Author: Jesus - My Great Master

ஆண்டவர் இப்பொழுதும் எப்பொழுதும் வாழ்த்தப்பெறுவாராக

திருப்பாடல் 113: 1 – 2, 3 – 4, 5 – 7 இன்றைய திருப்பாடல் வரிகள் அற்புதமான சிந்தனையைத் தூண்டக்கூடிய வரிகள். கடவுள் மீது நாம் வைத்திருக்கிற நம்பிக்கையை ஆழப்படுத்துகிற வார்த்தைகள். ஆண்டவரின் ஊழியர்களை கடவுளைப் புகழ்ந்து பாடுவதற்கு ஆசிரியர் அழைப்புவிடுக்கிறார். ஆண்டவரின் ஊழியா்கள் யார்? கடவுள் பணிக்காக தங்களது வாழ்வை அர்ப்பணித்தவர்களே கடவுளின் ஊழியா்கள். அந்த கடவுளின் ஊழியர்கள் சுயநலம் இல்லாதவர்கள். ஆண்டவருக்காகவே வாழ்கிறவர்கள். கடவுளின் ஊழியர்கள் இப்போது போற்றிக்கொண்டிருக்கிறார்கள். எதிர்காலத்திலும் இதே போற்றுதலை கடவுளுக்கு கொடுப்பார்களா? தெரியாது. சூழ்நிலைகள் அவர்களுடைய விசுவாசத்தை ஆட்டம் காணச் செய்யலாம். ஆனாலும், அவர்கள் எல்லா காலத்திலும் கடவுளைப் போற்ற வேண்டும் என்பதுதான் ஆசிரியரின் வேண்டுகோள். இப்போது மட்டுமல்ல, எல்லா காலத்திலும், வேளையிலும் கடவுளைப் போற்ற வேண்டும் என்கிற கோரிக்கையை ஆசிரியர் வைக்கிறார். நம்முடைய விசுவாசத்தை சூழ்நிலைகள் மாற்ற விடக்கூடாது. நாம் சூழ்நிலைக் கைதிகளாகவே இருக்கக்கூடாது என்பதுதான் இங்கே நமக்கு விடுக்கப்படுகிற...

WE ARE NOT WORTHY

“I thank Christ Jesus our Lord, Who has strengthened me, that He has made me His servant and judged me faithful.” –1 Timothy 1:12 It has now been nearly nineteen years since Fr. Al Lauer, the long-time author of One Bread, One Body, passed away. When the task of continuing this ministry fell to me, I was filled with an acute awareness of my own unworthiness. Nonetheless, when the Lord calls someone to a ministry or task, He provides special “graces of state that accompany the exercise of the responsibilities of the Christian life and of the ministries within the...

கடமையே கண் !

இன்றைய முதல் வாசகத்தில் (திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-2,12-14) நற்செய்தி அறிவிக்க வேண்டிய தன் கடமையைப் பற்றிப் பேசும்போது, பவுலடியார் நம் இதயத்தைத் தொடுகின்றார். நற்;செய்தி அறிவிப்பைப் பற்றிப் பேசும்போது, அவர் மூன்று செய்திகளைத் தருகின்றார்: நற்செய்தி அறிவிப்பது அவர்மேல் சுமத்தப்பட்ட கடமை. அதை அவர் நிறைவேற்றியே தீர வேண்டும். அது தன்னார்வத் தொண்டு அல்ல, மாறாக சுமத்தப்பட்ட கடமை. நற்செய்தி அறிவிப்பு என்பது ஓட்டப்பந்தயம் போன்றது. அதில் பங்கேற்பவர் வெற்றி ஒன்றையே இலக்காகக் கொண்டு ஓட வேண்டும். நற்செய்தி அறிவிப்பு என்பது குத்துச் சண்டை போன்றது. அதில் பங்கேற்போர் பலவிதமான பயிற்சிகளைச் செய்து தங்களைத் தகுதிப்படுத்திக்கொள்ளவேண்டும். பவுலடியார் தன்னைப் பற்றிப் பேசியது திருமுழுக்கு பெற்ற நம் அனைவருக்கும் பொருந்தும். நற்செய்தி அறிவிக்கும் கடமை நம் அனைவருக்கும் உரியது. அதை நாம் சுமக்க வேண்டும். வெற்றி ஒன்றையே இலக்காகக் கொண்டு ஓடவேண்டும். அதற்கான பல்வேறு...

A LIFESTYLE IN GOD’S WORD

“Let the word of Christ, rich as it is, dwell in you.” –Colossians 3:16 One reason we at Presentation Ministries publish One Bread, One Body is to encourage Catholics, and other Christians, to get into the Word of God. We pray that our readers would let the Word of Christ dwell in them (Col 3:16) to such an extent that they will bring God’s Word to many people who otherwise would never have received it. To let the Word of Christ dwell in you, do the following: Devour God’s Word; let it become your happiness and joy (Jer 15:16). Study...

பகைவரை அன்பு செய்வோம்

பகைவர்களை அன்பு செய்வது என்கிற சிந்தனையின் பொருள் பற்றி பல்வேறு விவாதங்கள், சந்தேகங்கள் அனைவரின் உள்ளத்திலும் எழுவது இயல்பு. அன்பு என்பதற்கு கிரேக்க மொழியில் பல அர்த்தங்கள் தரப்படுகிறது. பகைவருக்கு அன்பு என்பதன் பொருள், உள்ளத்திலிருந்து சுரக்கின்ற இரக்கம், நன்மைத்தனம். அதாவது, அடுத்தவர் எனக்கு என்ன தீங்கு இழைத்தாலும் பரவாயில்லை, நான் அவர்களின் நலம் மட்டுமே நாடுவேன் என்கிற உணர்வுதான் பகைவருக்கு காட்டுகின்ற அன்பு. நமது பெற்றோரை அன்பு செய்வது போலவோ, நமது உடன்பிறந்தவர்களை அன்பு செய்வது போலவோ, நமது உறவினர்களை அன்பு செய்வதுபோலவோ நாம் நமது பகைவரை அன்பு செய்ய முடியாது. இதுதான் உண்மை. நமது பெற்றோரை அன்பு செய்வதைப்போல நான் எனது பகைவரை அன்பு செய்யவே முடியாது. இது இயல்பானது. ஆனால், நமது பகைவரின் நலனை நாம் எப்போதும் நாட முடியும். நம்மை மற்றவர்கள் அவமானப்படுத்தலாம், நமக்கு தீங்கு செய்யலாம், நமது பெயரைக்கெடுக்கலாம். அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாது, அவர்களின் நலன்...