Author: Jesus - My Great Master
இரக்கத்தின் செபமாலை
இரக்கத்தின் செபமாலை ஆரம்பம் – பரலோக மந்திரம் மங்கள வார்த்தைச் செபம் விசுவாசப் பிரமாணம் பெரிய கற்களில் நித்திய பிதாவே !எமது பாவங்களுக்க்காகவும் உலகின் பாவங்களுக்க்காகவும் பரிகாரம் செய்யும் படியாக ………… உமது நேசக் குமாரனாகிய எமதாண்டவர் இயேசுக் கிறிஸ்துவின் உடலையும் இரத்தத்தையும் ஆன்மாவையும், தெய்வீகத்தையும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன் . சிறிய கற்களில் இயசுவின் துன்பகரமான பாடுகளை பார்த்து ……. எங்கள்மீது முழு உலகின் மீதும் இரக்கமாயிரும். முடிவு பரிசுத்த தேவனே! வல்லமை மிக்க பரிசுத்த தேவனே! நித்திய பரிசுத்த தேவனே! எங்கள் மீதும் இரக்கமாயிரும். (மூன்றுமுறை )
மாபெரும் இரக்கத்தின் நேரம்
மாபெரும் இரக்கத்தின் நேரம் “மூன்று மணி வேலையில் சிறப்பாக பாவிகளுக்காக எனது இரக்கத்தை மன்றாடு. என் பாடுகளை சிறப்பாக வேதனையின்போது எல்லாராலும் கைவிடப்பட்ட எனது நிலையை சிறிது நேரம் தியானித்து அந்த நினைவில் மூழ்கு “. அகில உலகுக்கும் மாபெரும் இரக்கத்தின் நேரம் இது. இந்த நேரத்தின் எனது பாடுகளின் பெயரால் இரந்து கேட்கும் ஆன்மாவின் எந்த வேண்டுதலையும் நான் மறுக்க மாட்டேன்.” செபம் இயேசுவே ! நீர் உயிர்வீட்டீர். ஆனால் உம்மிடமிருந்து உயிரின் ஊற்று ஆன்மாக்களுக்கு பீறிட்டெழுந்து அகில உலகிற்க்காகவும் இரக்கத்தின் கடல் திறக்கப்பட்டது. ஓ! வாழ்வின் சுவையை ஆலங்கானா தெய்வீக இரக்கமே ! நீர் உலகையும் அரவணைத்து உமது இரக்கம் முழுவதையும் என்மீது பொழிந்தருளும். இயேசுவின் இதயத்திலிருந்து எங்களுக்காக இரக்கத்தின் ஊற்றாக வழிந்தோடிய இரத்தமே ! தண்ணீரே! உம்மீது நம்பிக்கை வைத்திருக்கின்றேன்.