Author: Jesus - My Great Master

உம் முகத்தின் ஒளியில் அவர்கள் நடப்பார்கள்

திருப்பாடல் 89: 1 – 2, 15 – 16, 17 – 18 அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது பழமொழி. முகம் என்பது ஒரு மனிதருக்கு முக்கியமானது. ஒருவருடைய முகத்தைப் பார்த்து தான் அவர் அழகானவராக இருக்கிறாரா? என்று முடிவு செய்கிறோம். ஒரு சிலருடைய முகம் இனிமையான முகமாக, பேசுவதற்கு தூண்டக்கூடிய முகமாக இருக்கிறது. ஒரு சிலருடைய முகம் எப்போதும் கோபம் படிந்த முகமாக தெரிகிறது. ஒரு சிலருடைய முகம் கவலை, சோகம் படிந்த முகமாக காட்சியளிக்கிறது. முகம் ஒரு மனிதரைப்பற்றிய பல செய்திகளை, அவருடன் பழகாமலேயே நமக்கு வெளிப்படுத்துகிறது. இன்றைய திருப்பாடலில், கடவுளின் முகத்தின் ஒளியில் கடவுளின் மாட்சிமையை அறிந்த மக்கள் நடப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. ஒளி படர்ந்த முகம் நமக்குச் சொல்லக்கூடிய சிறப்புச் செய்தி ஒன்று இருக்கிறது. ஒருவனுக்கு எவ்வளவு கவலைகள், துன்பங்கள் இருந்தாலும், அவன் நேர்மையானவனாக இருந்தால், கடவுளுக்கு உண்மையானவனாக இருந்தால், எவ்வளவு சோதனைகள்,...

SAVE THE CHILDREN

“Rise up, shrill in the night, at the beginning of every watch; pour out your heart like water in the presence of the Lord; lift up your hands to Him for the lives of your little ones.” —Lamentations 2:19 If we ever needed to pray, we need to pray now. Our little ones are being snuffed out in their mothers’ wombs. As nations play politics, world bankers play monopoly, and Christians play church, the little children starve to death or suffer brain damage due to malnutrition. The children are possibly the greatest victims of divorce, racism, and pornography. Now more...

உண்மை உரக்க ஒலிக்கட்டும்

30.06.2018 – மத்தேயு 8: 5 – 17 புலம்பல் நூல் 2: 2, 10 – 14, 18 – 19 “உன் இறைவாக்கினர் உனக்காகப் பொய்யும் புரட்டுமான காட்சிகளைக் கண்டனர். நீ நாடு கடத்தப்பட இருப்பதைத் தவிர்க்குமாறு, உன் நெறிகேடுகளை அவர்கள் உனக்கு எடுத்துச் செல்லவில்லை” என்று, எரேமியா இறைவாக்கினர் கூறுகிறார். இது யூதர்கள் பாபிலோனியர்களால் சிறைப்பிடிக்கப்பட்ட நிகழ்வையும், அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் படம்பிடித்துக் காட்டுகிறது. அந்த தருணத்தில், இறைவாக்கினர் எரேமியா அரசனிடம், பாபிலோனியர்களிடம் சரணடைந்து விடுவதுதான், நாட்டிற்கு நல்லது என்றும், அதுதான் கடவுளின் வார்த்தை என்றும் அரசனுக்கு அறிவித்தார். ஆனால், அரசர் பொய்யான இறைவாக்கினர்களின் பேச்சைக் கேட்டு அதனை நம்பி மறுத்து, இத்தகையை இழிநிலையை, மக்களுக்கு கொண்டு வந்துவிட்டான் என்று வருத்தப்படுகிறார். யூதாவின் கடைசி காலத்தில் ஏராளமான போலி இறைவாக்கினர்கள் வாழ்ந்து வந்தனர். இதனை இறைவாக்கினர் எரேமியாவும், எசேக்கியாவும் எடுத்துரைத்தனர். போலி இறைவாக்கினர்கள் கடவுள் என்ன சொல்கிறார்?...

SHOW ME THE FRUIT

“That should be the proof they need.” –Matthew 8:4 St. Paul was once a “leper” to Christians, a vicious persecutor of those who followed Jesus. He was converted but the community didn’t believe it, and wouldn’t allow Paul into the family of Christians. Barnabas was convinced of Paul’s genuine, authentic conversion and persuaded the community (Acts 9:26-27). The best way Paul could give evidence of his healing from “leprosy” was to produce good fruit and so glorify God (see Jn 15:8). St. Mark was a “leper” in that he deserted the first Christian missionary journey (Acts 13:13; 15:38). Barnabas gave...

தொழுநோயாளியின் நம்பிக்கை

இன்றைய நற்செய்தியில், தொழுநோயாளி, இயேசுவிடத்தில் நம்பிக்கையோடு வருவதைப் பார்க்கிறோம். இயேசு தன்னை நிச்சயம் குணப்படுத்துவார், இயேசுவிடத்தில் சென்றால், தனது துன்பத்திற்கு விடுதலை கிடைக்கும் என்று அவர் உறுதியாக நம்பினார். அந்த நம்பிக்கையோடு, இயேசுவிடத்தில் அவர் வருகிறார். பொதுவாக, தொழுநோயாளிகள் யூதப்போதர்களின் அருகில் வரமாட்டார்கள். அது தடை செய்யப்பட்டிருந்தது. அவ்வாறு வருவது தெரிந்தால், மற்றவர்கள் அவர்களை கல்லால் எறிந்து விரட்டலாம். இயேசுவைப்பற்றியும், அவரது போதனை பற்றியும், ஏழைகளிடத்தில் அவர் காட்டிய இரக்ககுணம் பற்றியும், நிச்சயம் அந்த தொழுநோயாளி கேள்விப்பட்டிருக்க வேண்டும். அந்த நம்பிக்கையோடு தான் அவர் இயேசுவிடத்தில் வருகிறார். ஒருவேளை யாராவது கல்லெறிந்தால், அதைத்தாங்குவதற்கும் அவர் தயார்நிலையில் இருந்திருக்க வேண்டும். இயேசு நிச்சயம் தன்னை வரவேற்பார், என்று அந்த தொழுநோயாளி உறுதியாக நம்பினார். தொழுநோய் என்பது குணப்படுத்த முடியாத நோயாக யூதப்பாரம்பரியத்தில் கருதப்பட்டது. ஆனால், இந்த மனிதன் இயேசுவை முழுமையாக நம்பினான். இயேசுவிடத்தில் இருக்கிற வல்லமை, நிச்சயம் தன்னை விடுதலையாக்கும் என்று அவன்...