Author: Jesus - My Great Master

இறைவாக்குப் பணி

எசேக்கியேல் 2: 2 – 5 இறைவாக்கினர் எசேக்கியேல், கடினமான நேரத்தில் இறைவாக்குப் பணியைச் செய்ய இறைவனால் அனுப்பப்படுகிறார். கி.மு.597 ம் ஆண்டு, பாபிலோனியர்கள் யூதாவை முற்றுகையிடுகிறார்கள். வேறு வழியில்லாமல் பாபிலோனியர்களிடம் யூதர்கள் சரணடைகிறார்கள். யூதர்களுக்கு மிகப்பெரிய கப்பத்தொகையை அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் செலுத்த வேண்டியதிருக்கிறது. செதேக்கியாவை யூதர்களின் அரசனாகவும், தங்களின் கைப்பொம்மையாகவும் பாபிலோனியர்கள் நியமனம் செய்கிறார்கள். ஆனால், பத்து ஆண்டுகளுக்குப் பின், செதேக்கியா பாபிலோனியர்களுக்கு எதிராக நிற்பதற்கு தயாராகுகிறார். எகிப்தியர்களுடன் சேர்ந்து கொண்டு, பாபிலோனியர்களை எதிர்க்கத் துணிகிறார். இது நெபுகத்நேசருக்கு கோபத்தைத் தூண்டுகிறது. கி.மு.587 ம் ஆண்டு, மீண்டும் எருசலேம் நகருக்கு படையெடுத்து வந்து, அவர்களை சின்னாபின்னமாக்குகிறார். எருசலேமை தரைமட்டமாக்குகிறார். இருக்கிற செல்வங்கள் அனைத்தையும் கொள்ளையடிக்கிறார். மீண்டும் தன்னுடைய கைப்பொம்மையாக அரசரை நியமிப்பதில் அவருக்கு உடன்பாடில்லை. எனவே, அனைவரையும் நாடுகடத்துகிறார். இஸ்ரயேல் என்கிற நாடு இல்லாமல் போகச் செய்கிறார். இப்படிப்பட்ட மோசமான, துயரமான நேரத்தில் இறைவாக்கினர் எசேக்கியேல் இறைவாக்குப் பணியைச்...

BELIEVE IN JESUS’ BODY

“My Lord and my God!” –John 20:28 At the elevation of the host at Mass, we proclaim with St. Thomas, “My Lord and my God!” (Jn 20:28) Jesus invited Thomas to touch His body, so that he might believe that Jesus was truly risen. In Holy Communion, Jesus likewise invites us to touch and receive His Body, that we might also grow in faith. There is a connection, then, between St. Thomas’ doubt and the physical body of Jesus. In the first letter of John, we are told that every true spirit recognizes Jesus Christ come in the flesh (1...

கடவுளுக்கு உரியவற்றை தேர்ந்தெடுப்போம்

மனித வாழ்வில் நாம் எதைத்தேர்ந்தெடுக்கிறோம் என்பது முக்கியமான ஒன்று. இன்று நாம் விழா எடுக்கும் இந்திய அப்போஸ்தலர் புனித தோமையார் நாம் எதைத்தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை தம் வாழ்வின் மூலம் நமக்குக் கற்றுத்தருகிறார். தேர்ந்தெடுத்த இரண்டுவகை: 1. கடவுளுக்கு உரியவற்றை தேர்ந்தெடுத்தல். 2. மனிதனுக்கு உரியவற்றை தேர்ந்தெடுத்தல். கடவுளுக்கு உரியவற்றை நாம் தேர்ந்தெடுக்கும்போது, நாம் சிலுவையைத்தூக்க தயாராக இருக்க வேண்டும். எப்படிப்பட்ட சிலுவை. உதாரணமாக, தன்னலம் துறந்து, பொது வாழ்க்கையிலே, பொதுநலத்தில் ஈடுபட்டு மக்களுக்காக உழைக்கும்போது, நமக்கு அவமானங்கள் மட்டுமே கிடைக்கும். போகிறவர்கள், வருகிறவர்கள் எல்லாம் நம்மைத் திட்டலாம். நம்மீது, அவமானங்களை வாரி இறைக்கலாம். நமது பெரைச் சீரழிக்கலாம். நம்மீது அபாண்டமாக, பழிகளைச் சுமத்தலாம். ஆனால், அந்த சிலுவை தான் நம் வாழ்வுக்கு மீட்பைத்தர போகிறது. நம்மேல் சிலுவையைச் சுமத்தியவர்களுக்கு அழிவைத்தரப்போகிறது. ஏனென்றால், சிலுவையிலே தான் நமக்கு, மீட்பு உண்டு. ஒருவேளை மனிதனுக்கு உரியவற்றைத் தேர்ந்தெடுத்தால், இந்த உலகத்திலே பல சொத்துக்களை...

LORD

“As He moved on, Jesus saw a man named Matthew at his post where taxes were collected. He said to him, ‘Follow Me.’ ” –Matthew 9:9 When your spouse dies, Jesus is there as Lord of the burial. As with Sarah’s burial, He wants to use this occasion to prepare others to enter the promised land (see Gn 23:20). When you’re attracted to someone of the opposite sex and even contemplating marriage, Jesus is there as Lord of the courtship. When you’re thinking about getting a job or changing jobs, Jesus is there to be Lord of your employment and...

மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, கடவுளின் சொல்லாலும் உயிர் வாழ்வர்

திருப்பாடல் 119: 2, 10, 20, 30, 40, 131 வாழ்க்கை என்பது வெறும் இயக்கம் மட்டுமல்ல. அது தன்னையே முழுமையாக ஈடுபடுத்தி, மற்றவர்களை இயக்க வைப்பது. இந்த உலகத்தில் இருக்கிற எல்லா மனிதர்களும் தங்களது வாழ்வை வாழ்ந்திருக்கிறார்களா? என்றால், அது நிச்சயம் கேள்விக்குறிதான். எல்லாரும் வாழவில்லை. ஆனால், இந்த உலத்தில், குறிப்பிட்ட காலம் “இருந்திருக்கிறார்கள்“. வாழ்க்கை என்பது அதனையும் கடந்த ஓர் அா்ப்பணம். வாழ்க்கையை உண்மையிலேயே வாழ்ந்தவர்களைத்தான் இந்த உலகம் வரலாற்றில் குறித்து வைத்திருக்கிறது. மற்றவர்களை அது நினைவுகூர்வதில்லை. இந்த உலகத்தில் வெறுமனே இருப்பதற்கு, உணவு போதுமானது. ஆனால், இந்த வாழ்க்கையை வாழ வேண்டுமென்றால், நமக்கு கடவுளின் வார்த்தை அவசியமானதாக இருக்கிறது. அது நமது வாழ்வை நாம் வாழ்வதற்கு உந்துசக்தியாக இருந்து, நம்மை இயக்கிக் கொண்டே இருக்கிறது. நாம் சோர்வடைகிற வேளையில், நமக்கு உற்சாகத்தைத் தருகிறது. நம்மையே முழுவதுமாக மற்றவர்களுக்கு அர்ப்பணித்து உழைக்கிறபோது, நமக்கு அது உந்துசக்தியாக இருந்து, நம்மை...