Author: Jesus - My Great Master

உமது பேரன்பால் என்னை விடுவித்தருளும்

திருப்பாடல் 31: 4 – 5, 13, 14 – 15, 16 தாங்க முடியாத துன்பத்தில் இருக்கிற ஒரு நம்பிக்கையாளரின் செபம் தான் இந்த திருப்பாடல். துன்பங்களுக்கான காரணத்தை அவரே ஏற்றுக்கொள்கிறார். அவர் செய்த தவறுகள் தான், இப்போது துன்பங்களாக அவர் முன்னிலையில் வந்திருக்கிறது. கடவுளை விட்டு விலகிய அவரது தவறு தான், இன்றைக்கு மிகச்சிக்கலான கண்ணியில் அவரை சிக்க வைத்திருக்கிறது. இந்த சிக்கலிலிருந்து தன்னை விடுவிக்கக்கூடியவர் கடவுள் மட்டும் தான், என்று அவர் தீவிரமாக நம்புகிறார். அந்த நம்பிக்கையை செபமாக எழுப்புகிறார். கடவுளிடத்தில் அவருடைய அருளை வேண்டுவதற்கு தகுதியில்லாத நிலையில் இருப்பதாக, ஆசிரியர் நினைக்கிறார். ஏனென்றால், கடவுளின் அன்பையும், இரக்கத்தையும் மறந்து அவர் வாழ்ந்திருக்கிறார். இப்போது கடவுளிடத்தில் தேவைக்காக திரும்பி வந்திருக்கிறார். அவர் கடவுளின் அருளைப் பெற தகுதியற்ற நிலையில் இருக்கிறார். தகுதியற்ற நிலையில் இருக்கிற அவருக்கு, கடவுள் தன்னுடைய அன்பை வழங்கினால் மட்டும் தான், இந்த துன்பத்திலிருந்து...

“BE RECONCILED TO GOD!” (2 COR 5:20)

“Come now, let us set things right, says the Lord: though your sins be like scarlet, they may become white as snow.” –Isaiah 1:18 The Pharisees and Sadducees had hearts for their own honor (see Mt 23:6). Before Jesus chastised them for their pride, He wept over them, lamenting that in their desire for honors, they had completely missed “the path to peace” (Lk 19:42). Moreover, their pride caused them to be badly misled and fail to understand the power of God (Mk 12:24). God’s plan is to touch the hearts of sinful men and women with self-sacrificing, humble love....

தம் வழியைச் செம்மைப்படுத்துவோர் கடவுளின் மீட்பைக் கண்டடைவர்

திருப்பாடல் 50: 8 – 9, 16 – 17, 21, 23 சரியான பாதையில் நடக்கிறவர், தமது வழியைச் செம்மைப்படுத்துகிறவர் யார்? என்பது தான், இந்த பல்லவியைக் கேட்டவுடன் நமது சிந்தனையில் உதிப்பதாக இருக்கிறது. ஏனென்றால், அந்த கேள்விக்கான பதில் நமக்கு கிடைக்கிறபோது, நம்மால், கடவுள் அருளும் மீட்பைக் கண்டடைய முடியும். எசாயா 40: 3 ல், ”ஆண்டவருக்காக பாதையைச் செம்மையாக்குங்கள்” என்ற வேண்டுகோள் விடுக்கப்படுகிறது. இது மனமாற்றத்தைக் குறிக்கக்கூடிய சொல்லாகப் பார்க்கப்படுகிறது. இந்த இறைவார்த்தையை, திருமுழுக்கு யோவானுடைய பணியை மையப்படுத்திய நிகழ்விலும் நாம் பார்க்கலாம். ஆக, செம்மைப்படுத்துதல் என்பது, மனமாற்றத்தைக் குறிக்கிறது. கடவுள் நமக்கு மீட்பை தர தயாராக இருக்கிறார். அந்த மீட்பை நாம் பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால், நமது வாழ்வை நாம் மாற்ற வேண்டும். மாற்றம் என்பது நமது வாழ்க்கையில் மற்றவர்கள் பார்க்கக்கூடிய வகையில் அமைந்திருக்க வேண்டும். அது வெளிவேடத்தனமாக இருக்கக்கூடாது. மாறாக, மற்றவர்கள் நடுவில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக...

FORGIVE TO GIVE

“Give, and it shall be given to you.” –Luke 6:38 When we give, we open the door to let the Lord lavish His love on us. The Lord desires to bless us “good measure pressed down, shaken together, running over” (Lk 6:38). Yet He does not force His love on us. We must open up to His love. By giving, we tell God how open we are to receiving. “For the measure you measure with will be measured back to you” (Lk 6:38). Most people think of themselves as “generous,” but this is often not completely accurate. The financial problems...

அவருக்குரிய ‘ஒன்று’

லூக் 6 : 36 -38 இத்தவக்காலத்தில் மட்டுமல்லாது நம் ஒவ்வொரு ஆன்மீக முயற்சியும் பயிற்சியும் நம்மை புனித நிலைக்கு அழைத்துச் செல்வதே குறியாக இருக்கின்றது. கடவுள் நிலையிலிருந்து மனித நிலைக்கு தன்னை தாழ்த்தி இவ்வுலகிற்கு வந்த இறைமகனின் நோக்கமே, மனித நிலையிலிருந்த நம்மை அவருடைய மாண்புமிக்க, மாட்சிமிகுநிலைக்கு உயர்த்துவதே. புனித அத்தனாசியூஸ், “நாம் அனைவரும் அவரின் தெய்வீகத்தில் பங்கு பெறவே அவர் மனிதரானார்.” ;என்கிறார். பாவத்தைத்தவிர அனைத்திலும் அவர் நம்மைப்போலவே சோதிக்கப்பட்டார் (எபி 4:15) என்று இறைவார்த்தையும் கூறுகின்றது. திருப்பலியில் திருத்தொண்டர் சொல்லக்கூடிய முக்கியமான செபங்களில் ஒன்று இயேசு மனிதனாக வந்த நோக்கத்தை எடுத்துக்கூறுவதாக அமைக்கின்றது. காணிக்கைப் பொருட்களை திருப்பலியில் படைக்கும் பொழுது இரசத்தோடு ஒரு சொட்டு நீரினை சேர்க்கும் பொழுது திருத்தொண்டர் பின்வருமாறு கூறுவார், “கிறிஸ்து நமது மனித இயல்பில் பங்கு கொள்ள திருவுளம் ஆனார். இத்தண்ணீர், இரசம் இவற்றின் மறைபொருள் வழியாக நாமும் அவருடைய இறையியல்பில் பங்கு...