Author: Jesus - My Great Master

ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்

திருப்பாடல் 98: 2 – 3, 3 – 4, 5 – 6 மெசியாவின் வருகையை எடுத்துரைக்கக்கூடிய இறைவாக்குப் பாடல். மெசியா வருகையின் போது, எப்படி இந்த உலக மக்கள் அனைவரும் கடவுளின் விருந்தில் பங்குகொள்வார்கள் என அனைத்து மக்களையும் உள்ளடக்குகிற பரந்துபட்ட பாடல். கடவுள் இஸ்ரயேல் மக்களுக்கு வாக்களித்திருந்தார். அவர்களை மீட்பதாக உறுதியளித்திருந்தார். அந்த வாக்குறுதியையும், உறுதிமொழியையும் எப்படி அவர் நிறைவேற்றப்போகிறார் என்பது இங்கு பாடலாக முன்னறிவிக்கப்படுகிறது. இந்த திருப்பாடலின் முக்கியமான செய்தி, அனைவருக்குமான மீட்பின் செய்தி. மீட்பு என்பது இஸ்ரயேல் மக்களுக்கானது மட்டுமல்ல. இந்த உலகத்திற்கானது. உலகம் முழுமைக்குமானது. இஸ்ரயேல் மீட்பைக் கொண்டு வருவதற்கான கருவி. அவ்வளவுதான். இஸ்ரயேல் மக்கள் மட்டுமல்ல,உலகத்தின் அனைத்து மக்களும் கடவுளின் பிள்ளைகள் என்பதை உரக்கச் சொல்லும் பாடலாக இது அமைவது தனிச்சிறப்பு. இந்த சிறப்பான செய்தியை கடவுள் மகிழ்ந்து கொண்டாடுவதற்கும் இந்த பாடல் அழைப்புவிடுக்கிறது. ஆக, இதனை மகிழ்ச்சியின் பாடலாகவும் பார்க்கலாம்....

JESUS AND YOUR HOME

Jesus “entered the house of Simon. Simon’s mother-in-law was in the grip of a severe fever, and they interceded with Him for her. He stood over her and addressed Himself to the fever, and it left her.” —Luke 4:38-39 Jesus wants to enter your home. He also wants your home to be a house of prayer and healing. Will you invite Jesus to be Lord of your life and your home? Will you pray daily with the members of your family? Jesus has promised: “Where two or three are gathered in My name, there am I in their midst” (Mt...

கடவுளின் பேரன்பில் எப்போதும் நிலையாக நம்பிக்கை வைத்துள்ளேன்

திருப்பாடல் 52: 8, 9 சவுல் தாவீதைக் கொல்வதற்காகத் துடித்துக்கொண்டிருக்கிறார். தாவீதை மட்டுமல்ல, அவரோடு நெருக்கமானவர்களையும், குறிப்பாக குருக்களையும் கொலை செய்வதற்கு ஆணையிடுகிறார். அகிமலேக்கின் புதல்வர்களுள் ஒருவனான அபியத்தார் தாவீதிடம் வந்தடைகிறார். அவரிடத்தில் நடந்ததை விவரிக்கிறார். அப்போது தாவீது, ”உன் தந்தை வீட்டார் அனைவரும் இறப்பதற்கு நானே காரணம்” என்று குற்ற உணர்ச்சியில் கதறுகிறார். எனவே, அவரை தன்னோடு தங்குமாறு வேண்டுகிறார் (1சாமுவேல் 22: 22). இப்படிப்பட்ட துயரமான சூழ்நிலையிலிருந்து விடுபட, தன்னுடைய உள்ளத்தில் இருப்பதை எழுத்து வடிவத்தில் தாவீது எழுதுகிறார். அதுதான் இந்த திருப்பாடல். இந்த திருப்பாடலில் கடவுளின் பேரன்பில் எப்போதும் நிலையாக நம்பிக்கை வைத்துள்ளதாக தாவீது வெளிப்படுத்துகிறார். வாழ்க்கையில் எது நடந்தாலும், கடவுள் என்னோடு இருக்கிறார் என்பது தாவீதின் ஆழமான நம்பிக்கை. இக்கட்டான சூழ்நிலையிலும், நெருக்கடியான காலக்கட்டத்திலும் ஆண்டவரின் உடனிருப்பை உணர்ந்து வெளிப்படுத்துகிறார். அவருடைய உள்ளம் பதற்றமாக இருக்கிற வேளையில், தனக்கே நம்பிக்கை அளிக்கும் விதமாக, தன்னுடைய நம்பிக்கையை...

THE BAPTIZED “WAIT WITH JOYFUL HOPE”

“As regards specific times and moments, brothers, we do not need to write you; you know very well that the day of the Lord is coming like a thief in the night.” —1 Thessalonians 5:1-2 We will be ready when Jesus returns if we: are “children of light and of the day” (1 Thes 5:5), do not belong to darkness or night (1 Thes 5:5), are not “asleep like the rest, but awake and sober” (1 Thes 5:6; cf Eph 5:14), and are “putting on faith and love as a breastplate and the hope of salvation as a helmet” (1...

ஆண்டவரே! என் ஒளி!

திருப்பாடல் 27: 1, 4, 13 – 14 இந்த திருப்பாடல் தாவீது அரசர் அரியணை ஏறுவதற்கு முன்னதாக எழுதப்பட்ட திருப்பாடலாகவும், அந்த வேளையில் அவர் சந்தித்த துன்பங்களுக்கு மத்தியில் எழுதப்பட்ட திருப்பாடலாகவும் பார்க்கப்படுகிறது. தாவீதின் பெற்றோர் இறந்த நேரத்தில் பாடப்பட்ட பாடலாகவும் ஒரு சிலரால் சொல்லப்படுகிறது. ஆனால், பெரும்பான்மையான யூதர்களின் எண்ணப்படி, இந்த பாடல் பெலிஸ்தியருடனான போரின் போது, தாவீது இந்த பாடலை எழுதினார் என்பது தான் அவர்களின் நம்பிக்கை. 2சாமுவேல் 21வது அதிகாரம் இஸ்ரயேலருக்கும், பெலிஸ்தியருக்கும் இடையே நடந்த போரைக் குறிப்பதாக இருக்கிறது. 17 இறைவார்த்தையில் சொல்லப்படுகிற செய்தி: இஸ்பிபெனோபு என்னும் அரக்கர் இனத்தவன் ஒருவன் தாவீதை தாக்கவிருந்ததாகவும், செரூயாவின் மகன் அபிசாய் அவருடைய உதவிக்கு வந்து அப்பெலிஸ்தியனை வெட்டிக் கொன்றான் என்றும், இறுதியில் இஸ்ரயேல் மக்கள் தாவீதிடம் வந்து, ”இஸ்ரயேலின் விளக்கு அணைந்து போகாதவண்ணம் நீர் இனி எங்களோடு போருக்கு வரக்கூடாது” என்றும் சொன்னதாகவும் இந்த அதிகாரத்தில்...