Monthly Archive: April 2020

வார்த்தையே வாழ்வு

யோவான் 8: 51-59 உண்மைக்கு சான்று கூறவே இயேசு வந்தார். உண்மையைக் கூறியதால் அவரைச் சிலுவையில் அறைந்துக் கொன்றார்கள். “ஆபிரகாம் பிறப்பதற்கு முன்பே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்கு சொல்லுகிறேன்” என்றதால் அவர்மேல் கல் எறிய கற்களை எடுத்தார்கள் என்று இன்றைய நற்செய்தியில் வாசிக்கின்றோம். இயேசுவின் இந்த வார்த்தையை யூதர்களால் ஜீரணிக்க முடியவில்லை. மத்தேயு இயேசுவின் மூதாதையர் பட்டியலை ஆதாமில் முடிக்கிறார் (ஏறுவரிசை) ஆனால் யோவான் நற்செய்தியாளரோ இயேசுவின் உடனிருப்பை இவ்வுலகப்படைப்பின் தொடக்கத்திலிருந்தே இருப்பதை நம் கண்முன் கொண்டுவருகிறார். “தொடக்கத்தில் வாக்கு இருந்தது அவ்வாக்கு கடவுளோடு இருந்தது, அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது,” (யோவான் 1:1) இந்த வார்த்தை மனிதனாகிப் பேசிய பொழுது வல்லமையுள்ள வாழ்வளிக்கும் வார்த்தையாகவே இருந்தது. இதையே இயேசு “என் வார்த்தையைக் கடைபிடிப்போர் என்றுமே சாகமாட்டார்கள்” என்கிறார். நாம் வார்த்தையானக் கடவுளை வாழ்வாக்குவோம். அவரினைப்பற்றி இன்னும் அதிகம் அறிய, உணர இறைவார்த்தையை தினமும் வாசிப்போம். நம்முடைய அனைத்துப் பிரச்சனைகளிலும்...

ARE YOU FATHER-CHALLENGED?

“They did not grasp that He was speaking to them of the Father.” —John 8:27 Here’s a quick quiz from the Gospels of last week’s Masses. Who is Jesus talking about? Today: “I only tell the world what I have heard from Him, the Truthful One Who sent me” (Jn 8:26). Yesterday: “You know neither Me nor My ______. If you knew Me, you would know My ______ too” (Jn 8:19). Friday: “I was sent by One Who has the right to send, and Him you do not know. I know Him, because it is from Him I come: He...

உண்மையா?

யோவான் 8: 31-42 “உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும்” -இதை இன்றைய தேர்தல் நெருங்குகிற சூழலில் சொன்னால் கண்டிப்பாக அனைவரும் சிரித்துவிடுவர். “உண்மையா அது என்ன” என்று பிலாத்து கேட்டதுப் போலதான் நாம் அனைவரும் கேட்போம். காரணம் யார் அதிகமாக பொய்க்கூறி ஏமாற்றுவார்களோ அவர்களே சிறந்தவர்கள், தலைவர்கள் ஆகுகிறார்கள். காரணம் இன்றைய உலகம் உண்மைப் பேசுபவர்களைவிட பொய் பேசுபவர்களுக்கே அதிகம் முக்கியத்துவம் தருகிறது. மசாலா தடவிப் பேசுபவர்களை உடனடியாக நம்புகிறது. பல வருடங்களாக மாற்றாத, பொய்யான தேர்வு வரைவினை இன்றுவரை கட்சிகள் வெளியிடுவது நாம் எவ்வளவு பொய்யானாலும் நம்புவோம் என்பதை அவர்கள் உணர்ந்து இருக்கிறார்கள். உண்மை ஊனமாகி விட்டது இவ்வுலகினில். ஆனால் இவ்வுலகில் இயேசுவின் வார்த்தையில் நிலைத்திருப்பவன் உண்மையை உணர்கின்றான். அது அவனுக்கு விடுதலை அளிக்கும், எதையும் தனது இயல்பான நாட்டத்தின் வழியே, செய்ய வேண்டியதை மனத்திடத்துடன் செய்வதே உண்மையான விடுதலையாகும். அத்தகைய உரிமை வாழ்வுக்கே இயேசு நம்மை அழைக்கிறார். அதையம்...