த்துக்களையும் மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தித்திப்பான நாளிலே நல்ல உடல் ஆரோக்கியமும், குறைவில்லா வருமானமும், தீராத சந்தோசமும், சிறந்த நற்பண்புகளையும் நீங்கள் பெற்றிட உங்களை வாழ்த்துகிறேன். விண்ணேற்பு அன்னை மரியின் பரிந்துரையும், ஆண்டவரின் ஆசீரும் உங்களுக்கு நிறைவாகவே கிடைப்பதாக! இன்றைக்கு நம் தாய்க்கும் தாய்நாட்டிற்கும் விழா எடுக்கிறோம். இருவருக்கும் இடையே நெருங்கிய ஒற்றுமையும் தொடர்பும் இருப்பதை நாம் பார்க்கலாம். தாய்க்கு எதற்காக? ஒரு சாதாரண தாயைவிட மேலாக, மரியாள் பிள்ளைகளாகிய நம்மீது முழுமையான அக்கறை கொண்டிருப்பவள். கண்மணிபோல கருத்தாய் காப்பவள். அதனால் நாம் அவருக்கு விழா எடுத்துக்கொண்டாடுவது மிகவும் பொருத்தமானது ஆகும். – “அன்னை தன்னைத் தேடிவரும் அனைவருக்கும் அடைக்கலம் தரும் நகரம்” – என்கிறார் புனித தமசீன்...

MINISTERS OF RECONCILIATION

“If your brother sins against you, go and correct him between you and him alone.” —Matthew 18:15, our transl. “We implore you, in Christ’s name: be reconciled to God!” (2 Cor 5:20) God the Father so strongly desires that we be reconciled to Him that He sent His Son to die for us (Rm 5:10) and to thereby “reconcile everything in His person” (Col 1:20). God the Father insists that we be reconciled not only with Him but also with our brothers and sisters in Christ. In the Sermon on the Mount, Jesus stated: “If you bring your gift to...

நம்மை உயிர் வாழச்செய்த இறைவன் போற்றி

திருப்பாடல் 66: 1 – 3a, 5&8, 16 – 17 செபம் என்பது விண்ணப்பங்களையும் மன்றாட்டுக்களையும் அடுக்கிக்கொண்டே செல்வதாக இருக்கக்கூடாது. மாறாக, அது புகழ்ச்சியின் செபமாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் பாடல் தான், இன்றைய திருப்பாடல். நம்முடைய செபம் என்று சொல்லப்படுவது அடுக்கடுக்கான விண்ணப்பங்கள் தான். விண்ணப்பங்களையும், மன்றாட்டுக்களையும் தாண்டி, நம்மால் சிந்திக்க முடியவில்லை. அதற்குள்ளாகவே நம்முடய செபத்தை அமைத்துக் கொள்வதில் நாம் நிறைவு அடைகிறோம். உண்மையான செபம் புகழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதை கருத்தில்கொண்டு, நம்முடைய செபம் அமைய வேண்டும் என்பது இங்கே நமக்கு விடுக்கப்படுகிற செய்தி. இஸ்ரயேல் மக்கள் செபத்திற்கு அதிக முக்கியத்துவத்தைக் கொடுத்தனர். ஒரு நாளில் பல வேளைகளில் செபித்தனர். அதனை கடமையாகவும் எண்ணினர். அவர்களுடைய செபம் புகழ்ச்சியை அடித்தளமாகக் கொண்ட செபங்களாக இருந்தது. அதற்கு காரணம் இல்லாமலில்லை. ஏனென்றால், அவர்கள் இறைவனிடமிருந்து பெறுவதற்கு ஒன்றுமேயில்லை. அவர்கள் ஏற்கெனவே நிறைய பெற்றிருந்தனர். பெற்றுக்கொண்ட நன்மைகளுக்கு...