Author: Jesus - My Great Master

என்றும் வாழும் கடவுள் போற்றி

தோபித்து 13: 2, 3, 6, 7, 8 தோபித்து கடவுள் மீது முழுமையான நம்பிக்கை வைத்த ஒரு மனிதர். குறிப்பாக, உடல் ஒவ்வொன்றும் கடவுளின் சாயலில் படைக்கப்பட்டது. உடலுக்குரிய மதிப்பை வழங்க வேண்டுமென்று, இறந்த உடலை நல்லடக்கம் செய்வதற்காக தன்னுடைய வாழ்வை முழுமையாக அர்ப்பணித்தவர். அவர் கடவுள் மீது நம்பிக்கை கொண்டிருந்தார். அதனால், அவர் செய்யக்கூடிய காரியங்களால் அவருக்கு பிரச்சனை வரும் என்று தெரிந்தாலும் கூட, அதனைப் பற்றி கவலைப்படாமல் கடவுளைவிடாது பற்றிக்கொண்டவர். அவருடைய வாழ்வில் தான் செய்கிற ஒவ்வொரு செயலும் கடவுளைப் போற்றுவதாக அமைந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டு வாழ்ந்தார். கடவுளைப் போற்ற வேண்டும் என்கிற எண்ணம் தான் இன்றைய பதிலுரைப்பாடலில் இடம்பெற்றிருக்கிற வரிகளில் வெளிப்படுகிறது. தோபித்தை பொறுத்தவரையில் கடவுள் இரக்கமும், நீதியும் உள்ளவர் என்பதை வலியுறுத்திச் சொல்கிறார். கடவுள் ஒரு மனிதன் செய்கிற செயல்களுக்கு ஏற்ப, நீதி வழங்குகிறவர் என்பதை அழுத்திச் சொல்கிறார். கடவுள் எப்போதும்...

ALL IN THE FAMILY

“My mother and my brothers are those who hear the word of God and act upon it.” —Luke 8:21 For the Israelites, blood lines were of critical importance. The commandment that “the life is in the blood” ruled both their dietary laws (see Lv 17:11) and their entire culture. Their heritage and family lineage literally defined them as a people and a nation. Now in Jesus, the family is no longer defined by the blood line passed on from father and mother. In Jesus, the family is defined by a new blood line: the Blood of Christ. Faith in Jesus,...

மகிழ்வுடன் ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்

திருப்பாடல் 122: 1 – 2, 3 – 4ஆ, 4இ – 5 இந்த திருப்பாடல் இஸ்ரயேல் மக்களின் பயன்பாட்டிற்காக தாவீது அரசரால் எழுதப்பட்ட பாடல். எருசலேம் மக்கள் திருவிழாக்களைக் கொண்டாடுவதில் இன்பம் கண்டனர். கடவுளுக்கு நன்றி செலுத்துவதற்காகவும் கடவுளின் திருப்பெயரைப் போற்றுவதற்காகவும் இதனை அவர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள். தாவீது அரசரின் காலத்தில் தான், எருசலேம் நகர் முக்கியத்துவம் பெற்றது. மக்கள் திருவிழாக்களைச் சிறப்பிப்பதற்கு எருசலேம் நகர் வருவது வழக்கம். புனித நகரமாக கருதப்பட்ட எருசலேமின் சிறப்பை இந்த பாடல் எடுத்துரைக்கிறது. எருசலேம் என்பது ஆண்டவர் வசிக்கக்கூடிய இல்லம் மட்டுமல்ல. மாறாக, விண்ணகத்தின் பிரதிபலிப்பாக எருசலேம் நகர் மக்களால் பார்க்கப்பட்டது. எருசலேம் நகரத்திற்குச் செல்வது விண்ணகத்திற்கு செல்வது போன்றதொரு மனநிலையை உருவாக்கியது. எருசலேம் செல்வதை மக்கள் கடவுளின் புனித நகரத்திற்கு அதாவது விண்ணக நகரத்திற்குச் செல்வதாக உணர்ந்தனர். அந்த ஆண்டவரின் இல்லத்திற்குச் செல்வதற்கு நாம் மகிழ்ச்சியான உள்ளத்தோடு செல்ல வேண்டும் என்று...

HOW TO MAKE A LIGHTHOUSE

“No one lights a lamp and puts it under a bushel basket or under a bed; he puts it on a lampstand so that whoever comes in can see it.” —Luke 8:16 The Lord enlightens us when we hear or read the Bible and such commentaries on the Scriptures as this book, One Bread, One Body. God’s Word, especially the Scriptures, is a lamp to our feet and a light to our path (Ps 119:105). “For God, Who said, ‘Let light shine out of darkness,’ has shone in our hearts, that we in turn might make known the glory of...

ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல் புரிந்துள்ளார்

திருப்பாடல் 126: 1 – 2b, 2c – 3, 4 – 5, 6 இஸ்ரயேல் மக்களுக்கு ஆண்டவர் மாபெரும் செயல் புரிந்துள்ளதாக திருப்பாடல் ஆசிரியர் பாடுகிறார். இஸ்ரயேல் மக்களுக்கு இறைவன் பல அற்புதச் செயல்களைச் செய்திருந்தாலும், “மாபெரும்” செயல் என்று ஆசிரியர் கூறுவது என்ன? முதலாவது இறைவார்த்தை சொல்கிறது: ஆண்டவர் சீயோனின் அடிமைநிலையை மாற்றினார். சீயோன் என்பது எருசலேம் நகரைக் குறிக்கிற வார்த்தை. எருசலேம் பகை நாட்டினரால் தாக்கப்பட்டு, பாதிப்புக்குள்ளாக்கப்பட்டது. இனிமேல் மீண்டு வராது, அதனுடைய மகிமை முடிந்து விட்டது என்று நம்பிக்கையிழந்திருந்த நேரத்தில், ஆண்டவர் அற்புதமாக தன்னுடைய வல்ல செயல்களினால் எருசலேமை மீட்டார். மீண்டும் புதுபொலிவு பெறச் செய்தார். எருசலேம் நகரம் மீது இறைவன் கொண்டிருக்கிற அன்பிற்கான காரணம் என்ன? ஏனென்றால், இறைவன் எருசலேமில் குடிகொண்டிருக்கிறார். அது தான் மண்ணகத்தில் ஆண்டவர் வாழும் இடம். தன்னை நாடி வரும் பிள்ளைகளுக்கு ஆறுதல் வழங்குகிற இடம். அந்த இடத்தை...