Author: Jesus - My Great Master

அற்ப அற்புதங்களா?

(யோவான் 6 : 22-29) உணவினை உண்ட மக்கள் மறுநாளும் இயேசுவுக்காகக் காத்திருக்கின்றனர். அதுமட்டுமன்றி, இயேசுவைத் தேடி படகுகளில் ஏறி கப்பர்நகூமுக்கு வருகின்றனர். ஆனால் இயேசு இதனை விரும்பவில்லை, கண்டிக்கின்றார். காரணம் மக்கள் இயேசுவைத் தேடியது அவருக்காக அன்று, தங்களது வயிறுகளை நிரப்பும் அப்பத்திற்காகவே. உண்மையான வாஞ்சை என்பது அவர்மேல் இருந்ததைக் காட்டிலும், அவர் செய்த புதுமைகள் மேலும் அற்புதங்கள் மேலும் தான் இருந்தன. இந்தத் தேடலை இயேசுவே மிக அற்பமாக நினைக்கின்றார். காரணம் அவர்கள் நிலையற்ற ஒன்றிற்காக நிலையான ஆண்டவர் இயேசுவை விட்டுவிட்டனர். இன்றும் இது தொடர்கின்றதா என்றால் நம்மால் உறுதியாகக் கூற முடியும் ‘ஆம்’ என்று. காரணம் இன்றும் நம்மில் பலர் ஆண்டவரைத் தேடுவது அப்பம் என்ற அற்புதத்திற்காகவே. அவரைவிட அற்புதங்களும் புதுமைகளுமே இன்று நம்மில் பலருக்கு முக்கியமான தேவையாகத் தெரிகின்றது. இன்று, பலபேர் பிற சபைகளுக்கு, எந்தவொரு அடிப்படைத் தகுதியுமில்லாத போதகர்களிடம் செல்வது இப்படிப்பட்ட அற்ப அற்புதங்களுக்காகவே....

HOPE SPRINGS ETERNAL

“Your faith and hope, then, are centered in God.” —1 Peter 1:21 The two disciples on the road to Emmaus said they “were hoping” that Jesus would redeem Israel (Lk 24:21). The two disciples lost hope when Jesus was crucified. Many likewise may be struggling to hold on to hope. We may feel that we have “toiled in vain, and for nothing, uselessly, spent” our strength in our families, evangelization, work, or life in general (Is 49:4). We know that the Lord has promised that our “hope will not leave us disappointed,” but we feel disappointed anyway (see Rm 5:5)....

ஆண்டவரே! வாழ்வின் வழியை நான் அறியச் செய்தருளும்

திருப்பாடல் 16: 1 – 2, 5, 7 – 8, 9 – 10, 11 இந்த உலகத்தில் வாழ்கிற மக்கள் அனைவரும் தங்களது பெயர்கள் வாழ்வின் ஏட்டில் எழுதப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதற்காகத்தான் தங்கள் வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட வாழ்வை தாங்கள் வாழ, சிறப்பான முயற்சிகளை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அப்படி வாழ்வது எளிதல்ல. கடவுளுக்குரிய வாழ்வை நாம் வாழ ஆரம்பிக்கிறபோது, பல்வேறுவிதமான குழப்பங்கள் நம்மை ஆட்கொள்ளும். நாம் வாழக்கூடிய வாழ்க்கை சரியானதுதானா? என்கிற கேள்விகள் நமக்குள்ளாக எழத்தொடங்கும். ஏனென்றால், இந்த உலகம் பல தவறான எண்ணங்களை, மதிப்பீடுகளாக புகுத்திக்கொண்டிருக்கிறது. எது சரி? எது தவறு? என்று அறிய முடியாத அளவிற்கு நமக்குள்ளாக குழப்பங்கள் எழுந்து கொண்டிருக்கிறது. இதிலிருந்து விடுதலை பெறுவதற்காக, திருப்பாடல் ஆசிரியர் கடவுளின் உதவியை நாடுகிறார். நாம் குழப்ப மனநிலையில் இருக்கிறபோது, கடவுள் நமக்கு வழிகாட்டுவதற்கு தயாராக இருக்கிறார். ஆகவே கடவுளின் உதவியை நாம்...

MARK’S-MAN

“Then He told them: ‘Go into the whole world and proclaim the good news to all creation.’ ” —Mark 16:15 Mark ends his Gospel with Jesus’ command to proclaim the Good News. He begins his Gospel proclaiming “Jesus Christ, the Son of God” (Mk 1:1). He divides his Gospel into two parts. Each part culminates in proclaiming Jesus as Messiah (Mk 8:29) and the Son of God (Mk 15:39). Mark proclaims Jesus from the beginning to the end of his Gospel. He boasts of nothing but the Lord (2 Cor 10:17; 1 Cor 1:31). During this Easter season, are you...

உமது நீதியால் அவர்கள் மேன்மை அடைவார்கள்

திருப்பாடல் 89: 1 – 2, 5 – 6, 15 – 16 கடவுள் நீதியுள்ளவர் என்று விவிலியம் முழுமைக்குமாக பார்க்கிறோம். கடவுளுடைய நீதி இந்த உலக நீதி போன்றது அல்ல. ஏனென்றால், கடவுள் உள்ளத்தையும் ஊடுருவிப்பார்க்கக்கூடியவர். ஆராய்ந்து அறிந்து செயல்படக்கூடியவர். மனிதரைப்போன்று வெளித்தோற்றத்தை வைத்து, ஒருவரை தீர்ப்பிடக்கூடியவர் அல்ல.கடவுளுடைய நீதிக்கும் மனிதர்களுடைய நீதிக்கும் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. மனிதர்கள் பதவிக்காக, பணசுகத்திற்காக, நீதி என்கிற பெயரில் அநீதியை வழங்கிக்கொண்டிருக்கிறார்கள். இங்கே யார் பணபலத்தில் சிறந்து விளங்குகிறார்களோ, அவர்கள் நீதியை தங்களுக்கு ஏற்ப வளைத்துவிடுகிறார்கள். ஆனால், கடவுளிடத்தில் அப்படி செய்ய முடியாது. இந்த உலகத்தின் பார்வையில் இஸ்ரயேல் மக்களுக்கு நீதி என்பது கிடைக்க முடியாத ஒன்று. அவர்கள் நீதிக்காக போராட வலிமை படைத்தவர்களாகவும் இல்லை. நீதியைக் கேட்டுப்பெற்றுக்கொள்ளும் நிலையிலும் இல்லை. அவர்களுக்கு நீதி வழங்கக்கூடியவர்கள் யாரும் இல்லை. ஏனெனில் அவர்கள் சாதாரணமான மக்கள். எளிய மக்கள். அடித்தட்டு மக்கள். பாமர...