Author: Jesus - My Great Master

ஆபிரகாமோடு செய்து கொண்ட உடன்படிக்கை

திருப்பாடல் 105: 1, 5, 8 – 9, 24 – 25, 26 – 27 ஒரு சில திருப்பாடல்கள் மிக நீளமானதாக அமைந்திருக்கும். ஒரு சில திருப்பாடல்கள் மிகக் குறுகியதாக இருக்கும். குறுகியதோ, நீளமானதோ, எப்படிப்பட்ட மனநிலையோடு வார்த்தைகளில் ஒன்றித்திருக்கிறோம் என்பதுதான் இங்கே முக்கியமானது. இந்த திருப்பாடல் நீளமான திருப்பாடல். வழக்கமான மற்ற திருப்பாடல்களைப் போல, இறைவனின் மாட்சிமையைப் புகழ்வதற்கான பாடல் தான் இது. உடன்படிக்கைப் பேழையை கொண்டு வரக்கூடிய நிகழ்வை குறிக்கக்கூடிய பிண்ணனியைக் கொண்டதனால், இறைவன் இஸ்ரயேல் மக்களோடு செய்து கொண்ட உடன்படிக்கையை இது குறித்துக் காட்டுவதாக அமைந்திருக்கிறது. இன்றைய திருப்பாடல் ஆபிரகாமோடும், இஸ்ரயேலின் முதுபெரும் தந்தையர்களோடும் இறைவன் செய்து கொண்ட உடன்படிக்கையை நினைவூட்டுவதாக அமைந்திருக்கிறது. ஆபிரகாம் குழந்தை இல்லாமல் இருந்த காலத்தில், கடவுள் அவர் வழியாக சந்ததியைப் பெருக்குவேன் என்று வாக்குறுதி கொடுக்கிறார். ஆபிரகாமோ உடன்படிக்கையை மேற்கொள்கிறார். அந்த வாக்குறுதிக்கு உண்மையானவராக இருக்கிறார். இஸ்ரயேலை வழிநடத்திய...

MIRACLES AND SODOM

“If the miracles worked in you had taken place in Sodom, it would be standing today.” –Matthew 11:23 Sodom has gone down in history as infamous for homosexual rape and related perversions (Gn 19:5). Jesus assures us that His miracles would have resulted in Sodom’s conversion (Mt 11:23). He also solemnly assures us that we who believe in Him can do greater by far than He (Jn 14:12). This means we can do miracles which would lead to the conversion of cities and countries even worse than Sodom. So let’s stop lamenting the wickedness of the world and start accompanying...

எளியேன், சிறுமைப்பட்டவன்

திருப்பாடல் 69: 2, 13, 29 – 30, 32 – 33 இயற்கையின் அழிவுக்கு நடுவில் இருப்பது போல் உணர்வதாக திருப்பாடல் ஆசிரியர் உணர்ந்து எழுதுகிறார். ஆழமான நீர்த்திரள், நிலைகொள்ளாத நீர், வெள்ளம் போன்ற உருவகங்கள், அவர் துயரங்களுக்கு மத்தியில் இருப்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்திருக்கிறது. அவருடைய இதயம் நொறுக்கப்பட்ட நிலையில் இருக்கிறது. அவருடைய மனம் புண்பட்ட நிலையில் இருக்கிறது. அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். சவுலின் எதிர்ப்பு, உடனிருந்தவர்களின் துரோகம், உயிரைப்பற்றிய பயம் போன்றவை அவருக்கு இந்த கலக்கத்தைக் கொடுத்திருக்க வேண்டும். இப்படிப்பட்ட துன்பமயமான நேரத்தில் அவருக்கு ஆறுதலாய் இருப்பது என்ன? கடவுளின் பாதுகாப்பு. இந்த உலகத்தில் யாரையெல்லாம் அவர் நம்பினாரோ, அவர்கள் கைவிட்ட நிலையில், கடவுளிடம் அவர் பாதுகாப்பை உணர்கிறார். அந்த பாதுகாப்பின் மகிழ்ச்சியில் கடவுளைப் புகழ்கிறார். இந்த புகழ்ச்சி வெறும் உதட்டளவில் வந்த புகழ்ச்சி அல்ல. மாறாக, உள்ளத்தின் ஆழத்திலிருந்து வருகின்ற புகழ்ச்சி. கடவுளின் உண்மையான அன்பை...

LIVING IN REALITY

“He who will not take up his cross and come after Me is not worthy of Me.” –Matthew 10:38 Jesus is a real Person. He came from heaven to earth, and lived among human beings (Jn 1:14). During the three years of His public ministry, Jesus often had no place to lay His head and no home in which to sleep (Lk 9:58). He suffered rejection and intense persecution. He suffered physically and emotionally (Lk 19:41; Jn 19:33-35). Finally, He was unjustly condemned to death. For our salvation, He carried a real cross, was nailed upon it, and died for...

ஆண்டவரின் பெயரே நமக்குத்துணை

திருப்பாடல் 124: 1 – 3, 4 – 6, 7 – 8 இந்த திருப்பாடல் இஸ்ரயேல் மக்களுடைய வாழ்வை திரும்பிப்பார்க்கச் செய்கிற திருப்பாடல். நம்முடைய வாழ்வில், நமக்கு ஏணியாக இருந்து உயர்த்திவிட்ட மனிதர்களை நாம் மறக்கிறவர்களாக இருக்கிறோம். உயரத்திற்குச் சென்றவுடன், நம்மை ஏற்றி விட்டவர் நம் நினைவிலிருந்து அகன்று போய் விடுகிறார். அவரை நாம் ஒரு பொருட்டாகப் பார்ப்பதில்லை. ஆனால், அவர் இல்லையென்றால், நாம் இந்த நிலைக்கு வந்திருக்க முடியாது என்பது, நமது அறிவிற்கு எப்போதுமே எட்டாது. இந்த நிலை தான் திருப்பாடலிலும் வெளிப்படுகிறது. கடவுள் இஸ்ரயேல் மக்களின் வாழ்க்கையில் வந்திருக்காவிட்டால், அவர்கள் இந்த நிலையை அடைந்திருக்க முடியுமா? இந்த உயரத்தைத் தொட்டிருக்க முடியுமா? என்கிற கேள்விகளை, திருப்பாடல் ஆசிரியர் கேட்கிறார். ஒருவேளை ஆண்டவர் இல்லையென்றால், இஸ்ரயேல் மக்களை எதிரிநாட்டவர் அழித்தொழித்திருப்பார்கள். அவர்கள் இன்னும் நாடோடிகளாய்த்தான் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். யாரும் அவர்களை எதுவும் செய்துவிட முடியும் என்கிற நிலையில்...