Author: Jesus - My Great Master

தொழுநோயாளியின் நம்பிக்கை

மத்தேயு 10: 8 ல் இயேசு பன்னிரு திருத்தூதர்களையும் பணிக்காக அனுப்பியபோது, தொழுநோயாளர்களைக் குணப்படுத்துங்கள், என்று பணிக்கிறார்.பொதுவாக, நலம் குன்றியவர்களைக் குணமாக்குங்கள் என்று சொன்ன இயேசு, தொழுநோயாளர்களைக் குறிப்பிட்டுச் சொல்வது இங்கே கவனிக்கத்தக்கது. இயேசுவின் இந்த குறிப்பிட்டு தொழுநோயாளிகளுக்குச் சொல்லும் வார்த்தைகள், யூத சமுதாயத்தில் நிலவிய, தொழுநோயாளிகளுக்கான கொடுமையை அறிவிப்பதாக அமைகிறது. தொழுநோயாளர்கள் உயிரோடு இருந்தும் இறந்தவர்களே, என்று சொன்னால், அது சரியான பார்வையாக இருக்கும். அந்த அளவுக்கு, யூத சமூகம் தொழுநோயாளிகளை நடத்தியது. தொழுநோயாளிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் இருந்தது. அவர்கள் தங்களின் நிலையை நினைத்து, நினைத்து வருந்தக்கூடிய மிகப்பெரிய துயரமாக அவர்களின் வாழ்வு இருந்தது. அப்படி உருக்குலைந்த நிலையில் இருக்கக்கூடிய ஒரு தொழுநோயாளி, இயேசுவிடத்தில் “என்னைக் குணமாக்குங்கள்” என்று சொல்லாமல், ”நீர் விரும்பினால் என்னைக் குணமாக்கும்” என்று சொல்வது உண்மையிலே, அவரின் நம்பிக்கையின் ஆழத்தைக் குறிப்பதாக இருக்கிறது. தனது நிலை அவ்வளவுக்கு துர்பாக்கியமாக இருந்தாலும், கடவுளின் திருவுளம் எதுவாக இருந்தாலும்...

LISTEN FOR GOD’S VOICE

“Speak, Lord, for Your servant is listening.” —1 Samuel 3:9 Our modern world is filled with noise. Everyone seems to have an opinion and demands to be heard through talk radio, online comments, constant chatter on TV, chat rooms, conversations, etc. Anyone who has sat in a hospital waiting room listening to the non-stop droning of the TV understands the incessant noise of the modern world. The young Samuel learned to listen for the voice of the Lord. He “stilled and quieted [his] soul” (Ps 131:2) and listened only for God. Samuel heard God speak and became so effective in...

உதவி செய்வோம்

இயேசுவைப்பற்றிய செய்தி சுற்றுப்புறமெங்கும் பரவிக்கொண்டிருந்தது. அவருடைய வல்லமை, நோயாளர்களைக் குணமாக்கும் ஆற்றல், அதிகாரம் மக்கள் மத்தியில் பிரபலமாகிக்கொண்டிருந்தது. அதை நிச்சயமாக மறைத்து வைக்க முடியாது என்கிற அளவுக்கு, மக்கள் இயேசுவைத்தேடி வர ஆரம்பித்தனர். இயேசு பேதுருவின் இல்லத்தில் இருப்பதைக்கேள்விப்பட்டு, ஓய்வுநாள் முடிகின்ற நேரத்திற்காக காத்திருந்து, ஓய்வுநாள் முடிந்தவுடன், நோயாளர்களை இயேசுவிடம் கொண்டு வருகிறார்கள். மூன்று இடங்களில் இயேசு பொதுவாக நோயாளர்களைக் குணப்படுத்துகிறார். 1. தொழுகைக்கூடம் 2. நண்பர்களில் இல்லம் 3. தெரு வீதி. எங்கே இயேசுவின் உதவி தேவை என்றாலும், அங்கே உதவி செய்வதுதான் இயேசுவின் பணியாக இருந்தது. மனிதத்தேவையை நிறைவேற்றுவதற்கு, அவர் நாளோ, நேரமோ, இடமோ, ஆளோ பார்க்கவில்லை. தேவையைப்பூர்த்தி செய்வதில் கவனத்தோடு இருந்தார். தேவையில் இருக்கிற ஒவ்வொருவருக்கும் தனது உதவி கிடைக்க வேண்டும் என்பதில் இயேசு உறுதியா இருப்பதை இன்றைக்கு நற்செய்தி தெளிவாக்குகிறது. உதவி என்பது நாளோ, இடமோ, ஆளோ பார்த்து செய்வதல்ல. தேவையை நிறைவேற்றுவதாக இருக்க வேண்டும்....

THIS IS THE LIFE

“This is the time of fulfillment. The reign of God is at hand! Reform your lives and believe in the gospel!” —Mark 1:15 The goal of the rest of our lives is to displace the culture of death with a civilization of love and life. This will probably be done not primarily by popes, presidents, judges, generals, or billionaires. Of course, the lives of prestigious people are important in God’s plan (see Rm 13:7). However, the Lord typically chooses to change the world through teenagers like Mary, carpenters like Joseph, toddlers like Samuel, weeping women like Hannah, loving husbands like...

கடவுளின் அழைப்பு என்னும் கொடை

அழைப்பு என்பது கடவுளின் கொடை தான். அந்த கொடையை கடவுள் நமது நிலையைப் பார்த்து வழங்குவதில்லை. நமது உள்ளத்தைப் பார்த்து வழங்குகின்றார். எனவே, அது ஒரு கொடையாக கருதப்பட்டாலும், கடவுளின் அளப்பரிய அன்பை எடுத்துக்காட்டுவதாக அமைந்தாலும், நமது தகுதியின்மையில் இருக்கக்கூடிய தகுதியும், இதில் சிறந்த பங்கு வகிக்கிறது. கடவுள் முன்னிலையில் நாம் தகுதி என்றே சொல்ல முடியாது. எனவே, நமது தகுதியின்மையில் ஏதாவது தகுதி இருக்கிறதா? என்பதைப் பார்த்து, அதற்கேற்பவும் நிச்சயம் அந்த தகுதி வழங்கப்படுகிறது. இயேசு தனது பணிவாழ்வை தொடங்குகிறார். எந்த ஒரு பயணத்தைத் தொடங்குகிறபோதும், ஏதாவது ஒரு இடத்தில் இருந்து ஆரம்பித்தே ஆக வேண்டும். இயேசுவின் பணி அவரோடும், அவரது வாழ்வோடும் முடிந்துவிடக்கூடிய பணி அல்ல என்பது அவருக்கு நன்றாகத்தெரியும். எனவே, தனது பணியை ஆரம்பிப்பது ஆண்டாண்டு காலமாக, பல தலைமுறைகளுக்கு எடுத்துச்செல்லப்பட வேண்டும். அதற்கு தொடக்கமாக, கடலில் வலைவீசி மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களை அழைக்கிறார். நாம் நினைக்கலாம்? மீனவர்கள்,...