Author: Jesus - My Great Master

ஆண்டவர் தம் மக்களைத் தள்ளிவிடார்

திருப்பாடல் 94: 12 – 13அ, 14 – 15, 17 – 18 இஸ்ரயேல் மக்களின் வாழ்க்கையில் எல்லோரையும் போல ஏற்ற, இறக்கங்கள் நிறைந்திருந்தது. அவர்கள் வளமையிலும் வாழ்ந்தார்கள். அதேபோல துன்பங்களும் அவர்களுடைய வாழ்வை நிறைத்திருந்தது. இந்த துன்பமான நேரத்தில் இஸ்ரயேல் மக்களுக்கு எழுந்த மிக்ப்பெரிய கவலை, கடவுள் நம்மோடு இருக்கிறாரா? என்பது. கடவுள் நம்மைக் கைவிட்டு விட்டாரோ? கடவுள் நம்மை விட்டுவிட்டு சென்று விட்டாரோ? என்கிற கவலை அவர்களுடைய உள்ளத்தில் நிறைந்திருந்தது. இப்படிப்பட்ட கேள்விகளுக்கான விடை தான், இன்றைய திருப்பாடல். திருப்பாடல் ஆசிரியர் சொல்கிறார்: கடவுள் ஒருபோதும் தன்னுடைய மக்களை தள்ளிவிட மாட்டார். அதற்கு இரண்டு காரங்களை அவர் தெரிவிக்கிறார். முதல் காரணம், இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரால் தன்னுடைய திட்டத்தை நிறைவேற்றுவதற்காக தெரிந்தெடுக்கப்பட்ட மக்கள். அவர்கள் வழியாக இந்த உலகத்தை மீட்பதற்கும் ஆசீர்வதிப்பதற்கும் பணி இருக்கிறது. எனவே, கடவுள் அவர்களை ஒருபோதும் தள்ளிவிட மாட்டார். இரண்டாவது, இஸ்ரயேல் மக்கள்...

MISSION SUNDAY REVISITED

“I could even wish to be separated from Christ for the sake of my brothers, my kinsmen the Israelites.” –Romans 9:3-4 What causes you “great grief and constant pain”? (Rm 9:2) Paul’s grief and pain were due to the fact that not all the Jewish people had accepted Jesus as their Messiah, Lord, and God. Why would you make yourself a slave — even “the slave of all”? Some people make themselves slaves to alcohol, nicotine, other drugs, money, pornography, their businesses, fears, or anxieties. Paul decided to be “the slave of all so as to win over as many...

வேறெந்த இனத்திற்கும் அவர் இப்படிச் செய்யவில்லை

திருப்பாடல் 147: 12 – 13, 14 – 15, 19 – 20 கடவுள் இஸ்ரயேல் மக்களை எந்த அளவிற்கு அன்பு செய்து வந்திருக்கிறார் என்பதை, அவர்களுடைய வாழ்க்கை அனுபவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ளலாம். மற்ற நாட்டினர் இஸ்ரயேல் மக்களைப் பார்த்து பொறாமை கொள்ளக்கூடிய அளவிற்கு அவர்கள் இறைவனால் நிறைவாக ஆசீர்வதிக்கப்பட்டிருந்தார்கள். கடவுள் தன்னுடைய நீதிநெறிகளையும், நியமங்களையும் இஸ்ரயேல் மக்களுக்கு அறிவிக்கிறார். வேறெவர்க்கும் இந்த நியமங்கள் தெரியாது. ஒருவேளை அவர்களுக்குத் தெரிந்திருந்தால், அவர்கள் அதனைக் கடைப்பிடித்து கருத்தாய் கடவுள் முன்னிலையில் வாழ்ந்திருப்பார்கள். அவ்வளவுக்கு கடவுளின் நியமங்கள் நேர்மையானவை என்பது திருப்பாடல் ஆசிரியருடைய கருத்து. இஸ்ரயேல் மக்கள் கடவுளின் அன்பை வெகு எளிதானதாக எடுத்துக்கொண்டார்கள். அந்த அன்பின் ஆழத்தை அவர்களால் உணர முடியவில்லை. அவர்களால் உணரமுடியவில்லை என்பதை விட, உணரவில்லை என்பதுதான் உண்மை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் திருப்பாடல் ஆசிரியர் இஸ்ரயேல் மக்களைப் பார்த்து இந்த அறைகூவலை விடுக்கிறார். “எருசலேமே, ஆண்டவரைப் போற்றுவாயாக”....

CONSUMED BY ZEAL (SEE JN 2:17)

“You form a building which rises on the foundation of the apostles and prophets, with Christ Jesus Himself as the Capstone.” –Ephesians 2:20 Jesus selected twelve Jewish men to be His apostles. One of these is St. Simon, who was specifically identified as a Zealot (Lk 6:15), perhaps to distinguish him from Simon Peter, the leader among the apostles. Scholars debate whether Simon was a terrorist involved in inciting riots against the Romans, or was instead a religious Jew zealously devoted to the law of Israel. Simon certainly was passionate. St. Simon could appreciate the zeal of Jesus. He was...

சொல்லுமில்லை, பேச்சுமில்லை

திருப்பாடல் 19: 1 – 2, 3 – 4 அப்போஸ்தலர்களான புனித சீமோன், யூதா பெருவிழா இயற்கையின் சிறப்பை, கடவுளின் கைவண்ணத்தை திருப்பாடல் ஆசிரியர் புகழ்ந்து பாடுகிறார். மனிதர்கள் அதிகமாக பேசுகிறார்கள். தங்களை எப்போதும் உயர்வாகவே பேசுகிறார்கள். அவர்கள் தங்களுடைய வார்த்தைகளுக்கு அதிகமான முக்கியத்துவத்தைக் கொடுக்கிறார்கள். அவர்களுடைய செயல்பாடுகளை அவர்களின் பேச்சோடு ஒப்பிட்டுப் பார்க்கிறபோது, சொற்கள் தான் அதிகமாக இருக்கிறது, செயல்பாடுகள் சொல்லக்கூடிய அளவில் இல்லை. திருப்பாடல் ஆசிரியர் இயற்கையிடமிருந்து கற்றுக்கொள்ளக்கூடிய பாடமாக நமக்கு மிகப்பெரிய செய்தியைத் தருகிறார். இயற்கைக்கு சொல்லுமில்லை, பேச்சுமில்லை. ஆனால், தங்களுடைய செயல்பாடுகளால் அவை கடவுளின் மாட்சிமையை பறைசாற்றுகின்றன. கடவுளுக்கு தங்களது நன்றியுணர்வை எடுத்துரைக்கின்றன. கடவுளைப் பற்றிப்பிடித்துக் கொண்டு, கடவுள் தங்களுக்கு கட்டளையிட்டவாறே பணிகளைச் செய்து முடிக்கின்றன. தாங்கள் செய்ய வேண்டிய பணிகளை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்து முடிக்கின்றன. அவற்றைச் செய்து முடிப்பதில் மகிழ்ச்சி கொள்கின்றன. நம்முடைய வாழ்வில், நாம் பேசுகிற வார்த்தைகளைக் குறைத்துக்கொண்டு...