பகிர்ந்து வாழ்வோம்

பேராசை பிடித்த மனிதர்கள் கூட்டம் இந்த உலகத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. எங்கு பார்த்தாலும் பேராசை. உடன்பிறந்த சகோதரர்கள் மத்தியில், நண்பர்கள் மத்தியில் எங்கும் பேராசை என்கிற தீய பண்பு தலைவிரித்தாடுகிறது. இந்த பேராசை பிடித்த உலகில், நாமும் மற்ற மனிதர்களோடு சேர்ந்து பேராசை பிடித்தவர்களாக மாறிவிடுகிறோம். இத்தகைய பேராசை எண்ணத்திலிருந்து விடுபட நாம் அனைவருமே அழைக்கப்படுகிறோம்.

இந்த உலகத்தில், ஏழைகளுக்கும், பணக்காரர்களுக்கும் இருக்கிற மிகப்பெரிய இடைவெளிக்கு இந்த பேராசை தான் காரணமாக இருக்கிறது. ஏழைகள், ஏழைகளாகவே மாறிக்கொண்டிருக்கிறார்கள். பணக்காரர்களோ தங்களது பேராசை எண்ணத்தினால், செல்வங்களைச் சேர்ப்பதில் தங்கள் வாழ்வை வீணாக்கிக்கொண்டிருக்கிறார்கள். தங்களது தேவைக்கு போக, மீதமிருப்பது அனைத்துமே நமக்கானது அல்ல. அது மற்றவருடையது. அது மற்றவர்களிடமிருந்து கொள்ளையடிப்பதை விட கேவலமானது. அந்த தவறைத்தான் அறிவற்ற செல்வந்தன் செய்கிறான். நாம் சேர்த்து வைப்பது அனைத்துமே, மற்றவருக்கான என்கிற எண்ணமில்லாமல் வாழ்ந்ததால், அறிவற்ற செல்வந்தன், தனக்கான தண்டனையைப் பெற்றுக்கொள்கிறான்.

இறைவன் நமக்கு பல கொடைகளை வழங்கியிருக்கிறார். அந்த கொடைகளை நாம் நமக்கென்று மட்டும் பயன்படுத்தாமல், மற்றவர்களுக்கும் பயன்படுத்தும் திறந்த மனதை கடவுள் நமக்குத் தந்தருள இறைவனிடம் வரம் வேண்டுவோம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.