Author: Jesus - My Great Master

CORRECTION FLUID?

“Amaziah, the priest of Bethel, sent word to Jeroboam, king of Israel: ‘Amos has conspired against you here within Israel; the country cannot endure all his words.’” –Amos 7:10 Are you defensive when corrected? If someone corrects you, do you make like a porcupine and stick out your quills? Is your first reaction to correction to justify yourself? It is natural to react to correction in this way. However, if we have been baptized into the Holy Trinity, we can live supernaturally. By our baptismal grace, we can react to correction with thanksgiving, humility, and growth in holiness. Being corrected...

இறைவாக்கினர்களின் பணி

ஆமோஸ் 7: 10 – 17 இரண்டாவது எரோபவாமின் ஆட்சிக்காலத்தில், இஸ்ரயேலில் வளமையும், அமைதியும் நிறைந்திருந்தது. ஆனால், அதற்கு மையமாக விளங்கிய, அதற்கு காரணமாக விளங்கிய இஸ்ரயேலின் கடவுளை அவர்கள் மறந்துவிட்டனர். இன்றைய பகுதி, பெத்தேலின் குருவாகிய அமட்சியாவிற்கும், இறைவாக்கினர் ஆமோசிற்கும் இடையே நடக்கும் வாக்குவாதத்தை எடுத்துரைக்கிற நிகழ்வாக அமைகிறது. அமட்சியா, ஆமோசை பிழைப்புவாதி என்றும், பிழைப்பிற்காக இறைவாக்கு உரைக்கிறவர் என்றும் சாடுகிறார். அரசனிடமும் அவரைப்பற்றி அவதூறான வார்த்தைகளைச் சொல்கிறார். அவரை வேறு எங்காவது இறைவாக்குரைத்து, அவரது வாழ்க்கையைப் பார்த்துக் கொள்ளுமாறு கூறுகிறார். ஆனால், ஆமோசோ அது தன்னுடைய பிழைப்பு அல்ல என்பதை உறுதிப்படுத்துகிறார், “நான் இறைவாக்கினன் இல்லை. இறைவாக்கினர் குழுவில் உறுப்பினனும் இல்லை. நான் ஆடு மாடு மேய்ப்பவன். ஆண்டவர் என்னைத் தேர்ந்தெடுத்து, இறைவாக்கு உரைத்திடு என்று சொன்னார்” என்று கூறுகிறார். இப்போது அவருடைய சினம், அமட்சியாவை நோக்கி திரும்புகிறது. “இஸ்ரயேலுக்கு எதிராக இறைவாக்கு உரைக்காதே. ஈசாக்கின் வீட்டார்க்கு எதிராகப்...

உண்மையான அர்ப்பண வாழ்வு

யோவானுடைய இறப்புச்செய்தியைக் கேட்டவுடன் இயேசு கலிலேயாவிலிருந்து புறப்பட்டு படகிலேறிப் பாலைநிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்றதாக நற்செய்தியாளர் கூறுகிறார். அவர் தனிமையாக சென்றதற்கு பல காரணங்கள் இருக்கலாம். “தன்னுடைய உறவினர்“, “தனது முன்னோடி” திருமுழுக்கு யோவானுடைய அவருக்கு மிகப்பெரிய வருத்தத்தை உண்டாக்கியிருக்கலாம். எனவே, சற்று ஆறுதல் பெறுவதற்காக இந்த தனிமையை விரும்பியிருக்கலாம். அல்லது ஓய்வில்லாத பணிவாழ்வில் சிறிது இளைப்பாற விரும்பியிருக்கலாம். அல்லது பாடுகள் நெருங்குகின்ற வேளையில் தன் இறைத்தந்தையோடு ஒன்றித்திருக்க ஆசைப்பட்டிருக்கலாம். எது எப்படியென்றாலும், அவர் அந்த இடத்திற்கு தனிமையாக இருப்பதற்கு செல்வதற்கு முன்பே, மக்கள் அவர் அங்கே செல்வதைக்கேள்விப்பட்டு சென்றுவிட்டனர். இயேசு அவர்களைப்பார்த்து கோபப்படவில்லை. எரிச்சலடையவில்லை. எனக்கு ஓய்வுக்கு கூட நேரம் கொடுக்க மாட்டார்களா? என்று ஆதங்கப்படவில்லை. மாறாக, மக்கள் மீது பரிவு கொள்கிறார். பணிவாழ்வு என்பது நேரத்தை அடிப்படையாகக் கொண்ட வாழ்வு அல்ல. எல்லா நேரமும் மக்களுக்காக பணியாற்ற தயாராக இருக்கக்கூடிய வாழ்வு. அதை இயேசுவிடமிருந்து கற்றுக்கொள்வோம். நமக்கான...

BAD TO THE BONE

“Hate evil and love good, and let justice prevail.” —Amos 5:15 “Woe to those who call evil good, and good evil” (Is 5:20). The Lord wants us to “hate evil,” not to rename it by a more acceptable name (Am 5:15). The culture of death specializes in “spin” control, using smooth words to rename actions which are blatantly and objectively evil in the sight of God. Just because our society regards acts as acceptable and commonplace does not mean God no longer regards them as evil and wrong. Some examples of this are: • We have a legal right to...

இறைவன் விரும்பும் விழாக்கள்

ஆமோஸ் 5: 14 – 15, 21 – 24 “உங்கள் திருவிழாக்களை நான் வெறுத்து அருவருக்கின்றேன்” என்று படைகளின் கடவுள் சொல்வதாக, ஆமோஸ் இறைவாக்கு உரைக்கின்றார். இணைச்சட்டம் 23: 14 ல் கடவுள் சொல்கிறார்: “நீ எனக்கு ஆண்டிற்கு மூன்றுமுறை விழா எடுப்பாய்”. இறைவன் இஸ்ரயேல் மக்களிடம் விழா எடுக்கச் சொல்கிறார். ஆனால், இறைவாக்கினர் ஆமோஸ், இறைவன் விழாக்களை அருவருப்பதாக இறைவாக்கு உரைக்கின்றார். இதை எப்படி புரிந்து கொள்வது? இஸ்ரயேல் மக்கள் கொண்டாடும் விழாக்களில் முக்கியமானது பாஸ்கா விழா. இந்த விழா, கடவுள் இஸ்ரயேல் மக்களை அற்புதமாக, எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து கடந்து போகும் நிகழ்வை நினைவுபடுத்துகிறது. கூடாரத்திருவிழா, இஸ்ரயேல் மக்கள் நாற்பது ஆண்டு காலம் பாலைவனத்தில் வாழ்ந்ததையும், அவர்களை இறைவன் உணவில்லாத, நீரில்லாத பாலைவனத்திலும் அற்புதமாக வழிநடத்தியதையும் குறிக்கிறது. மற்ற விழாக்களில் இஸ்ரயேல் மக்கள் செலுத்தும் காணிக்கைகள் குறிப்பாக, அறுவடையிலிருந்தும், தங்களுடைய கால்நடையிலிருந்தும் செலுத்தும் காணிக்கைகள், அவர்கள் கடவுள் மீது...