Author: Jesus - My Great Master

பிற இனத்தார் கண்முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார்

திருப்பாடல் 98: 1, 2 – 3ab, 3cd – 4 நீதி என்பது ஒருவருக்கு உரியதை அவருக்கே கொடுப்பது ஆகும். அது பரிசாகவும் இருக்கலாம், தண்டனையாகவும் இருக்கலாம். பிற இனத்தார் முன் கடவுள் தம் நீதியை எப்படி வெளிப்படுத்தினார்? அவர்கள் எப்படி கடவுளின் நீதியை கண்டு கொண்டனர்? கடவுளைப் பற்றிய பார்வை, கடவுள் தன்னை வழிபடும் மக்களுக்கு உதவியாக இருப்பார் என்பது. அவர்கள் தவறு செய்தாலும் அவருக்காகவே அவர் போரிடுவார், அவர்கள் பக்கம் தான் அவர் நிற்பார் என்பதாகும். இதைத்தான் இஸ்ரயேல் மக்களும் நம்பினர், மற்றவர்களும் எண்ணினர். இஸ்ரயேல் மக்களின் கடவுளைப் பொறுத்தவரையில் அவரும் மற்ற கடவுளைப் போல, இஸ்ரயேல் மக்கள் தவறு செய்தாலும், அவர்கள் பக்கம் தான் இருப்பார் என்று பிற இனத்தவர் எண்ணினர். ஆனால், நடந்தது வேறு. இஸ்ரயேல் மக்கள் தவறு செய்தபோதெல்லாம், அவர்களை தண்டிக்கக்கூடியவர்களாக கடவுள் தன்னை வெளிப்படுத்தினார். இது கடவுள் ஒரு குறிப்பிட்ட மக்களுக்கானவர்...

LOVE’S GROUND-BREAKING

“Please let me, your servant, have two mule-loads of earth, for I will no longer offer holocaust or sacrifice to any other god except to the Lord.” —2 Kings 5:17 When Naaman, the healed Syrian general and leper, took two mule-loads of Jewish dirt back home with him, he was literally breaking new ground in his relationship with the Lord. We too must guard against “getting in a rut” in our love for the Lord. We must always be seeking to grow more deeply in love with Him, or we put ourselves in danger of falling away from loving Him...

எப்போதும் நன்றி மறவாது இருப்போம்

கடவுளிடம் நாம் பல விண்ணப்பங்களை வைத்து நம்பிக்கையோடு மன்றாடுகிறோம். நாம் கேட்பதை பெற்றுக்கொண்ட பிறகு, நமது மனநிலை என்ன? என்பதுதான், இன்றைய நற்செய்தி நமக்குத்தரக்கூடிய செய்தியாக இருக்கிறது. தேவை இருக்கிறபோது, ஓயாமல் கடவுளை தேடுகிற நாம், தொந்தரவு செய்கிற நாம், நமது தேவை நிறைவேறிய பிறகு, கடவுளை நாடாதவர்களாக இருப்பது தான், இன்றைய உலக நியதி. அதைத்தான் இந்த வாசகமும் பிரதிபலிக்கிறது. பத்து தொழுநோயாளர்கள் இயேசுவைச் சந்திக்கிறார்கள். தொழுநோய் பாதிக்கப்பட்ட நபர், இயேசு வாழ்ந்த சமுதாயத்தில் எந்த அளவுக்கு வெறுத்து ஒதுக்கப்பட்டார் என்பது, அவர்கள் அனுபவித்திராத ஒன்றல்ல. முழுமையாக அறிந்திருக்கிறார்கள். அனுபவித்திருக்கிறார்கள். அவர்கள் இயேசுவை நாடி தேடி வருகிறபோது, மனம் கசிந்துருகி மன்றாடுகிறார்கள். ”ஐயா, எங்கள் மீது மனமிரங்கும்” என்று சொல்கிற, அந்த தொனியே, அவர்கள் எந்த அளவுக்கு நம்பிக்கையிழந்து இருக்கிறார்கள் என்பதையும், அவர்களது பரிதாப நிலையையும் எடுத்துரைப்பதாக அமைந்திருக்கிறது. அவர்கள் குணமடைந்த பிறகு, அவர்களின் வாழ்வே மாறிவிட்ட பிறகு, அவர்களின்...

HOW TO LIVE THE LIFE OF BLESSING

” ‘Rather,’ He replied, ‘blest are they who hear the word of God and keep it.’ ” —Luke 11:28 Elizabeth proclaimed of Mary: “Blest are you among women and blest is the Fruit of your womb” (Lk 1:42). Mary herself prophesied: “All ages to come shall call me blessed” (Lk 1:48). “While [Jesus] was saying this a woman from the crowd” confirmed Mary’s prophecy (Lk 11:27). The woman called out: “Blest is the womb that bore You and the breasts that nursed You” (Lk 11:27). Jesus agreed that His mother was blessed, but not so much for motherhood as for...

அனைத்து மக்களினங்களும் அவரது மாட்சியைக் காண்கின்றன

திருப்பாடல் 97: 1 – 2, 5 – 6, 11 – 12 இந்த உலகத்தில் இன்றைக்கு ஏற்றத்தாழ்வுகள் நிலவுகின்றன. சாதியின் பெயரால், இனத்தின் பெயரால் பிளவுகளும், சண்டைகளும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இவை சமூகத்தீமையாக கருதப்பட்டாலும், மக்களை ஆளும் அரசுகள் இதை அரசியலாக்கி தங்களது நாட்களை ஓட்டிக்கொண்டிருக்கின்றனர். கடவுள் முன்னிலையில் அனைவரும் அவருடைய பிள்ளைகள், ஏற்றத்தாழ்வுகள் இல்லை என்பது தான் இந்த திருப்பாடல் நமக்கு உணர்த்தக்கூடிய உண்மை. சாதிகளும், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும், சுயநலத்திற்காகவும், மற்றவர்களை அடக்கி ஆள வேண்டும் என்பதற்காகவும் ஒரு தந்திர நரி குணம் கொண்டவர்களால் புகுத்தப்பட்டது. கடவுள் முன்னிலையில் இவர்கள் அனைவரும் தண்டனைக்குரியவர்களே. நாம் வழிபடும் இறைவனும், நாம் சார்ந்திருக்கும் சமயங்களும் இவற்றிலிருந்து நமக்கு விடுதலையைத் தருவதற்கு உறுதுணையாக இருக்க வேண்டுமே தவிர, நம்மை இன்னும் தரங்கெட்டவர்களாக மாற்றக்கூடாது. மற்றவர்கள் எப்படி வாழ்ந்தாலும், கடவுள் முன்னிலையில் “நாம் “அவருடைய பிள்ளைகள் என்கிற உணர்வு நமக்குள்ளாக வர வேண்டும்....